அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.
ஒரு நல்ல நடைமுறை வாழ்க்கையைப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன் ” ஆகாயம் ” படம் குறித்து இயக்குனர்
தினந்தோறும் நாகராஜ்.
டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரித்துள்ள புதிய திரைப்படத்திற்கு “ஆகாயம் ” என்று பெயரிட்டுள்ளனர்.
“தினந்தோறும்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தினந்தோறும் நாகராஜ், அதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களாலும், திரையுலகினராலும் அந்தப் பெயரிலேயே அன்புடன் அழைக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய “மின்னலே”, “காக்க காக்க” போன்ற வெற்றிப் படங்கள் உட்பட பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.
அவர் தற்போது “ஆகாயம்” திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
“கன்னி மாடம்” திரைப்படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் அனைவரின் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார்.
மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், “மெய்யழகன்” படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன், தீபா, “மகாராஜா” திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“சென்னை டு சிங்கப்பூர்”, “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் நல்லமுத்து, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“நீர்ப்பறவை”, “அயோத்தி” உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்க,
பாடல்களை “நூறு சாமிகள் இருந்தாலும்” என்ற பிரபலமான அம்மா பாடலை எழுதிய ஏக்நாத், மற்றும் “காற்றோடு பட்டம் போல”, “நீலோத்தி” உள்ளிட்ட ஹிட் பாடல்களை எழுதிய சாரதி மற்றும் ரமணிகாந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
“ஒரு நொடி”, “ஜென்ம நட்சத்திரம்” ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சூர்யா, இப்படத்தின் எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார்.
சண்டைப் பயிற்சியை பையர் கார்த்திக் அமைத்துள்ளார்.
நடன அமைப்பாளராக மணிகண்டன் பணியாற்றுகிறார்.
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்
தயாரிப்பு மேற்பார்வை : பிரசாந்த்
தயாரிப்பு : ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் – தினந்தோறும் நாகராஜ்.
படம் பற்றி இயக்குனர் தினம்தோறும் நாகராஜ் பகிர்ந்தவை…
“கதையாகச் சொன்னால் ‘ஆகாயம்’ குடிக்கு எதிரான படம். ஆனால், அதை உயிர்த்துடிப்பான ஒரு வாழ்க்கையோடு சொல்லியிருக்கிறேன். தவிர இதில் அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து வந்திருக்கின்றன.
படங்கள் அனுபவங்களைத் தந்து, வாழ்க்கைக்குள் நுழைந்து நல் உணர்வுகளைத் தர வேண்டும். அப்படி ஒரு சினிமா செய்வதுதான் நமக்கு கௌரவம். நான் அதைத்தான் செய்திருக்கிறேன்.
‘ஆகாயம்’ அப்படியான படம். ஒரு நல்ல நடைமுறை வாழ்க்கையைப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன் என்றார் இயக்குனர் தினந்தோறும் நாகராஜ்.
In the modern film ecosystem, a movie’s lifespan is no longer defined strictly by its time in cinema halls. Case in point: GDN, the biographical drama chronicling the life of legendary Indian inventor and industrialist G.D. Naidu, which has transitioned from a steady theatrical run into an international streaming phenomenon.
Led by R. Madhavan alongside a star-studded ensemble featuring Sathyaraj, Jayaram, Priyamani, and Dushara Vijayan to name a few, the film originally landed in theaters on August 7. Fueled by strong critical praise and robust word-of-mouth highlighting Madhavan’s compelling portrayal of the “Edison of India,” GDN maintained a resilient four-week theatrical run. Viewers were drawn to its detailed period setting and its sharp dramatization of Naidu’s defiance against colonial-era barriers to build indigenous technology.
The film’s commercial second act began when it premiered on Netflix on September 4. Within a week of its OTT release across multiple regional languages, the grassroots enthusiasm that sustained its theatrical run exploded exponentially on digital screens. Continued word-of-mouth propelled the biographical feature straight into the Top 2 trending movies in India, quickly becoming one of the most talked-about titles on the platform.
The momentum did not stop at home borders. GDN has rapidly broken into the Netflix Global Top 10 movies, finding strong viewership across the international diaspora and global moviegoers alike. The film is currently holding steady in the Top 5 rankings in multiple countries, including the United Arab Emirates, Sri Lanka, Singapore, Pakistan, and Bahrain.
Industry analysts point to GDN as a prime example of high-concept, biography-driven Indian cinema finding a global audience via streaming platforms. While strong reviews gave the film a solid initial start in theaters, its explosive premiere on Netflix underscores how digital platforms give compelling stories a second—and often much larger—world stage.
நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்.’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது!
இன்றைய நவீன சூழலில், ஒரு திரைப்படத்தின் ஆயுட்காலம் என்பது இனி திரையரங்குகளில் அது ஓடும் காலத்தால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக, பழம்பெரும் இந்திய கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘ஜி.டி.என்.’ அமைந்துள்ளது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது சர்வதேச அளவில் ஓடிடி தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படமாக மாறியுள்ளது.
ஆர். மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்க நடிகர்கள் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜி.டி.என்.’ திரைப்படம், விமர்சகர்களின் பாராட்டுகளாலும், ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடுவாக மாதவனின் சிறப்பான நடிப்பைப் பாராட்டிய ரசிகர்களின் வாய்மொழிப் பரிந்துரைகளாலும் நான்கு வாரங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
ஜி.டி. நாயுடுவின் காலத்திற்கே ரசிகர்களை அழைத்து சென்ற படத்தின் விரிவான காலக்கட்டமும் பின்னணியும், காலனித்துவ ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக தடைகளை எதிர்த்து நின்ற ஜி.டி. நாயுடுவின் துணிச்சலான செயல்பாடுகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
செப்டம்பர் 4ஆம் தேதி இந்த திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானபோது, வர்த்தக ரீதியிலான இதன் இரண்டாவது அத்தியாயம் தொடங்கியது. பல்வேறு பிராந்திய மொழிகளில் ஓடிடியில் வெளியிடப்பட்ட ஒரு வாரத்திற்குள், திரையரங்குகளில் படத்திற்குக் கிடைத்த ரசிகர்களின் ஆதரவு டிஜிட்டல் திரைகளிலும் பல மடங்கு அதிகரித்தது. தொடர்ந்து கிடைத்த வாய்மொழிப் பாராட்டுகளால், இப்படம் இந்தியாவில் அதிகம் டிரெண்டாகும் திரைப்படங்களின் பட்டியலில் டாப் 2 இடங்களுக்குள் முன்னேறியது. இதன் மூலம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் அதிகம் பேசப்படும் திரைப்படங்களில் ஒன்றாக ‘ஜி.டி.என்.’ மாறியது.
இந்த வெற்றி இந்திய எல்லைகளுடன் நின்றுவிடவில்லை. ‘ஜி.டி.என்.’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமும், உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்களிடமும் இப்படம் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.
தற்போது ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, சிங்கப்பூர், பாகிஸ்தான் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகளில் டாப் 5 தரவரிசைக்குள் இப்படம் இடம்பெற்றுள்ளது.
தொழில்துறை ஆய்வாளர்களின் கருத்துப்படி, வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட, வலுவான கதைக்களம் கொண்ட இந்தியத் திரைப்படங்கள் ஸ்ட்ரீமிங் தளங்கள் மூலம் உலகளாவிய ரசிகர்களைச் சென்றடைய முடியும் என்பதற்கு ‘ஜி.டி.என்.’ ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது என்கின்றனர்.
வலுவான விமர்சனங்கள் இப்படத்திற்கு திரையரங்குகளில் சிறப்பான தொடக்கத்தை வழங்கிய நிலையில், நெட்ஃபிளிக்ஸில் கிடைத்த அபாரமான வரவேற்பு, டிஜிட்டல் தளங்கள் நல்ல கதைகளுக்கு இரண்டாவது வாய்ப்பை மட்டுமல்லாமல், பல நேரங்களில் மிகப் பெரிய உலகளாவிய மேடையையும் வழங்குகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!
காதலின் வலியையும் காதலியின் பெருமையையும் பேசும் மனதை வருடும் மெலடி – “கல்லா நிக்கிறியே”!
முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா நிக்கிறியே” வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “கல்லா நிக்கிறியே” பாடலுக்கு பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வரிகளை எழுதியுள்ளார். பாடலை சித் ஸ்ரீராம் தனது தனித்துவமான குரலில் பாடியுள்ளார்.
முதல் சிங்கிளான “ஆசை வரமே” காதலின் நெருக்கத்தையும், இனிமையான காதல் தருணங்களையும் அழகாகப் பதிவு செய்திருந்த நிலையில், “கல்லா நிக்கிறியே” காதலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகிறது. காதலின் வலி, காதலியின் பெருமை, பிரிவின் ஏக்கம் என உணர்வுகளை தாங்கி நிற்கும் இப்பாடல், காதல் உலகிற்குள் கேட்பவர்களை மெல்ல இழுத்துச் செல்கிறது.
கார்த்திக் நேத்தாவின் வரிகள் காதலின் ஆழமான உணர்வுகளை அழகாகக் கடத்த, கோவிந்த் வஸந்தாவின் இசை அந்த உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது. குறிப்பாக சித் ஸ்ரீராமின் உணர்வுப்பூர்வமான குரல், பாடலின் ஒவ்வொரு வரியையும் மனதுக்குள் ஊடுருவச் செய்கிறது. காதலின் வலியை உணர்ந்தவர்களின் மனதில் இப்பாடல் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பாடலுடன் வெளியாகியுள்ள விஷுவல்களும் கூடுதல் கவனம் ஈர்க்கின்றன. இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா மற்றும் பாடகர் சித் ஸ்ரீராம் இடம் பெறும் காட்சிகளுடன், ‘அன்பில் அவன்’ படத்தின் அழகான காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. பாடலின் உணர்வுகளோடு படத்தின் விஷுவல்களும் ஒன்றிணைவதால், “கல்லா நிக்கிறியே” பாடலை மீண்டும் மீண்டும் பார்க்கவும் கேட்கவும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர்.கே. செல்வா கவனிக்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Produced by *Jayachandran Karthika Devi*
🌟 Starring: *SriRamKarthik,Aalisha Mirani, Sheela, Kanikha, Santhana Bharathi, JayaParakash, Giri Duwarkish, Sri Deva Krishnan, Indhu Manikandan , Deepa Akka, Maharaja Sanjana Nameethas* and Others.
A *N.R. RaguNandhan musical* 🎹
அன்பால் தான் விஜய் முதல்வரானார் – ஆகாயம் பட விழாவில் தினம்தோறும் நாகராஜ்!!
கீழே சென்றாலும் ஒருவரால் மீண்டும் மேலே வர முடியும் என்பதற்கு நாகராஜ் மிகப்பெரிய உதாரணம் – அஜயன் பாலா !!
நாகராஜ் போல் என்னால் கதை சொல்ல முடியாது – இயக்குநர் சசி !!
‘ஆகாயம்’ – இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது!
டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர்கள் சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இயக்குநர் தினந்தோறும் நாகராஜ்
தற்போது ‘ஆகாயம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ள அவர், இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதியுள்ளார்.
இன்றைய விழாவில்
தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் பேசியதாவது..,
“இது என்னுடைய முதல் மேடை என்பதால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. ‘ஆகாயம்’ படத்தின் டிரைலர், பாடல்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மீடியாவின் ஒரு செய்தி அல்லது கருத்து ஒரு விஷயத்தையே ஒரே நாளில், சில நேரங்களில் ஒரு நொடியில் கூட மாற்றக்கூடியது. அந்த மீடியாவை நம்பித்தான் என்னுடைய முதல் படைப்பை உங்களிடம் கொடுத்திருக்கிறேன். இந்தப் படத்திற்கு உங்கள் வாழ்த்தும் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.
எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது..,
“தினந்தோறும் நாகராஜை நான் சுமார் 25 ஆண்டுகளாக நண்பராக அறிந்திருக்கிறேன். பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது அவர் கதை சொல்லும் விதம் என்னை மிகவும் வியக்க வைத்தது. ஒவ்வொரு காட்சியையும் கண்முன்னே நடப்பது போல் மிக நுணுக்கமாக விவரிப்பார். அந்தக் காலகட்டத்தில் நாங்கள் அனைவரும் அவரைச் சுற்றி இருந்து, அவர் கதை சொல்வதைக் கேட்பதற்காக ஆர்வத்துடன் காத்திருப்போம். அந்த அளவுக்கு அவரது கதை சொல்லும் திறமை எங்களை வசீகரித்தது” என்றார்.
மேலும், “‘தினந்தோறும்’ திரைப்படம் வெளியான முதல் நாளில், திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, ரசிகர்கள் நாகராஜை தூக்கிக் கொண்டாடியதை என் கண்முன்னே பார்த்தேன். அன்றைக்கு நாகராஜ் மிகப்பெரிய இடத்தைப் பிடிப்பார் என்று நாங்கள் அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், அதன்பிறகு நடந்தது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று. வாழ்க்கையில் ஒருவர் எவ்வளவு கீழே செல்ல முடியுமோ, அந்த அளவுக்கு நாகராஜ் சென்றார். அவருடைய திறமை இருந்தும், தனது திறமையைப் பற்றி அவர் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை” என்று கூறினார்.
தொடர்ந்து, “நாங்களும் சசியும் கூட ஒரு கட்டத்தில் நாகராஜ் முடிந்துவிட்டார் என்றுதான் நினைத்தோம். ஆனால், எவ்வளவு கீழே சென்றாலும் ஒருவரால் மீண்டும் மேலே வர முடியும் என்பதற்கு நாகராஜ் மிகப்பெரிய உதாரணமாக இருக்கிறார். ஒருகாலத்தில் நாங்கள் ஹீரோவாகப் பார்த்த நாகராஜ், இன்று மீண்டும் தனது படைப்புடன் வந்திருக்கிறார். இந்த விழா மற்றவர்களுக்கு ஒரு சாதாரண விழாவாக இருக்கலாம்; ஆனால் நாகராஜைப் பொறுத்தவரை இது ஒரு புதிய பிறப்பு போன்றது” என்றார். படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் பாலசேகர் பேசியதாவது..,
“நாகராஜ் அண்ணாவை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்தேன். பார்த்தவுடனேயே அவரது பேச்சு, பழகும் விதம், கதை சொல்லும் திறன், காட்சிகளை விவரிக்கும் விதம் என அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்தது. சினிமாவில் எனக்கு குரு என்று யாரையாவது சொல்ல வேண்டும் என்றால் அது நாகராஜ் அண்ணா மட்டும்தான். அவரிடமிருந்து வசனம், மாடுலேஷன், கதை சொல்லும் விதம் என நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக, அவரது படங்களில் பெண் கதாபாத்திரங்களையும், பெண்களுக்கான வசனங்களையும் மிகவும் நாகரிகமாகவும் கச்சிதமாகவும் அமைத்திருப்பார்” என்றார்.
மேலும், “‘தினந்தோறும்’ படத்தில் நாகராஜ் சார் நடித்த கதாபாத்திரம் தெலுங்கில் ‘மனிஷி’ என்ற பெயரில் வெளியானது. அந்தப் படத்தில் அவருடன் நடித்தவர்தான் இன்று மிகப்பெரிய ஹீரோவாக இருக்கும் ரவிதேஜா. அந்த அளவுக்கு மிகப்பெரிய பெயர் பெற வேண்டிய திறமை கொண்டவர் நாகராஜ் சார். இடையில் அவரது வாழ்க்கையில் சில விஷயங்கள் நடந்தாலும், அவர் சினிமாவை மட்டும் ஒருபோதும் கைவிடவில்லை. சினிமா ஒருவரை கடைசி வரை கைவிடாது என்பதற்கு நாகராஜ் சாரே மிகச் சிறந்த உதாரணம். இன்று ‘ஆகாயம்’ படத்தை உருவாக்கி அனைவரையும் அழைத்து அமர வைத்திருப்பதைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து, “நாகராஜ் சாரின் திறமையை மட்டுமே பார்த்து இந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் ஜெயச்சந்திரன் சாருக்கும் கார்த்திகா தேவி அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். மற்ற துறைகளில் அனுபவமுள்ளவர்களைத் தேடிப் பார்க்கிறோம்; ஆனால் சினிமாவில் மட்டும் அனுபவம் வாய்ந்தவர்களைத் தவிர்ப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அதைத் தாண்டி நாகராஜின் திறமையை நம்பி அவரைத் தேர்ந்தெடுத்தது பாராட்டுக்குரியது. அவரது படங்களில் எப்போதும் சமூக அக்கறையும், சமூக விஷயங்களைப் பேசும் வசனங்களும் இருக்கும். சும்மா ஒரு படத்தை உருவாக்காமல், ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்பார். அவரது வாழ்க்கையில் அவருக்கு துணையாக இருந்த குடும்பத்தின் ஆதரவும் மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறது. ‘ஆகாயம்’ மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்; நாகராஜ் சார் மீண்டும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும்” என்று வாழ்த்தினார்.
இயக்குநர் சற்குணம் பேசியதாவது..,
“‘ஆகாயம்’ படத்தின் தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி எனது தம்பியும், உறவினரும் ஆவார். எங்கள் இரண்டு குடும்பங்களுக்கும் நீண்ட காலமாக நெருங்கிய உறவு உள்ளது. தனது முதல் தயாரிப்பாக ‘ஆகாயம்’ படத்தை உருவாக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள தம்பியை தமிழ் சினிமா சார்பாக வரவேற்று வாழ்த்துகிறேன்” என்றார்.
மேலும், “‘தினந்தோறும்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த தினந்தோறும் நாகராஜ், ‘ஆகாயம்’ படத்தின் மூலமாகவும் அனைவரையும் தன்னைப் பற்றி பேச வைக்க வேண்டும். இந்தப் படம் அவருக்கு மீண்டும் ஒரு முக்கியமான வெற்றியாக அமைய வேண்டும்” என்று வாழ்த்தினார்.
இசையமைப்பாளர் ரகுநந்தன் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள், ஸ்ரீராம் கார்த்திக் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் “‘ஆகாயம்’ படத்தின் வெற்றி ஆகாயம் போல உயரமாக இருக்கட்டும்” அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள்.
நடிகர் ஶ்ரீராம் கார்த்திக் பேசியதாவது..,
“நாகராஜ் சார் போன்ற ஒரு பெரிய இயக்குநருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இந்த கதாபாத்திரத்தை எவ்வளவு நேசித்து உருவாக்கியிருக்கிறார் என்பதை அவர் ஸ்கிரிப்ட் சொல்லும்போதே உணர்ந்தேன். படப்பிடிப்பின் கடைசி நாளில் கூட, நான் அவர் நினைத்தபடியே அந்த கதாபாத்திரமாக நடித்திருக்கிறேன் என்று கூறி என்னை பாராட்டியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவரது இயக்கமும், குறிப்பாக வசனங்களும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். சிறிய வசனங்கள்கூட ஒரு காட்சியை எப்படி உயர்த்துகின்றன என்பதை இந்தப் படத்தில் நேரடியாகப் பார்த்தேன்” என்றார்.
மேலும், “தயாரிப்பாளர்கள் ஜெய் சார், கார்த்திகா தேவி மேம் இருவரும் மிகவும் நல்ல மனம் கொண்டவர்கள். அவர்களுடைய நல்ல மனதிற்காக இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியையும் லாபத்தையும் கொடுத்து, அவர்கள் தொடர்ந்து பல படங்களைத் தயாரிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இசையமைப்பாளர் ரகுநந்தன் சாரின் பாடல்களுக்கு நான் நீண்ட காலமாக ரசிகன். அவர் இசையமைக்கும் படத்தில் நான் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் கார்த்திக் சார் முதல் நாளிலிருந்து நாகராஜ் சாருடன் இணைந்து இந்தப் படத்திற்காக சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். டிரைலர் மற்றும் பாடல்களில் அவரது உழைப்பு தெரிகிறது” என்றார்.
தொடர்ந்து, “இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், அனைவருக்கும் நன்றி. ஆலிஷா மிராணி சிறப்பாக நடித்திருக்கிறார்; அவர் நிச்சயம் பெரிய இடத்துக்கு வருவார். கனிகா மேமுடன் எனக்கு நிறைய காட்சிகள் உள்ளன. தீபா அக்காவும் சிறப்பாக நடித்திருக்கிறார். ‘கன்னி மாடம்’ படத்திலிருந்து எனக்கு அன்பும் ஆதரவும் அளித்து வரும் பத்திரிகை நண்பர்கள் இந்தப் படத்திற்கும் ஆதரவு தர வேண்டும். ‘ஆகாயம்’ அன்பை மட்டுமே வளர்க்கும் அழகான படம். இந்தப் படத்தை நீங்கள் நிச்சயம் ஆதரித்து வெற்றிப் படமாக்குவீர்கள் என்று நம்புகிறேன். விழாவில் கலந்து கொண்ட அனைத்து மூத்த திரையுலகினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் கிருஷ்ணா பேசியதாவது..,
“நாகராஜ் சாரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு புன்னகை வந்துகொண்டே இருக்கும். அவ்வளவு பாசிட்டிவான மனிதர். அவர் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவரைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவருடனான எனது நட்பு ‘மின்னலே’ படத்திலிருந்து தொடங்கியது. அந்தப் படத்தில் அவர் வசனகர்த்தா, நான் இணை இயக்குநர். அதன்பிறகு என்னுடைய எல்லா கதைகளையும் முதலில் அவரிடம் சொல்லி, அவரது கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டு, அதன்படி பல மாற்றங்களைச் செய்திருக்கிறேன். அவர் மிகவும் கிரியேட்டிவான மனிதர்” என்றார்.
மேலும், “‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யா, ஜோதிகா தொடர்பான ஒரு முக்கியமான காட்சியில், அந்தக் காட்சி இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நாகராஜ் சொன்ன ஒரு சிறிய யோசனைதான் பின்னர் திரையரங்கில் கைதட்டலைப் பெற்றது. அந்தக் காட்சிக்குப் பின்னால் நாகராஜின் யோசனை இருந்ததை இத்தனை காலமாக சொல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை; இன்று அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் ஒரு சிறந்த இயக்குநர், எழுத்தாளர் மட்டுமல்ல, மிகச்சிறந்த நடிகரும் கூட. ‘தினந்தோறும்’ படத்தில் அவரது கதாபாத்திரம்தான் ஷோ ஸ்டீலர். அவருடன் நடித்துவிட்டு அவரைத் தவிர்த்து யாரும் பெயர் வாங்கிவிட முடியாது என்று சொல்லும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கும்” என்றார்.
,“ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நாகராஜ் மீண்டும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். அவரது எழுத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். ஸ்ரீராம் கார்த்திக், ஆலிஷா இருவரும் மிகவும் சிறப்பாகவும் எக்ஸ்பிரஸிவாகவும் நடித்திருக்கிறார்கள். கனிகா மேம் மற்றும் தீபா அக்காவின் நடிப்புக்கும் நான் ரசிகன். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.
இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசியதாவது..,
“இந்தப் படத்தில் என்னை இசையமைக்க அழைத்த தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் இயக்குநர் நாகராஜ் சாருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். நாகராஜ் சாரை முதன்முதலில் சந்தித்தபோது, அவருடன் பணியாற்றுவது கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் அவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒவ்வொரு கதாபாத்திரமாக நடித்துக் காட்டி கதை சொன்ன விதம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும் அவர் வாழ்ந்தது போல உணர்வார். அதனால் அவர் கதை சொல்லும்போது முழு கவனத்துடன் கேட்டுக்கொண்டிருப்பேன்” என்றார்.
மேலும், “பாடல்கள் உருவாக்கத்திலும் நாகராஜ் சார் முழுமையாக ஈடுபட்டார். ரெக்கார்டிங்கின்போதும் இசைக்கலைஞர்களுடன் அமர்ந்து, ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து, சரியானதை தேர்வு செய்தார். பின்னணி இசையிலும் படத்தின் கதாபாத்திரங்களையும், நடுத்தரக் குடும்பங்களின் இயல்பான வாழ்க்கையையும் மனதில் வைத்து பணியாற்றினோம். ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களை வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் பின்னணி இசையிலும் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன்” என்றார்.
“நாகராஜ் சாருடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. ‘தினந்தோறும்’ படத்திலிருந்தே அவரது படைப்புகளுக்கு நான் ரசிகன். இந்தப் படம் நிச்சயமாக தேசிய விருது பெற வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன். ஒவ்வொரு படத்தையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடக நண்பர்கள், இந்தப் படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், மேடையில் இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என்றார்.
இயக்குநர் சசி பேசியதாவது..,
“என்னுடைய நண்பர் நாகராஜுக்காக, ‘ஆகாயம்’ படத்தை உருவாக்கிய தயாரிப்பாளருக்கு ஒரு நண்பனாக முதலில் நன்றி சொல்ல வேண்டும். இசையமைப்பாளர் ரகுநந்தன் சாரின் பாடல்களை நான் நிறைய கேட்டிருக்கிறேன். இந்தப் படத்தின் பாடல்களும் கதைக்கு ஏற்ற வகையில் மிகவும் எளிமையாகவும், மக்கள் எளிதில் ரசிக்கும் வகையிலும் இருக்கின்றன. இந்தப் பாடல்கள் நிச்சயம் மக்களைச் சென்றடையும். படத்தில் நடித்துள்ள நடிகர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்” என்றார்.
“நாகராஜை நான் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்தேன். அப்போது அவர் ஒரு கதையை மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சொன்னார். அவர் கதை சொன்ன விதம் என்னை அப்படியே பிரமிக்க வைத்தது. ‘என்னால் இப்படி ஒருபோதும் கதை சொல்ல முடியாது; இப்படி கதை சொல்லத் தெரியவில்லை என்றால் நல்ல இயக்குநராக முடியாது’ என்று நினைத்து, அன்றே அவரைப் பற்றி நண்பர்களிடம் பெருமையாகப் பேசினேன். நாகராஜ் எனக்கு நண்பர் என்றாலும், அவரை நான் மிகப்பெரிய கிரியேட்டிவ் மனிதராகப் பார்க்கிறேன். அவருடைய கதைகளில் இருக்கும் சென்சிபிலிட்டியும், குறிப்பாக பெண் கதாபாத்திரங்களில் இருக்கும் கண்ணியமும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றார்.
“சில இயக்குநர்கள் தப்பாக படங்களை ஆனால் படங்களை எடுக்கவே மாட்டார்கள்; அப்படி தவறான படமே எடுக்க முடியாத இயக்குநராக நாகராஜை நான் பார்க்கிறேன். சில படங்கள் திரையரங்கில் ஓடி முடிந்துவிடும்; ஆனால் சில படங்கள் முடிந்த பிறகும் நம் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட படங்களை உருவாக்கும் இயக்குநர்தான் நாகராஜ். ‘ஆகாயம்’ படத்தை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். நீங்களும் எதிர்பாருங்கள். நாகராஜ் நம்மை ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற எனது வாழ்த்துகள்” என்றார்.
சித்ரா லட்சுமணன் பேசியதாவது..,
“‘ஆகாயம்’ படத்தை தயாரித்துள்ள ஜெயச்சந்திரன், கார்த்திகா தேவி இருவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல கலைஞனை, ஒரு முக்கியமான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா அழைத்து வந்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் ரகுநந்தன். அவரது இசைக்கு நான் நீண்ட காலமாக ரசிகன். அவர் மிகச்சிறந்த இசையமைப்பாளர். அவருக்கான மிகப்பெரிய உயரத்தை தொடும் நேரம் நெருங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன்” என்றார்.
மேலும், “நாகராஜை ஒரு காலகட்டத்தில் சந்திக்கும்போது மிகவும் சங்கடமாக இருந்திருக்கிறது. அவரது வாழ்க்கையில் சில தவறுகள் நடந்தன; அதில் குடிப்பழக்கமும் ஒன்று. குடி நிச்சயமாக தவறுதான். ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து, தனது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்திருக்கிறார். நான் அவரை நேர்காணல் செய்தபோது, தனது வாழ்க்கையை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். அந்த நேர்காணலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. வாழ்க்கையில் விழாதவர்கள் யாரும் இல்லை; விழுந்த பிறகு எழுந்து நிற்பவன்தான் உண்மையான மனிதன். அதை நாகராஜ் சாதித்துக் காட்டியிருக்கிறார். அதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்”.
தொடர்ந்து, “நாகராஜின் திறமையை சசி, கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் இங்கே பாராட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு திறமைசாலிக்கு நீண்ட காலமாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததுதான் எனக்கு புரியாத விஷயம். இந்த முறை அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மிகச் சிறந்த ஒரு யூனிட்டை அவர் அமைத்திருக்கிறார். நல்ல கதாநாயகன், அழகாகத் தமிழ் பேசக்கூடிய கதாநாயகன் என இந்தப் படத்தில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. நாகராஜ் மிகப்பெரிய திறமைசாலி என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று; அவருக்கு தேவைப்பட்டது மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்புதான். அந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும் எனது நன்றி. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ஜெயச்சந்திரன் தொடர்ந்து நல்ல படங்களைத் தயாரிக்க வேண்டும். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்திருக்கிறார்” என்று வாழ்த்தினார்.
இயக்குநர் பேரரசு பேசியதாவது..,
“‘ஆகாயம்’ படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வந்திருக்கும் நாகராஜை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் அவரை நேரில் சந்தித்தபோது, சினிமா மீதான அவரது ஆர்வமும், கதை சொல்லும் திறமையும் என்னை மிகவும் கவர்ந்தது. நாகராஜ் மிகப்பெரிய திறமைசாலி. அவரது ‘தினந்தோறும்’ படத்தில் அவர் நடித்த விதமும், கதாபாத்திரத்தை கையாண்ட விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இடையில் அவரது வாழ்க்கையில் தடுமாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதிலிருந்து அவர் மீண்டு வந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது” என்றார்.
மேலும், “சினிமாவில் வெற்றியடைவதற்கு ஒரு திறமை வேண்டும்; அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் இன்னொரு திறமை வேண்டும். பலர் வெற்றியை அடைகிறார்கள், ஆனால் அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகிறார்கள். ஒருவர் தனது வெற்றிக்கான காரணத்தையும், தோல்விக்கான காரணத்தையும் தானே ஆராய வேண்டும். அந்த வகையில், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட தடுமாற்றங்களை உணர்ந்து, தன்னைத் திருத்திக் கொண்டு மீண்டும் வந்திருக்கும் நாகராஜ் இன்று ஒரு தெளிவான மனிதராக நிற்கிறார். ‘தினந்தோறும்’ நாகராஜ் வெற்றியை அடைந்தவர் என்றால், ‘ஆகாயம்’ நாகராஜ் அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் திறமையுடன் வந்திருக்கிறார்” என்றார்.
தொடர்ந்து, “தமிழ் சினிமாவில் இன்று வெற்றி பெற்றிருக்கும் பல இயக்குநர்களின் வளர்ச்சிக்குப் பின்னால் நாகராஜின் பங்களிப்பும் இருக்கிறது. பலருக்கு தனது திறமையின் மூலம் உதவியிருக்கிறார். ‘தினந்தோறும்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்தபோதே, இயல்பான வசனம், எதார்த்தமான நடிப்பு, உடல்மொழி என அனைத்திலும் அவர் ரசிகர்களைக் கவர்ந்தார். அப்படிப்பட்ட ஒரு கலைஞர் மீண்டும் ‘ஆகாயம்’ மூலம் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் நாகராஜ் மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும். இனிமேல் அவருக்கு தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி, வெற்றி, வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும்” என்று வாழ்த்தினார்.
இயக்குநர் நாகராஜ் பேசியதாவது..,
“மீண்டும் இந்த இடத்தில் என்னை நிற்க வைத்த அனைவருக்கும் முதலில் நன்றி. தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி அவர்கள், நான் சொன்ன கதையை சுமார் மூன்று மணி நேரம் கேட்டுவிட்டு, அடுத்த நிமிடமே இந்தப் படத்தை நான் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். நான் பல படங்கள் செய்திருக்கலாம், நிறைய சம்பாதித்திருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் படம் எடுப்பேன்’ என்ற என்னுடைய பிடிவாதத்தை ரசித்து, என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். அந்த நம்பிக்கையைப் பாதுகாத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். டிரைலரைப் பார்த்தவுடனேயே அவர் படத்தின் மீது வைத்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது” என்றார்.
மேலும், “என்னைப் போல வாழ்க்கையில் தவறான பாதைக்குச் சென்று மீண்டும் திரும்பி வர நினைப்பவர்கள் சினிமாவில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் ‘குடி உள்ளே போனால் குடும்பம் வெளியே போயிடும்’ என்று ஒரு வசனம் இருக்கிறது. குடித்தால் வியாதி வரும், கடன் வரும், போலீஸ் வரும், பிரச்சனை வரும், குடும்பம் இரண்டாகும். அதனால் குடியை ஒருபோதும் கொண்டாட வேண்டிய விஷயமாக பார்க்கக்கூடாது. அதே நேரத்தில் தவறிவிட்ட ஒருவர் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்ற எண்ணத்திற்கும், அவருக்கு ஒரு பெரிய ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்கும் இந்தப் படம் ஒரு குரலாக இருக்கும். என்னால் மீண்டும் வர முடிந்தது என்றால், என்னைப் போல இன்னும் நிறைய பேராலும் முடியும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து, “இந்தப் படத்தில் குடியைப் பற்றிப் பேசுவது கதையாகவோ, விளம்பரமாகவோ, போரடிக்கும் வகையிலோ இருக்காது. ஒரு அழகான காதல் கதைக்குள், வாழ்க்கைக்கு பயனுள்ள ஒரு சிறிய விஷயமாகத்தான் அது இருக்கும். அதேபோல் அரசியலும் இந்தப் படத்தில் இருக்கிறது. நாம் நின்றாலும், உட்கார்ந்தாலும், பேசினாலும், சிரித்தாலும், ஓடினாலும் எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அரசியல் இருக்கிறது. ஆனால் இந்தப் படம் எல்லாவற்றையும் தாண்டி அன்பைப் பற்றித்தான் பேசுகிறது. சசி, பாலசேகரன் உள்ளிட்ட நண்பர்கள் இன்று எனக்காக வந்து கை கொடுத்திருப்பது சினிமாவையும், தொழிலையும் தாண்டிய அன்பு. இந்த உலகம் அன்பால் உருவானது என்று நான் மீண்டும் நம்புகிறேன். அதே அன்பால் தான் விஜய் தமிழகத்தின் முதல்வரானார். அந்த அன்பைத்தான் ‘ஆகாயம்’ பேசுகிறது. இந்தப் படத்தை நீங்கள் பார்த்துவிட்டு நிச்சயமாக ரசிப்பீர்கள். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார். என்னை நம்பி உடன் நின்ற கார்த்திக் நல்லமுத்து அவர்களுக்கு நன்றி.
‘கன்னி மாடம்’ திரைப்படத்தின் மூலம் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆலிஷா மிராணி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், ‘மெய்யழகன்’ படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன், தீபா, ‘மகாராஜா’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘சென்னை டு சிங்கப்பூர்’, ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் நல்லமுத்து, ‘ஆகாயம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘நீர்ப்பறவை’, ‘அயோத்தி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏக்நாத், சாரதி மற்றும் ரமணிகாந்தன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ‘ஒரு நொடி’, ‘ஜென்ம நட்சத்திரம்’ ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சூர்யா இப்படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். சண்டைப் பயிற்சியை பையர் கார்த்திக் அமைத்துள்ளார். நடன அமைப்பை மணிகண்டன் மேற்கொண்டுள்ளார்.
இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாக நடைபெற்ற நிலையில், ‘ஆகாயம்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
’Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message
Tamil cinema has often used humour and commercial entertainment as an effective way to address socially relevant issues, and ‘Nallapadam’ arrives in the same space with a distinctive premise that combines comedy, romance, sentiment and a strong social message. Directed by Praburam C, the film stars Dr. A. Harish in the lead, with Dhanalakshmi as the female lead, and is gearing up for its theatrical release on September 18, 2026.
The story revolves around Kumaran, a man whose entire world revolves around alcohol. While his mother stands by him, his sister Amutha strongly opposes his drinking habit, and his girlfriend makes every effort to change his ways. Meanwhile, a group of people who share his love for alcohol form an association and choose Kumaran as their leader. His life takes an unexpected turn when the government announces a nationwide ban on alcohol, leaving him to confront the challenge of living without the one thing that has defined his world.
What follows forms the crux of ‘Nallapadam’, as Kumaran finds himself caught in a series of humorous and unexpected situations while trying to deal with the new reality. The film also explores the impact of alcohol on individuals, families and society, bringing together humour, romance, sentiment, social awareness and mass-oriented entertainment. With its unusual premise and socio-commercial treatment, the film aims to deliver its message while keeping the entertainment quotient intact.
The film features Motta Rajendran, Kalki Raja, Rama and Priyadharshini alongside the lead cast. The technical team comprises iniyan j harris as cinematographer, B.R. Prakash as editor and Sagishna Xavier as music composer. Asmin has worked as a lyricist.
Produced by A. Alagupandian under the banner of Harish Cinemas, Nallapadam is distributed and released by Harish Cinemas. Directed by Praburam C, the film is set to reach theatres worldwide on September 18, 2026.
*நகைச்சுவையுடன் வலுவான சமூக கருத்தை முன்வைக்கும் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நல்லபடம்’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!*
தமிழ் சினிமா சமூக அக்கறை கொண்ட பிரச்சினைகளை நகைச்சுவை மற்றும் வணிகரீதியான பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. அந்த வகையில், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் மற்றும் வலுவான சமூகக் கருத்தை வித்தியாசமான கதைக்களத்துடன் ‘நல்லபடம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. C. பிரபுராம் இயக்கியுள்ள இப்படத்தில் டாக்டர் A. ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மதுவுக்கு அடிமையான குமரனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அவரது தாயார் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால், அவரது சகோதரி அமுதா, குமரனின் குடிப்பழக்கத்தை கடுமையாக எதிர்க்கிறார். அவரது காதலியும் குமரனை அந்தப் பழக்கத்திலிருந்து மாற்றுவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்கிறார்.
இதற்கிடையே, குமரனைப் போலவே மதுவை விரும்பும் சிலர் ஒன்றிணைந்து ஓர் அமைப்பை உருவாக்கி, குமரனை அதன் தலைவராகத் தேர்வு செய்கின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் மதுவுக்கு அரசு தடை விதிப்பதாக அறிவிக்கிறது. இதனால், தனது வாழ்க்கையாக இருந்த மதுவின்றி எப்படி வாழ்வது என்ற மிகப்பெரிய சவாலை குமரன் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது. அதன்பிறகு குமரனின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களும், புதிய சூழலை சமாளிக்க அவர் எதிர்கொள்ளும் நகைச்சுவையான பிரச்சினைகளுமே ‘நல்லபடம்’.
மதுவால் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இப்படம் பேசுகிறது. அதேசமயம் நகைச்சுவை, காதல், சென்டிமென்ட், சமூக விழிப்புணர்வு மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வணிகரீதியான பொழுதுபோக்கு அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கிறது. வித்தியாசமான கதைக்களம் மற்றும் சமூக, வணிக அணுகுமுறையுடன் உருவாகியுள்ள இப்படம், பொழுதுபோக்கு அம்சத்திற்கு குறைவில்லாமல் சமூகக் கருத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களுடன் மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா மற்றும் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவில் இனியன் J ஹாரிஸ் ஒளிப்பதிவாளராகவும், B.R. பிரகாஷ் படத்தொகுப்பாளராகவும், சகிஷ்ணா சேவியர் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். அஸ்மின் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
ஹரிஷ் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் A. அழகுபாண்டியன் தயாரித்துள்ள இப்படத்தை ஹரிஷ் சினிமாஸ் நிறுவனமே விநியோகம் செய்து வெளியிடுகிறது.
C. பிரபுராம் இயக்கியுள்ள ‘நல்லபடம்’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் செப்டம்பர் 18 அன்று வெளியாகிறது.
“பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து வருவதன் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறார். அந்த வகையில், தற்போது ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடிகர் ஜிதின் குலாட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபாஸுடன் சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அனுபவம் குறித்து ஜிதின் குலாட்டி, Variety India தளத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பிரபாஸ் மிகவும் தாராளமானவர் என்றும், சிறந்த மனிதர் என்றும் தான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவருடன் நேரடியாகப் பணியாற்றத் தொடங்கிய பிறகு அந்த வார்த்தைகள் உண்மை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததாகவும் ஜிதின் குலாட்டி தெரிவித்துள்ளார். “பிரபாஸ் எப்போதும் மற்றவர்களுக்கு உதவத் தயாராக இருக்கும் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர். அவர் மிகவும் இனிமையானவர், தாராளமானவர். யார் உதவி கேட்டாலும் அவர்களுக்கு உதவத் தயாராக இருப்பார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடன் படப்பிடிப்பில் இருக்கிறேன். அவரைச் சுற்றியுள்ள பலருக்கு அவர் உதவுவதை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.
மேலும், பிரபாஸின் எளிமை மற்றும் தாராள மனப்பான்மை மட்டுமின்றி, அவரது வீட்டில் தயாரிக்கப்படும் உணவையும் சுவைத்துள்ளதாக ஜிதின் குலாட்டி தெரிவித்துள்ளார் குறிப்பாக பிரபாஸ் வீட்டிலிருந்து வந்த மட்டன் குறித்து பேசிய அவர், “பிரபாஸ் வீட்டில் சமைக்கும் உணவுக்காகவும் பிரபலமானவர். அவரது வீட்டில் சமைத்த உணவை நானும் சாப்பிட்டிருக்கிறேன். குறிப்பாக அந்த மட்டன், நான் இதுவரை சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்தது. இதை நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. அனுபவித்து சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஜிதின் குலாட்டியின் முழுமையான பேட்டி – Variety India
பிரபாஸ் மற்றும் ஜிதின் குலாட்டி இணைந்து நடித்து வரும் ‘ஃபௌசி’ திரைப்படம் மீதும் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பிரம்மாண்டமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படம், பிரபாஸின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ‘சலார்’, ‘கல்கி 2898 AD’, ‘தி ராஜா சாப்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வரும் பிரபாஸ், தனது படங்களின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில், அவருடன் நீண்ட காலம் இணைந்து பணியாற்றிய ஜிதின் குலாட்டி, அவரது நட்சத்திர அந்தஸ்தை மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் அவரது மனிதநேயத்தையும் பாராட்டியிருப்பது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
#Prabhas is one of those quintessential good guys,’ says #JitinGulati.
Having worked with #Prabhas for nearly 2 years on the film #Fauzi, @jitin0804 says the experience has only reinforced the superstar’s reputation in the industry.
I had heard that he’s a very generous man & a good human being. Now I’ve had that experience firsthand. He is one of those quintessential good guys who is always there, is the sweetest, is very generous, and is ready to help anyone.
We’ve been shooting for the last two years, and I have seen him helping so many people around him,” he says.
Apart from his magnanimity and humility, I have also tasted Prabhas’ home-cooked food that he’s so well-known for. I think that’s the best mutton I’ve ever had; I’m not exaggerating.
AVENGERS ENDGAME: ENCORE BOOKINGS NOW OPEN FOR IMAX, MARVEL STUDIOS PRESENTED IN INFINITY VISION AND OTHER PREMIUM FORMATS; FANS TO GET EXCLUSIVE LOOK AT AVENGERS: DOOMSDAY
Reassemble for the epic conclusion of the Infinity Saga on the big screen on 25th September across English, Hindi, Tamil and Telugu in all premium formats.
Marvel Studios opens bookings for Avengers Endgame: Encore for IMAX, Marvel Studios Presented In Infinity Vision, and premium formats including 4DX, MX4D, SCREEN X, DOLBY VISION, HDR BARCO, ICE, ahead of its theatrical release on 25th September 2026. Returning to Indian cinemas in English, Hindi, Tamil, and Telugu, Avengers Endgame: Encore will let audiences experience one of the most monumental cinematic events of all time on the big screen once again. The movie includes an exclusive look at the highly anticipated Avengers: Doomsday , which arrives in cinemas on 18th December
For fans looking to experience Avengers Endgame: Encore at its most spectacular, the film will be presented in IMAX, Marvel Studios Presents Infinity Vision, and other premium large formats. Infinity Vision-certified screens guarantee audiences an exceptional cinematic presentation, with larger screens, brighter images, and outstanding sound.
In Avengers Endgame: Encore, after devastating events wiped out half the world’s population, the remaining heroes struggle to move forward. Ultimately, they must come together to restore order and harmony in the universe and bring their loved ones back in a dramatic showdown against Thanos. The film is produced by Kevin Feige and directed by Anthony and Joe Russo. Louis D’Esposito, Victoria Alonso, Michael Grillo, Trinh Tran, Jon Favreau, James Gunn, and Stan Lee serve as executive producers.
Marvel Studios’ Avengers Endgame: Encore releases in IMAX, Marvel Studios Presented In Infinity Vision, and premium formats including 4DX, MX4D, SCREEN X, DOLBY VISION, HDR BARCO, ICE in English, Hindi, Tamil and Telugu on 25th September 2026.
‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் திரைப்படத்திற்கான ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையிடலுக்கான முன்பதிவு தொடங்கியது! மேலும், ரசிகர்களுக்கு ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் பிரத்யேக காட்சியும் திரையிடப்படும்!
இன்ஃபினிட்டி சாகாவின் பிரம்மாண்டமான இறுதி அத்தியாயத்தை மீண்டும் பெரிய திரையில் காணத் தயாராகுங்கள்! செப்டம்பர் 25ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அனைத்து பிரீமியம் திரையிடல் வடிவங்களிலும் வெளியாகிறது.
மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்திற்கான முன்பதிவு ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன்
உள்ளிட்ட 4DX, MX4D, SCREEN X, DOLBY VISION, HDR BARCO, ICE போன்ற பிரீமியம் திரையிடல் வடிவங்களில் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இப்படம், ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மீண்டும் இந்திய திரையரங்குகளுக்கு வருகிறது.
‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தை மீண்டும் பெரிய திரையில் ரசிகர்கள் அனுபவிக்க இந்த வெளியீடு வாய்ப்பளிக்கிறது. மேலும், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சியும் இதில் இடம்பெறுகிறது. ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக அனுபவிக்க விரும்பும் ரசிகர்களுக்காக, இப்படம் ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் மற்றும் பல்வேறு பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் திரையிடல்களில் வெளியாகிறது. இன்ஃபினிட்டி விஷன் சான்றிதழ் பெற்ற திரையரங்குகள், பெரிய திரைகள், அதிக ஒளிர்வு கொண்ட காட்சிகள் மற்றும் சிறப்பான ஒலி அமைப்பு மூலம் ரசிகர்களுக்கு உயர்தரமான சினிமா அனுபவத்தை வழங்குகின்றன.
‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்தில், பேரழிவை ஏற்படுத்திய சம்பவங்களால் உலக மக்கள் தொகையில் பாதி பேர் அழிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள சூப்பர் ஹீரோக்கள் அந்த இழப்பிலிருந்து மீண்டு, தங்கள் வாழ்க்கையைத் தொடரப் போராடுகின்றனர். இறுதியில், உலகில் மீண்டும் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டவும், தங்கள் அன்புக்குரியவர்களை மீட்டெடுக்கவும் அவர்கள் ஒன்றிணைய வேண்டிய சூழல் உருவாகிறது. இதற்காக அவர்கள் தானோஸூக்கு எதிரான பிரம்மாண்டமான இறுதிப் போரில் களமிறங்குகின்றனர்.
இப்படத்தை கெவின் ஃபெஜ் தயாரித்துள்ளார். ஆண்டனி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ இயக்கியுள்ளனர். லூயிஸ் டி’எஸ்போசிட்டோ, விக்டோரியா அலோன்சா, மைக்கேல் கிரில்லோ, டிரின் ட்ரான், ஜான் ஃபேவ்ரோ, ஜேம்ஸ் கன் மற்றும் ஸ்டான் லீ ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் ஐமேக்ஸ், மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன், 4DX, MX4D, SCREEN X, DOLBY VISION, HDR BARCO மற்றும் ICE உள்ளிட்ட பிரீமியம் திரையிடல் வடிவங்களில், ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
“Playing the Character of Manimegalai Was a Challenging Experience in ‘Enna Vilai’” – Actress Shashaa Shivakumar
Actress Shashaa Shivakumar, who has been steadily making her presence felt with varied roles, is set to appear in a pivotal character in Enna Vilai, written and directed by Sajeev Pazhoor. The film marks a different experience for the actress, as she plays Manimegalai, a rural girl, for the first time. With the film all set for the theatrical release on September 17, Saasha shares how she prepared for the character even before stepping onto the sets and how the film offered her an opportunity to explore a completely different milieu.
Speaking about her role in Enna Vilai, Shashaa Shivakumar says, “Manimegalai is a very special character for me, as this is the first time I have played a rural girl. I prepared myself for the character even before going to the sets, which helped me understand and approach the role better. It was a completely different experience for me, and I am very happy to have got an opportunity like this through Enna Vilai.”
Shashaa Shivakumar also shares her experience of working alongside Karunaas and Nimisha Sajayan, describing the opportunity as a responsibility given their talent and commitment. She also praises director Sajeev Pazhoor for creating a comfortable working environment through his patient and respectful approach towards everyone on the sets.
“Karunaas sir is a wonderful actor, and Nimisha is extremely talented and hardworking. When you perform alongside actors like them, it naturally comes with a great sense of responsibility. Director Sajeev sir was always very patient and respectful with everyone on the sets, which made the experience very special. This was also my first time working with a Malayalam team, so it was a very different and enriching experience for me,” she adds.
Set against a socially relevant backdrop, Enna Vilai revolves around a man who retrieves coins offered by devotees into the sea near Rameswaram, with his struggle for dignity and survival eventually leading to a significant legal battle.
The film features Karunaas, Nimisha Sajayan, Saasha, Vijayalakshmi Ahathian, Chiththa Darshan, Poornima Bhagyaraj, Y.G. Mahendran, Motta Rajendran, Nizhalgal Ravi, Praveena, Mohan Ram, Chetan Kumar, Kavithalaya Krishnan, Kamalesh, Goli Soda Pandi, J.S. Kavi, Swaminathan, Deepa Shankar, Kavi Nakkalitesand others.
Written and directed by Sajeev Pazhoor, Enna Vilai is produced by Githesh V under the banner of Kalamaya Films. The technical crew includes Sam C.S. (Music), Alby Antony (Cinematography) and Sreejith Sarang (Editing).
With its socially relevant premise and strong ensemble of performers, Enna Vilai is gearing up for its worldwide theatrical release on September 17, 2026.
‘என்ன விலை’ திரைப்படத்தில் மணிமேகலை கதாபாத்திரத்தில் நடித்தது சவாலான அனுபவம்…நடிகை ஷாஷா சிவகுமார்!
பல்வேறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகை ஷாஷா சிவகுமார், சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் முதன்முறையாக கிராமப்புறப் பெண்ணான மணிமேகலை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அவருக்கு முற்றிலும் புதிய அனுபவமாக அமைந்துள்ளது.
செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நடிப்பதற்காக, படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதற்கு முன்பே அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டதாக ஷாஷா சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும், முற்றிலும் மாறுபட்ட புதிய சூழலில் பணிபுரிவதற்கான வாய்ப்பையும் இந்தப் படம் தனக்கு கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
‘என்ன விலை’ திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ஷாஷா சிவகுமார் பகிர்ந்து கொண்டதாவது, “மணிமேகலை எனக்கு மிகவும் சிறப்பான கதாபாத்திரம். ஏனெனில், நான் முதன்முறையாக ஒரு கிராமப்புறப் பெண்ணாக நடித்திருக்கிறேன். படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதற்கு முன்பே இந்தக் கதாபாத்திரத்திற்காக என்னை தயார்படுத்திக் கொண்டேன். அது அந்த கதாபாத்திரத்தை நன்றாகப் புரிந்துகொண்டு அணுக எனக்கு உதவியது. இது எனக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. ‘என்ன விலை’ படம் மூலம் இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
மேலும், கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்தும் ஷாஷா சிவகுமார் பகிர்ந்துள்ளார். அவர்களின் திறமை மற்றும் பணியின் மீதான அர்ப்பணிப்பு காரணமாக, அவர்களுடன் இணைந்து நடிப்பது தனக்கு கூடுதல் பொறுப்புணர்வை கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “கருணாஸ் சார் ஒரு அற்புதமான நடிகர். நிமிஷா மிகவும் திறமையானவர், கடினமாக உழைப்பவர். அவர்களைப் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்கும்போது இயல்பாகவே நமக்கும் பொறுப்புணர்வு வந்துவிடும். இயக்குநர் சஜீவ் சார் படப்பிடிப்புத் தளத்தில் அனைவரிடமும் எப்போதும் மிகவும் பொறுமையாகவும் மரியாதையுடனும் நடந்து கொண்டார். மேலும், மலையாளத் திரையுலகை சேர்ந்தவர்களுடன் நான் முதன்முறையாக பணியாற்றியுள்ளேன். எனவே, இது எனக்கு முற்றிலும் வித்தியாசமான மற்றும் கற்றல் அனுபவமாக இருந்தது” என்றார்.
சமூக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியில் உருவாகியுள்ள ‘என்ன விலை’, ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டது. கண்ணியத்துடனும் வாழ்வாதாரத்துக்காகவும் அவர் நடத்தும் போராட்டம், இறுதியில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.
இந்தப் படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், ஷாஷா சிவகுமார், விஜயலட்சுமி வீரமணி, சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை கலாமயா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜிதேஷ் வி தயாரித்துள்ளார். படத்தின் இசையை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஆல்பி ஆண்டனி மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஸ்ரீஜித் சாரங் கவனித்துள்ளார்.
சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுடன் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
Cast & Crew:
Produced by Prince Pictures and Ivy Entertainment.
Starring – Karthi, SJ Suryah, Malavika Mohanan, Ashika Ranganath, Yogi Babu, Rajisha Vijayan and others.
Directed – by P.S Mithran
Based on Story & Characters by P.S Mithran
Co Produced by – A. Venkatesh
‘சர்தார் 2’ கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் சர்தார் 2 திரைப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது. இந்த முறை ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் தவறான பயன்பாடு அதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் உயிரியல் ஆயுதம் ஆகியவற்றை மையமாக வைத்து ஒரு ஸ்பை திரில்லர் கதையாக படத்தை எடுத்திருக்கிறார்கள்.
கதைப்படி ரா அமைப்பில் பணிபுரியும் கார்த்திக்கு பல வருடங்களாக தலைமறைவாக இருக்கும் அவரது தந்தை சர்தார் உயிருடன் இருப்பது தெரிய வருகிறது. அதே நேரத்தில் சர்வதேச கூலிப்படை தலைவனாக வரும் எஸ்ஜே சூர்யா ஒரு ஆபத்தான உயிரியல் ஆயுதத்தை கைப்பற்றி நாட்டையே அழிக்கும் திட்டத்தில் இறங்குகிறார். தந்தையை தேடும் கார்த்தி இந்த பிரச்சனையிலும் சிக்குகிறார். கடைசியில் தந்தையும் மகனும் இணைந்து நாட்டை காப்பாற்ற போராடுவதுதான் படத்தின் முக்கிய கதை.
கார்த்தி அப்பா மகன் என்று இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்கும் உடல் மொழி மற்றும் நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விமான சண்டை காட்சிகளில் கார்த்தியின் உழைப்பு நன்றாக தெரிகிறது. சில விமர்சனங்கள் அவரது நடிப்பை பாராட்டினாலும் முதல் பாகத்தில் இருந்த தந்தை மகன் உணர்வுப்பூர்வமான பிணைப்பு இந்த பாகத்தில் குறைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றன.
எஸ்ஜே சூர்யா வில்லனாக தனது வழக்கமான பாணியில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக மக்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து பற்றி அவர் பேசும் காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால் அவரது கதாபாத்திரத்திலும் வில்லத்தனத்திலும் புதிதாக எதுவும் இல்லை என்றும் சில இடங்களில் அவரது நடிப்பு அதிகமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் கூறுகின்றன.
மாளவிகா மோகனனுக்கு ஆக்ஷன் காட்சிகளில் நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமான சண்டை மற்றும் அதிரடி காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆஷிகா ரங்கநாத்தின் கதாபாத்திரம் படம் முழுவதும் இருந்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரஜிஷா விஜயன் குறைவான காட்சிகளிலேயே வருகிறார். யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவி கூட்டணி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.
தொழில்நுட்ப ரீதியாக படம் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு குறிப்பாக ஆக்ஷன் மற்றும் சாகச காட்சிகளில் பெரிய பலமாக இருக்கிறது. சாம் சிஎஸ் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கிறது. குறிப்பாக சேசிங் மற்றும் ஸ்பை திரில்லர் காட்சிகளில் பின்னணி இசை நன்றாக வேலை செய்கிறது.
படத்தொகுப்பு விஜய் வேலுகுட்டியின் முக்கியமான பலமாக இருக்கிறது என்று சில விமர்சனங்கள் பாராட்டியுள்ளன. பல கதாபாத்திரங்கள் மற்றும் வெவ்வேறு காலகட்ட காட்சிகள் இருந்தாலும் அவற்றை இணைத்து படத்தை வேகமாக நகர்த்தியிருக்கிறார். ஆனால் படம் சுமார் மூன்று மணி நேரம் ஓடுவதால் குறிப்பாக இரண்டாம் பாதியில் சில காட்சிகளை குறைத்திருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது.
இயக்குநர் பிஎஸ் மித்ரன் ஒரு நல்ல சமூக பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதை நேரடியாக விழிப்புணர்வு படமாக சொல்லாமல் ஸ்பை திரில்லர் மற்றும் ஆக்ஷன் படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இது பாராட்டுக்குரிய முயற்சி. ஆனால் கதையை சொல்லும் விதத்தில் சில இடங்களில் குழப்பம் ஏற்படுகிறது. முதல் பாதி ஓரளவு விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் நீளமான காட்சிகள் மற்றும் அதிகமான விளக்கங்கள் படத்தின் வேகத்தை குறைக்கின்றன.
மொத்தத்தில், ‘சர்தார் 2’ முதல் பாகம் அளவுக்கு எதிர்பார்ப்புடன் சென்றால் சில ஏமாற்றங்கள் இருக்கலாம். ஆனால் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் கார்த்தியின் நடிப்புக்காகவும் இந்த படத்தை பார்க்கலாம்.
Soori
Suhas
Mahima Nambiar
Sathyaraj
Mithun Jai Sankar
Ravindra Vijay
Bala Saravanan
Stun Siva
Rams
Padhman
Aadukalam Murugadoss
Kritika Balasubramanian
Krish Hassan
Rekha Kumanan
Arun Kumar M
& Others
CREW
Banner — RS Infotainment Pvt Ltd
Writer & Director — Mathimaran Pugazhendhi
Music Director — GV Prakash Kumar
Producer — Elred Kumar
Co-Producer — V Manikandan
Cinematographer — S R Kathir ISC
Editor — Pradeep E Ragav
Production Designer — D R K Kiran
Stunt Directors — Peter Hein, Dhilip Subbarayan, Mahesh Mathew
Dialogue — Ameer Jamal Khan, Mathimaran Pugazhendhi
Sound Mix — T Uday Kumar
Sound Design — Prathap K
VFX Head — R Harihara Suthan
Lyrics — Pa Vijay, Jayashree Mathimaran, Vaaheesan Rasaiya
Additional Writing — Elred Kumar, R Mohanavasanthan, Thiral Sankar
Costume Designer — Dinesh Manoharan
Dance Choreographer — Azar
Executive Producer — G Mahesh
Production Executive — S P Chokkalingam
Stills — G Anand Kumar
DI — Infinity Media
Colorist — Srinath B
Makeup — N Sakthivel
Costumer — Nagu
Publicity Design — Aesthetic Kunjamma
PRO — Rekha
Direction Team — Odam Ilavarasu, Prabhakar, Thozhar Sathish, Dharani Guru, Mahins David Prince, Karthick Kannan V, Surya Gandhimathi
Cinematography Team — SR Santhosh Kumar, Karthick, Raja C Sekar, Jalendiravasan, Prabu Selvaraj, Karthik V, Nirmal G, Neeraj G
Editing Team — Ajith Kumar M, Kavimani, M.S. Anbu Mathi
Art Team — GK. Jagan, S. Bavi Dharani, Vasuki Velmurugan, Gnanavel Angamuthu
Production Managers Team — Dindigul V Sivaraman, K Veeramani, Hariharan, Santhosh
Dubbing Engineers — Rashid J, Venkat C Balaram
‘மண்டாடி’ மீனவ மக்களின் வாழ்க்கையையும் பாய்மர படகு போட்டியையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் மண்டாடி. தமிழ் சினிமாவில் மீனவர்களின் வாழ்க்கையை பற்றி பல படங்கள் வந்திருந்தாலும் இந்த படத்தில் பாய்மர படகு போட்டியை மையமாக வைத்திருப்பது வித்தியாசமான முயற்சியாக இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முகவைப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த முத்துக்காளி 20 வருடங்களுக்கு முன்பு சில காரணங்களால் ஊரை விட்டு சென்னைக்கு சென்றுவிடுகிறார். எதிர்பாராத சூழ்நிலையில் தனது முன்னாள் காதலியின் மகன் மாரியை காப்பாற்றுவதற்காக மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புகிறார். அங்கு அவருடைய பழைய நண்பனாக இருந்த சட்டாப்புலியுடன் மீண்டும் மோதல் ஏற்படுகிறது. இருவருக்கும் இடையே இருக்கும் பழைய பகை என்ன, முத்துக்காளி ஏன் ஊரை விட்டு சென்றார், இறுதியில் பாய்மர படகு போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
முத்துக்காளியாக நடித்திருக்கும் சூரி படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறார். இதுவரை நகைச்சுவை நடிகராக பார்த்த சூரி இப்போது ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக இந்த படத்தில் தெரிகிறார். கோபம், பாசம், காதல், செண்டிமெண்ட் என அனைத்து உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளிலும் படகு போட்டிக்கான பயிற்சி காட்சிகளிலும் அவரது உழைப்பு நன்றாக தெரிகிறது.
சுஹாஸ் சட்டாப்புலி கதாபாத்திரத்தில் சூரிக்கு சரியான போட்டியாக நடித்திருக்கிறார். அவரது கோபம், வன்மம் மற்றும் கதாபாத்திரத்தின் ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சூரி மற்றும் சுஹாஸ் இருவரும் நேருக்கு நேர் நிற்கும் காட்சிகள் படத்தின் முக்கியமான பலமாக இருக்கின்றன.
மகிமா நம்பியாருக்கு அழுத்தமான கதாபாத்திரம். காதல், பிரிவு மற்றும் குடும்ப வாழ்க்கை என இரண்டு காலகட்டங்களிலும் தனது நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். சத்யராஜ் அனுபவமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மிதுன் ஜெய்சங்கர் மாரி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். பாலசரவணன் வரும் காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றன. ரவீந்திர விஜய், ராம்ஸ், ஸ்டண்ட் சிவா, பத்மன், ஆடுகளம் முருகதாஸ், கிரிஷ் ஹாசன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. எஸ் ஆர் கதிர் கடல், படகுகள், மீனவர்களின் வாழ்க்கை மற்றும் படகு போட்டி காட்சிகளை மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறார். கடலில் நடக்கும் போட்டியை திரையில் பார்க்கும்போது நாமும் அந்த போட்டிக்குள் இருப்பது போன்ற உணர்வு வருகிறது. பாய்மர படகு போட்டிக்காக படக்குழுவினர் செய்திருக்கும் உழைப்பு தெளிவாக தெரிகிறது.
ஜி வி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை போட்டி மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு நல்ல வேகத்தை கொடுக்கிறது. பாடல்கள் பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்கிறது.
படத்தொகுப்பு படத்தின் இன்னொரு பலம். குறிப்பாக சண்டைக்காட்சிகள் மற்றும் படகு போட்டி காட்சிகளை விறுவிறுப்பாக தொகுத்திருக்கிறார்கள். பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயண், மஹேஷ் மேத்யூ ஆகியோரின் சண்டைப்பயிற்சியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மீனவ மக்களின் வாழ்க்கையையும் கடலையும் ஒரு புதிய களத்தில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். படகு போட்டியின் விதிகள் மற்றும் அதன் பின்னணியை பார்வையாளர்களுக்கு புரியும் வகையில் கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம். அதே நேரத்தில் கதை மற்றும் கதாபாத்திரங்களின் சில பகுதிகள் ஏற்கனவே பார்த்த ஸ்போர்ட்ஸ் படங்களை நினைவுபடுத்துகின்றன. நட்பு, துரோகம், காதல், பழைய பகை போன்ற விஷயங்களில் பெரிய புதுமை இல்லை.
முதல் பாதி வேகமாக செல்கிறது. முத்துக்காளி ஊருக்கு திரும்புவது, மாரியை காப்பாற்றுவது, புதிய அணியை உருவாக்குவது மற்றும் போட்டிக்காக பயிற்சி கொடுப்பது என அடுத்தடுத்து சம்பவங்கள் நடப்பதால் படம் விறுவிறுப்பாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் பழைய கதையை விளக்கும் பிளாஷ்பேக் காட்சிகள் வருவதால் சில இடங்களில் வேகம் குறைகிறது. இந்த பகுதி சற்று நீளமாக இருப்பது ஒரு குறையாக தெரிகிறது.
ஆனால் கிளைமாக்ஸ் அந்த குறைகளை பெரிதாக தெரியவிடாமல் செய்கிறது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் செல்லும் படகு போட்டி காட்சிகள் படத்தின் முக்கியமான ஹைலைட். ஒவ்வொரு கட்டத்திலும் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி கடைசி வரை நம்மை போட்டிக்குள் வைத்திருக்கிறார்கள். படகு போட்டியை விரும்புபவர்களுக்கு இந்த கிளைமாக்ஸ் நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும்.
மொத்தத்தில், ‘மண்டாடி’ சூரியின் ஆக்ஷன் அவதாரத்தை பார்க்க விரும்புபவர்களும், வித்தியாசமான படகு போட்டி களத்தை ரசிக்க விரும்புபவர்களும் மண்டாடியை நம்பி பார்க்கலாம்.