நடிகர் கதிரவன் தூய்மை பணிக்காக டாடா ஏசி கோல்டு குப்பை வண்டி இலவசமாக வழங்கினார்!
சரவண சுப்பையா இயக்கிய மீண்டும் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர் நடிகர் கதிரவன். இவர் கானத்தூர் பகுதியில் கழிவுகள் அள்ள வண்டிகள் இல்லாததால் அப்பகுதி முழுக்க துர்நாற்றம் வீசி அசுத்தமாக காணப்பட்டது.
இதனால் பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு நடிகர் கதிரவன் தூய்மை பணிக்காக டாடா ஏசி கோல்டு குப்பை வண்டி ஒன்றை இலவசமாக வழங்கினார்.அத்துடன் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவியும், மற்றும் பல உதவிகளையும் கலப்பை மக்கள் இயக்கத்துடன் இணைந்து செய்து வருகிறார்.
















