full screen background image
Search
Sunday 31 May 2026
  • :
  • :

“பிட்ஸ்டாப் ரைடர்ஸ் கிளப்” பொதுமக்களுக்கு இலவச தலை கவசம் வழங்கினர்

ஆவடி பொது காவல் மற்றும் போக்குவரத்துக்கு காவல் துறையுடன் இனைந்து பிட்ஸ்டாப் ரைடர்ஸ் இரு சக்கர வாகனம் ரைடர் கிளப் , இன்று காலை தலை கவசம் முக்கியத்துவம் குறித்து மாபெரும் வாகன பேரணி* ஆவடியில் நடைபெற்றது

இதை ஆவடி போக்குவரத்துக்கு உதவி ஆணையர் திரு ராமசந்திரன் கொடி அசைத்து துவங்கிவைதார்,
அவருடன் T6 ஆவடி டிராபிக் இன்ஸ்பெக்டர் திரு கோதண்டன், டிராபிக் வார்டன் மற்றும் சீனியர் டூட்டி பிளானிங் ஆஃபீஸ்ர் திரு பத்மநாபன் அவர்கள் தலைகவசம் பற்றி விழிப்புணர்வை உணர்த்தும் வகையில் இந்த மாபெரும் பேரணியை துவைக்கிவைத்தனார்,

இதில் 50கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பங்கேற்றன, 100சிசி முதல் 1300 சிசி திறன் கொண்ட வாகனம் பங்கேற்றது,
வாகனம் வரிசையாக வளம் வரும் காட்சி மக்களை ஈர்தது,

காவலர்கள் பொதுமக்களுக்கு இடையூர் இல்லாதவறு கவனித்து பேரணியை கையாண்டானர்,

இறுதியில் தலைக்கவசம் இல்லாத நபருக்கு தலைக்கவசம் இலவசமாக பிட்ஸ்டாப் ரைடர்ஸ் குழு வழங்கினர்,

இது தலைக்கவசம் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது,

மக்கள் இதை நன்கு வரவேர்த்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *