Categories
Cinema News

சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’ – நண்பர்களின் வெற்றிப் பயணம் தொடர்கிறது!

சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’ – நண்பர்களின் வெற்றிப் பயணம் தொடர்கிறது!

SIIMA 2026 விருது விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்றுள்ள நிலையில், ‘காந்தா’ திரைப்படத்திற்காக நடிகர் சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகர் (தமிழ்) விருதை வென்றுள்ளார்.

நட்பிலும், திரைப்பயணத்திலும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வரும் சசிகுமாரும் சமுத்திரக்கனியும், ஒரே விருது விழாவில் தங்களது படைப்புகளுக்காக அங்கீகாரம் பெற்றிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் தனது இயல்பான மற்றும் யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள சமுத்திரக்கனி, ‘காந்தா’ திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக இந்த விருதை வென்றுள்ளார்.

ஒரு கதாபாத்திரத்தை வெறுமனே நடித்துக் காட்டாமல், அதன் உணர்வுகளையும் தன்மையையும் உள்வாங்கி இயல்பாக வெளிப்படுத்துவது சமுத்திரக்கனியின் தனிச்சிறப்பு. கதாபாத்திரங்களும் மொழிகளும் மாறினாலும், அவரது நடிப்பின் தனித்துவம் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது.

இந்த அங்கீகாரத்தை வழங்கிய SIIMA குழுவினருக்கும், நடுவர் குழுவினருக்கும் சமுத்திரக்கனி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், ‘காந்தா’ படத்தின் இயக்குநர் செல்வமணி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

நடிப்பில் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பயணித்து வரும் சமுத்திரக்கனி, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’, மற்றும் ராஜன் வகையறா , முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா’, பூஜா அபர்ணா கொல்லூரு இயக்கத்தில் அக்ஷய் கண்ணா நடிக்கும் ‘மகாகாளி’, மஞ்சு மனோஜ் உடன் டேவிட் ரெட்டி மற்றும் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘NBK 111’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மேலும், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் அதேபோல், பிரசாந்த் வர்மாவின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகும் ‘மகாகாளி’ திரைப்படத்திலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே, சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் ‘School Bus’ திரைப்படத்தில் சசிகுமார்,கிச்சா சுதீப் , மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்கில் ஏற்கனவே வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழிலும் ‘School Bus’ திரைப்படம் குறித்த பிரம்மாண்டமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Categories
Cinema News

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சியான் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘பவர்ஹவுஸ்’!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சியான் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘பவர்ஹவுஸ்’!

அட்டகாசமான வீடியோவுடன் தலைப்பை அறிவித்த படக்குழு – கமர்ஷியல் ஆக்ஷன் விருந்துக்கு தயாராகும் படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தனது புதிய படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பிட்டுள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என்ற தற்காலிகப் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, ரசிகர்களை கவரும் வகையிலான அட்டகாசமான வீடியோ மூலம் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதற்கு முன்பு விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணியில் வெளியான ‘இருமுகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘பவர்ஹவுஸ்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ, ஒரு அழகான குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் வகையில் தொடங்குகிறது. கல்யாண ஆர்டர் ஒன்றுக்காக சமையல் நடைபெறும் அழகான வீட்டிற்குள் விக்ரம் நுழைவதில் இருந்து காட்சிகள் நகர்கின்றன. தொடர்ந்து அந்த வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். சம்யுக்தா ஹெக்டே, வி.டி.வி. கணேஷ், ஊர்வசி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இடம்பெறும் அந்தப் பகுதி, ஒரு அமைதியான, மகிழ்ச்சியான குடும்பத்தின் சூழலை அழகாக வெளிப்படுத்துகிறது.

ஆனால், வீடியோவின் அடுத்த நொடியிலேயே மொத்த சூழலும் தலைகீழாக மாறுகிறது. குடும்பப் பின்னணியில் இருந்து அதிரடியான ஆக்ஷன் உலகத்திற்குள் காட்சிகள் திடீரென பயணிக்கின்றன. விக்ரம் ஒரு பூட்டிய அறையைத் திறந்து உள்ளே செல்வதும், அங்கு அடிபட்டு கிடக்கும் அடியாட்களுடன் அவர் பேசும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. இதன் மூலம் ‘பவர்ஹவுஸ்’ என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில் விக்ரமின் கதாபாத்திரத்தின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ அமைந்துள்ளது. குடும்ப உணர்வுகளும் கமர்ஷியல் ஆக்ஷனும் இணைந்த இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

‘பவர்ஹவுஸ்’ அனைவரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஐடியாலஜி செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இணைந்த படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி. சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் ISC, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி, சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, நடன அமைப்பாளராக பிருந்தா, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராக தேனி முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சியான் விக்ரமின் அடுத்த படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, குடும்பப் பின்னணியில் தொடங்கி அதிரடியான ஆக்ஷன் காட்சிகளாக மாறும் வீடியோவும், ‘பவர்ஹவுஸ்’ என்ற தலைப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

Categories
Cinema News

“I am sure Enna Vilai will remain a memorable film for cinema lovers” – Actress Nimisha Sajayan

“I am sure Enna Vilai will remain a memorable film for cinema lovers” – Actress Nimisha Sajayan.

Acclaimed actress Nimisha Sajayan has consistently stood out for the remarkable naturalism and emotional depth she brings to every character. With an eclectic body of work spanning multiple languages and industries, she has steadily established herself as one of the most compelling performers of her generation. Her recent performances, including the much-appreciated Hindi release Babita Singh Reporting, has further reflected her ability to inhabit vastly different characters with complete conviction. As Enna Vilai heads towards its theatrical release, the actress is receiving encouraging appreciation from the early previews and press screenings, particularly for the emotional dimension of her character.

“When Sajeev narrated the story to me, he didn’t tell me which character he had in mind for me. He simply said, ‘Okay, now you pick.’ There were two beautifully written characters, and Rishi’s character was also brilliantly written. So, I was genuinely curious and a little sceptical about whether he was considering me for Vijayalakshmi’s character or role of Kanchana. But honestly, I was happy either way. I was completely open to taking up Viji’s character as well because I really liked the space the character offered..”

“But I already had a soft corner for Kanchana’s character. So, when Sajeev finally told me that the character was Kanchana, I was overwhelmed. I was almost in tears. I just hugged him and asked him, ‘Why did you do this?’ I wasn’t sure which character he was going to offer me because both were so beautifully and strongly written. But the moment he said, ‘It’s you,’ it became a very emotional moment for me. The beauty of Enna Vilai is that every character has a deep emotional arc. I didn’t have many combination scenes with Karunaas sir, but his performance is extraordinary. Vijayalakshmi’s character is also very hard-hitting, and she has excelled as a performer. I am so glad that the press and media fraternity has received the film so warmly. It is a bliss to receive such heartfelt appreciation for my character. Director Sajeev deserves all the credit for bringing these characters to life. I am sure Enna Vilai will remain a memorable film for cinema lovers.”

Rooted in a socially relevant premise, Enna Vilai follows a man whose means of survival is tied to the coins devotees offer to the sea near Rameswaram. What begins as a struggle for dignity and livelihood gradually develops into a larger legal battle, bringing questions of justice, survival and human dignity into sharp focus.

The film brings together an ensemble cast featuring Karunaas, Nimisha Sajayan, Vijayalakshmi Veeramani, Saasha, Chiththa Darshan, Poornima Bhagyaraj, Y.G. Mahendran, Motta Rajendran, Nizhalgal Ravi, Praveena, Mohan Ram, Chetan Kumar, Kavithalaya Krishnan, Kamalesh, Goli Soda Pandi, J.S. Kavi, Swaminathan, Deepa Shankar, Kavi Nakkalites and others.

Written and directed by National Award-winning filmmaker Sajeev Pazhoor, Enna Vilai is produced by Githesh V under the banner of Kalamaya Films. The film features music by Sam C.S., cinematography by Alby Antony and editing by Sreejith Sarang. Enna Vilai is set to arrive worldwide in theatres on September 17, 2026.

“என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

கவனம் ஈர்க்கும் கதைக்களம் மற்றும் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் திறமையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பாராட்டு பெற்று வருபவர் நடிகை நிமிஷா சஜயன். பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர், தனது தலைமுறையின் திறமையான நடிகர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்திப் படமான ’பபிதா சிங் ரிப்போர்ட்டிங்’ உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது மாறுபட்ட கதாபாத்திரங்கள் இவரது நடிப்பு திறனுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இந்த படங்கள் வரிசையில் ‘என்ன விலை‘ திரைப்படமும் இணைய இருக்கிறது. படத்தின் முன்னோட்டக் காட்சிகள் மற்றும் பத்திரிகையாளர் திரையிடல்களில் கிடைத்துவரும் வரவேற்பு, படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

நிமிஷா சஜயன் பகிர்ந்து கொண்டதாவது, “சஜீவ் என்னிடம் கதையைச் சொன்னபோது, எனக்காக எந்தக் கதாபாத்திரத்தை மனதில் வைத்திருக்கிறார் என்பதை அவர் சொல்லவில்லை. ‘சரி, இப்போது நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள்’ என்று மட்டும் கூறினார். இரண்டு கதாபாத்திரங்களும் மிக அழகாக எழுதப்பட்டிருந்தன. ரிஷியின் கதாபாத்திரமும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனால், விஜயலட்சுமி அல்லது காஞ்சனா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேனா என்ற ஆர்வம் இருந்தது. ஆனால், நேர்மையாகச் சொல்வதென்றால், எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டிருப்பேன். விஜியின் கதாபாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருந்தேன். ஏனென்றால், அந்தக் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆனால், காஞ்சனா கதாபாத்திரமும் எனக்கு பிடித்திருந்தது. அதனால், காஞ்சனா கதாபாத்திரத்தில் நான் நடிக்க போவதாக சஜீவ் என்னிடம் சொன்னபோது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. அவரைக் கட்டிப்பிடித்து, ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டேன். இரண்டு கதாபாத்திரங்களுமே மிகவும் அழகாகவும், வலுவாகவும் எழுதப்பட்டிருந்ததால், எந்தக் கதாபாத்திரத்தை அவர் எனக்கு தரப் போகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ‘அது உங்களுக்கான கதாபாத்திரம்’ என்று அவர் சொன்ன அந்த நொடி, எனக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணமாக அமைந்தது.

’என்ன விலை’ திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஆழமான உணர்வுப்பூர்வமான பயணம் உள்ளது. கருணாஸ் சாருடன் எனக்கு அதிகமான காட்சிகள் இல்லை. ஆனால், அவரது நடிப்பு அசாத்தியமானது. விஜயலட்சுமி கதாபாத்திரமும் மிகவும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவரும் சிறப்பாக நடித்துள்ளார். பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் திரைப்படத்தையும் என் கதாபாத்திரத்தையும் பாராட்டியுள்ளது மகிழ்ச்சி. இந்தக் கதாபாத்திரங்களை உயிரோட்டமாக உருவாக்கியதற்கான முழுப் பாராட்டும் இயக்குநர் சஜீவுக்கே சேரும். ’என்ன விலை’ திரைப்படம் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நினைவில் நிற்கும் படமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

சமூக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியில் உருவாகியுள்ள ‘என்ன விலை’, ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டது. கண்ணியத்துடனும் வாழ்வாதாரத்துக்காகவும் அவர் நடத்தும் போராட்டம், இறுதியில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.

இந்தப் படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், ஷாஷா சிவகுமார், விஜயலட்சுமி வீரமணி, சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை கலாமயா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜிதேஷ் வி தயாரித்துள்ளார். படத்தின் இசையை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஆல்பி ஆண்டனி மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஸ்ரீஜித் சாரங் கவனித்துள்ளார். ‘என்ன விலை’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories
Cinema News

எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் சாதனை வாழ்க்கை திரைப்படமாகிறது !

ஒரு சகாப்தம் மீண்டும் திரைக்கு வருகிறது !!

எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் சாதனை வாழ்க்கை திரைப்படமாகிறது !

சில குரல்கள் அவ்வப்போது கேட்கப்படும். சில குரல்கள் நினைவில் நிலைத்திருக்கும். ஆனால், ஒரு நாட்டின் ஆன்மாவோடு இரண்டறக் கலந்துவிடும் குரல்கள் வெகு சிலவே. அத்தகைய மகத்தான கலை ஆளுமைகளில் ஒருவர் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா.

மொழி, எல்லை, தலைமுறை என அனைத்து வரம்புகளையும் கடந்து அவரது இசை பயணித்தது. கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் பக்தியையும் உணர்வையும் விதைத்த அவரது குரல், இந்தியாவின் கலாச்சார அடையாளத்தின் அழியாத அங்கமாக மாறியது. அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது இசை, வீடுகள், கோயில்கள், இசை அரங்குகள் என தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அவரது 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான பயோபிக் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடைபெறும் இந்த அறிவிப்பு, இந்திய பாரம்பரிய இசை வரலாற்றுடன் ஆழமாக தொடர்புடைய இந்த இடத்தை மேலும் சிறப்பிக்கிறது.

பல ஆண்டுகளின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

இத்தகைய மிகப்பெரிய ஆளுமையின் வாழ்க்கையை திரையில் பதிவு செய்வது சாதாரணமான முயற்சி அல்ல. அவரது வாழ்க்கையை உண்மைத் தன்மையுடனும் உரிய மரியாதையுடனும் சொல்ல, தேவையான உரிமைகள், அனுமதிகள், இலக்கிய ஆதாரங்கள் மற்றும் குடும்பத்தினருடனான தொடர்புகள் என பல்வேறு பணிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்த நீண்ட பயணம் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் வாழ்க்கை இனி சினிமா எனும் மொழியின் வழியாக உலகம் முழுவதும் சென்றடைய இருக்கிறது.

இரு தலைமுறைகளை இணைக்கும் இசைப் பாலம்

இந்தப் படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் காலத்தால் அழியாத இசை மரபை இன்றைய தலைமுறையுடன் இணைக்கும் முயற்சி அமைந்துள்ளது.

இன்றைய தலைமுறையின் முன்னணி இசை ஆளுமைகளில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இளைஞர்களை உடனடியாக ஈர்க்கும் வகையிலும், அதே நேரத்தில் உணர்வுபூர்வமான மற்றும் கலாச்சாரத் தொடர்பை தக்கவைக்கும் வகையிலும் இசையை உருவாக்கும் அனிருத்தின் பங்களிப்பு, எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசை உலகத்தையும் புதிய தலைமுறையையும் இணைக்கும் முக்கிய பாலமாக அமையும்.

எம்.எஸ். சுப்புலட்சுமியாக ராஷ்மிகா மந்தனா

இந்த பிரம்மாண்டமான பயணத்தின் மையக் கதாபாத்திரமாக ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

புதிய தலைமுறையின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகாவுக்கு, இசையையும் சினிமாவையும் தாண்டி இந்திய மக்களின் மனங்களில் இடம்பெற்ற ஒரு மாபெரும் ஆளுமையை திரையில் பிரதிபலிக்கும் மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவரது நடிப்பின் மூலம், உலகம் அறிந்த அந்த புகழ்பெற்ற குரலுக்குப் பின்னால் இருந்த பெண்ணை — அவரது உணர்வுகள், ஆசைகள், போராட்டங்கள், மனவலிமை மற்றும் ஆன்மிகப் பயணம் ஆகியவற்றை புதிய தலைமுறைக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மகத்தான வாழ்க்கையை சொல்லும் நட்சத்திரக் கூட்டணி

எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் சாதனை வாழ்க்கையையும் மரபையும் அனைத்து தலைமுறை ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கில், தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பன்னி வாசு ஆகிய மூவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக அறியப்படும் கவுதம் தின்னனூரி இப்படத்தை இயக்குகிறார்.

இது வெறுமனே ஒரு பாடகியின் வாழ்க்கைக் கதை அல்ல.

இசையை பக்தியாகவும், பக்தியை உணர்வாகவும், அந்த உணர்வை தலைமுறைகளை கடந்து வாழும் மரபாகவும் மாற்றிய ஒரு பெண்ணின் வாழ்க்கைக் கதை.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளில் தொடங்கும் புதிய அத்தியாயம்

அவரது 110-வது பிறந்தநாளில் இந்தத் திரைப்படம் அறிவிக்கப்படுவது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இன்றும் உலகம் முழுவதும் எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் இசை மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், அவரது அசாதாரண வாழ்க்கைப் பயணத்தை வருங்கால தலைமுறைகளுக்காகப் பதிவு செய்து வழங்கும் பொறுப்பை சினிமா ஏற்றுக்கொள்கிறது.

ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய இசை அரங்குகளை நிரப்பிய அந்தக் குரல், இப்போது வெள்ளித்திரையிலும் புதிய தலைமுறையினரை சென்றடைய இருக்கிறது.

எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் கதை இனி ஒரு நினைவாக மட்டும் இருக்காது. அது ஒரு திரைப்பட மரபாக மாறுகிறது.

எம்.எஸ். – அழிக்க முடியாத வரலாறு திரையில் வருகிறது

A LEGEND RETURNS TO THE SILVER SCREEN

M.S. Subbulakshmi Amma’s Extraordinary Life to be Immortalised in Cinema

Some voices are heard.
Some voices are remembered.
And then there are voices that become a part of the soul of a nation.

Bharat Ratna M.S. Subbulakshmi Amma was one such extraordinary phenomenon.

Her music transcended language, geography and generations. Her voice carried the devotion of millions, while her life became an inseparable part of India’s cultural heritage. Even decades after her passing, her music continues to live in homes, temples, concert halls and in the hearts of generations.

Today, an important chapter in that immortal legacy begins.

On the occasion of her 110th birth anniversary, the much-awaited biopic of M.S. Subbulakshmi Amma is being officially announced at The Music Academy, Chennai, a venue deeply connected to the history of Indian classical music.

Bringing a legend of such stature to the silver screen has been a journey of immense perseverance. For years, an extraordinary effort has gone into bringing together the necessary rights, permissions, literary sources and family associations required to tell her story with the respect and authenticity it deserves.

That long journey has finally reached a beautiful moment.

The life of M.S. Subbulakshmi Amma will now be presented to the world through the language of cinema.

A Bridge Between Two Generations

One of the most exciting aspects of this ambitious film is its attempt to connect the timeless musical legacy of M.S. Subbulakshmi Amma with a new generation.

Anirudh Ravichander, one of the most celebrated and influential music icons of today’s generation, comes on board as the music composer. Known for his ability to create music that speaks instantly to the youth while retaining a strong emotional and cultural connect, Anirudh brings a unique opportunity to build a musical bridge between the timeless world of M.S. Subbulakshmi Amma and today’s generation.

At the heart of this cinematic journey will be Rashmika Mandanna, who will portray M.S. Subbulakshmi Amma.

Rashmika, one of the most loved and celebrated actresses of the new generation, takes on the extraordinary responsibility of portraying an icon whose presence extends far beyond cinema and music. Through her performance, the film seeks to bring the woman behind the legendary voice — her emotions, aspirations, struggles, strength and spiritual journey — closer to a new generation of audiences.

A Legendary Team to Tell a Legendary Life

The film brings together three accomplished producers — Allu Aravind, Rockline Venkatesh and Bunny Vasu — with a shared vision of taking the extraordinary life and legacy of M.S. Subbulakshmi Amma to audiences across generations.

The film will be directed by Gowtam Tinnanuri, bringing his distinctive storytelling sensibility to a life that is as inspiring as it is monumental.

This is not merely a story about a singer.

It is the story of a woman who transformed music into devotion, devotion into emotion, and emotion into a legacy that continues to belong to India.

A Moment That Belongs to M.S.

The official announcement on her 110th birth anniversary makes the occasion even more significant.

At a time when the world continues to discover and rediscover M.S. Subbulakshmi Amma’s music, cinema now takes the responsibility of preserving and presenting her extraordinary journey for generations yet to come.

A voice that once filled the world’s greatest concert halls will now find a new home on the silver screen.

M.S. Subbulakshmi Amma’s story is no longer just a memory.
It is becoming a cinematic legacy.

M.S. – A Legacy on Screen.

Categories
Cinema News

’Mandavetti’ Teaser Unleashes a Chilling Supernatural Mystery with Komalee Prasad at the Heart of the Darkness

’Mandavetti’ Teaser Unleashes a Chilling Supernatural Mystery with Komalee Prasad at the Heart of the Darkness

Saranraj Senthilkumar’s Supernatural Crime Thriller Promises an Eerie World of Fear, Folklore and the Unknown.

The mystery surrounding ‘Mandavetti’ deepens with the release of its two-minute teaser, which plunges audiences into a disturbing world where fear arrives without warning and the line between the known and the supernatural begins to disappear. Directed by Saranraj Senthilkumar, the teaser wastes no time in establishing an unsettling atmosphere, opening with a woman in a trance-like state whose presence immediately creates an inexplicable sense of dread.

From there, the teaser unfolds through a series of mysterious happenings, fragmented conversations and unsettling glimpses of characters attempting to make sense of something far beyond their understanding. At the centre of these conversations is ‘Senji Saamy’, an enigmatic force whose presence appears to be closely connected to the strange events unfolding around them. Rather than revealing the answers, the teaser carefully leaves the mystery intact, creating the feeling that every revelation could lead to something far more disturbing.

The visual language of ‘Mandavetti’ plays a crucial role in building this world. Shadows, locations, expressions and fleeting images combine with Deepak Venugopal’s background score to create an atmosphere that grows increasingly ominous as the teaser progresses. The result is a glimpse that leans into psychological unease and supernatural mystery, promising a story where folklore and human fear collide.

With Komalee Prasad leading the film, the teaser also offers glimpses of the intense transformation that the actress has undergone for a character steeped in vulnerability, rage, suffering and mysticism. Her presence gives the supernatural world an emotional centre, while the teaser’s fragmented storytelling leaves audiences with one compelling question: What exactly is ‘Senji Saamy’, and why has its presence begun to haunt this world?

Written, directed and produced by Saranraj Senthilkumar under the banner of Tuskers Den Pictures, Mandavetti is conceived as a dark supernatural crime thriller blending psychological tension, folklore and raw human emotions. The film explores the mysterious mythology surrounding “Senji,” a fierce local deity, whose presence drives the story into deeply unsettling and emotionally charged territory.

The film features Prakash Manithan as the cinematographer, Guna Palinisamy as the editor and Deepak Venugopalas the music director. Gowtham has choreographed the stunts, while Sangeetha Sen is the costume designer. Tony J is handling sound mixing, Balaganghadaran is overseeing DI grading, Vijayan is responsible for VFX. Mahendran Kandasamy is the production manager and Narmada is the makeup artist. The film’s PROs are Suresh Chandra and Abdul Nassar.

நடிகை கோமலி பிராத் நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் நேச்சுரல் திரில்லரான ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அமானுஷ்ய கிரைம் த்ரில்லர் திரைப்படம் அச்சம், நாட்டுப்புற நம்பிக்கைகள் மற்றும் அறியப்படாத மர்மங்களை உள்ளடக்கிய ஒரு அமானுஷ்ய உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

தற்போது வெளியாகியுள்ள ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் இரண்டு நிமிட டீசர் மூலம் இந்த திரைப்படத்தை சுற்றியுள்ள மர்மம் மேலும் தீவிரமடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் அச்சம் தோன்றக்கூடிய பதற்றமான உலகத்திற்குள் பார்வையாளர்களை இந்த டீசர் அழைத்துச் செல்கிறது. அறிந்தவற்றுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையிலான எல்லை மெல்ல மறைந்து போகும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர், மயக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் காட்சியுடன் தொடங்குகிறது. அவரது இருப்பே உடனே அச்சத்தை ஏற்படுத்துகிறது.

அதனைத் தொடர்ந்து, மர்மமான சம்பவங்கள், துண்டு துண்டான உரையாடல்கள் மற்றும் தங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியைப் புரிந்துகொள்ள முயலும் கதாபாத்திரங்களின் பதற்றமான காட்சிகள் என டீசர் நகர்கிறது. இந்த உரையாடல்களின் மையத்தில் ‘செஞ்சி சாமி’ எனப்படும் மர்மமான சக்தி இடம்பெறுகிறது. சுற்றிலும் நிகழும் விசித்திரமான சம்பவங்களுடன் இந்த சக்திக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. ஆனால், டீசர் எந்தவொரு விடையையும் வெளிப்படையாகக் கூறாமல் மர்மத்தை அப்படியே தக்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிய்ய்ம் அதைவிட பயமுறுத்தும் மற்றொரு உண்மைக்கு அழைத்து செல்லும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் காட்சியமைப்பும் இந்த அமானுஷ்ய உலகத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இருள் சூழ்ந்த நிழல்கள், கதைக்களத்திற்கேற்ற இடங்கள், கதாபாத்திரங்களின் முகபாவனைகள் மற்றும் கணநேரத்தில் தோன்றி மறையும் காட்சிகள் ஆகியவை தீபக் வேணுகோபாலின் பின்னணி இசையுடன் இணைந்து டீசரின் பதற்றமான சூழலை மேலும் அதிகரிக்கின்றன. உளவியல் ரீதியிலான அசௌகரிய உணர்வையும் அமானுஷ்ய மர்மத்தையும் முன்னிறுத்தும் இந்த டீசர், நாட்டுப்புற நம்பிக்கைகளும் மனிதர்களின் அச்சமும் மோதும் ஒரு கதையை எதிர்பார்க்க வைக்கிறது.

திரைப்படத்தின் கதாநாயகியாக கோமலி பிரசாத் நடித்துள்ளார். பலவீனம், கோபம், வேதனை மற்றும் ஆன்மிக மர்மம் என பல்வேறு உணர்வுகளை கொண்ட கதாபாத்திரமாக திரையில் தோன்ற அவர் மேற்கொண்டுள்ள மாற்றத்தையும் டீசர் காட்டுகிறது. மேலும், செஞ்சி சாமி என்பது உண்மையில் என்ன, இந்த உலகையே அதன் இருப்பு ஏன் ஆட்டிப்படைக்கத் தொடங்கியுள்ளது என்ற கேள்விகளையும் டீசர் பார்வையாளர்கள் மத்தியில் எழுப்புகிறது.

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி, தயாரித்துள்ள ‘மண்டவெட்டி’ திரைப்படம், உளவியல் ரீதியான பதற்றம், நாட்டுப்புற நம்பிக்கைகள் மற்றும் மனித உணர்வுகளை ஒருங்கிணைக்கும் இருண்ட அமானுஷ்ய கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது. செஞ்சி எனப்படும் சக்திவாய்ந்த உள்ளூர் தெய்வத்தைச் சுற்றியுள்ள மர்மமான தொன்மக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஆழமான அச்சத்தையும் உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை நகர்கிறது.

இப்படத்திற்கு பிரகாஷ் மனிதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். குணா பழனிசாமி படத்தொகுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். தீபக் வேணுகோபால் இசையமைத்துள்ளார். சண்டைக் காட்சிகளை கெளதம் வடிவமைத்துள்ளார். சங்கீதா சென் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். டோனி ஜெ ஒலி கலவைப் பணியை மேற்கொண்டுள்ளார். பாலகங்காதரன் டிஐ கிரேடிங் பணிகளை கவனித்துள்ளார். விஜயன் விஎஃப்எக்ஸ் பணிகளை மேற்கொள்கிறார். மகேந்திரன் கந்தசாமி தயாரிப்பு மேலாளராகவும், நர்மதா மேக்கப் கலைஞராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் மக்கள் தொடர்பாளர்களாக சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

Categories
Cinema News

‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

V6 Film Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் இயக்கத்தில், மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

முன்னணி இயக்குநர்களான ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். தனது முதல் படத்திலேயே சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளுக்கான போராட்டத்தையும் அழுத்தமாகப் பேசும் படைப்பை உருவாக்கியுள்ளார்.

தூய்மை பணியாளராக வாழ்வாதாரத்திற்காக போராடும் ஒரு தாய், தனது மகன் செஸ் விளையாட்டில் சாதித்து கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவுக்காக துணை நிற்கிறார். வறுமை மற்றும் சமூகத்தில் நிலவும் பல்வேறு தடைகளைக் கடந்து, தன் மகனின் கனவை நனவாக்க அந்த தாய் எப்படி போராடுகிறார் என்பதே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது. வழக்கமான கமர்ஷியல் பாதையிலிருந்து விலகி, சமூகத்தின் மற்றொரு பக்கத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், சதுரங்க கட்டங்கள் நிறைந்த பின்னணியில் தாயும் மகனும் வெவ்வேறு உணர்வுகளுடன் இடம்பெற்றுள்ளனர். செஸ் காயை கையில் ஏந்தியபடி சிறுவன் நம்பிக்கையுடன் மேல்நோக்கிப் பார்க்க, மறுபுறம் தாய் கவலையும் வலியும் கலந்த பார்வையுடன் காட்சியளிக்கிறார். அவர்களைச் சுற்றிலும் நகரும் செஸ் காய்கள், கீழ்ப்பகுதியில் தாய் தனது மகனுடன் சைக்கிளில் பயணிக்கும் காட்சி என போஸ்டர் முழுவதும் கதையின் போராட்டத்தையும் கனவையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இப்படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அர்ஜுன் ரவி – ஞானசேகர் ஆர்.எஸ். ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார். ரஞ்சீத் சி.கே. படத்தொகுப்பையும், ராகவன் சஞ்சீவி கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

திண்டுக்கல், மதுரை, தடா மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
Cinema News

பிரம்மாண்டமாக நடைபெற்ற “லெனின் பாண்டியன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!

பிரம்மாண்டமாக நடைபெற்ற “லெனின் பாண்டியன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!

T.G. தியாகராஜன் வழங்க, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், மணல் கொள்ளையை மையமாக வைத்து நம் மண்ணின் வாழ்வியலையும் எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது.

இப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரைப் பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். திரைப் பிரபலங்கள், படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர், “லெனின் பாண்டியன்” படத்தின் கதைக்களம், உருவாக்கம், நடிகர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

விநியோகஸ்தர் சங்கம் சார்பில் அருள்பதி பேசியதாவது:

“சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு இந்தப் படம் இன்னொரு வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறேன். இன்று மேடையில் பேசிய விநியோகஸ்தர் சதீஷ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ‘லெனின் பாண்டியன்’ படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது:

“‘லெனின் பாண்டியன்’ படத்தை கடந்த சில மாதங்களாகவே மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். சத்யஜோதி பிலிம்ஸ் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும். முதலில் தியாகராஜன் சாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக தேசிய விருது பெறவிருக்கும் அவருக்கு வாழ்த்துகள். தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருது பெறுவது சாதாரண விஷயம் கிடையாது. சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக மதிப்புகளைப் பேசும் அந்த நிறுவனத்தின் அடுத்த படமாக ‘லெனின் பாண்டியன்’ வருவது மகிழ்ச்சி. சிவாஜி சார் குடும்பத்தில் இருந்து விக்ரம் பிரபு ‘சிறை’ படத்தில் காவலர் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றது போல, தர்ஷனும் இந்தப் படத்தில் காவலர் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். தர்ஷனுக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு இன்னும் நிறைய நல்ல ஹீரோக்கள் தேவை; முக்கியமான ஹீரோவாக தர்ஷன் கணேசன் வர வேண்டும்.

இளையராஜா சாரின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. பாலச்சந்திரனின் இயக்கமும், டிரெய்லரும் சிறப்பாக இருக்கின்றன. கங்கை அமரன் சார் இந்த வயதிலும் இவ்வளவு எனர்ஜியுடன் நடிப்பதைப் பார்க்கும்போது, அவருக்கு வயதே இல்லை என்று சொல்ல வேண்டும்; இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். ரோஜா மேம் மீண்டும் திரையில் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அட்டகாசமான கூட்டணியில் உருவாகியுள்ள ‘லெனின் பாண்டியன்’ மிகப்பெரிய வெற்றிப் படமாகவும், சத்யஜோதி பிலிம்ஸுக்கு ஒரு பிளாக்பஸ்டராகவும் அமைய என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

தயாரிப்பாளர் அம்மா சிவா பேசியதாவது:

“தமிழ் சினிமாவில் மிகத் தரமான படங்களைத் தொடர்ந்து தயாரிக்கும் நிறுவனமாக சத்யஜோதி பிலிம்ஸ் இருக்கிறது. தியாகு சாரின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இதற்கு முக்கியக் காரணம். ‘லெனின் பாண்டியன்’ படத்தில் கங்கை அமரன் சாரின் நடிப்பு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. படப்பிடிப்புக்கு முன்பு இருந்தவரை விட, படப்பிடிப்பு தொடங்கிய பிறகு அவரது தோற்றமும் வாழ்க்கை முறையும் மாறி, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். படம் முடிந்த பிறகும் அந்தக் கதாபாத்திரம் நம்முடன் பயணித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட ஆசை.

ரோஜா எனது குடும்ப நண்பர். தன்னுடைய மிகப்பெரிய இமேஜைத் தாண்டி, இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். இயக்குநர் பாலச்சந்திரன் சிறந்த எழுத்தாளராகத் தெரிகிறார்; படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் கைதட்ட வைக்கும் வசனங்கள் இருக்கின்றன. சமூகத்துக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை மிகவும் சுவாரஸ்யமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார். சிவாஜி குடும்பத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் ஒரு பொக்கிஷம் தர்ஷன் கணேசன். அவரது நடிப்பு மிகவும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் இருக்கிறது; சிவாஜி சாரின் ஆரம்பகால நடிப்பை நினைவுபடுத்தும் வகையில் இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. அதேபோல், அவரை சிறந்த முறையில் வழிநடத்தும் ராம்குமார் சார் போன்ற தயாரிப்பாளர் நட்பான மனிதர் இருப்பதால், தர்ஷனின் பயணம் இன்னும் சிறப்பாக அமையும். ‘லெனின் பாண்டியன்’ மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று அனைவரின் சார்பிலும் வாழ்த்துகிறேன்.”

தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் பேசியதாவது:

“தியாகு சாருடன் நான் மிகவும் நெருக்கமாகப் பழகி வருகிறேன். அவர் ஒரு படத்தைத் தேர்வு செய்திருக்கிறார் என்றால், அது நிச்சயம் நல்ல படமாகவும் வெற்றிப் படமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. ‘லெனின் பாண்டியன்’ படத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். தேசிய விருது பெற்றிருக்கும் தியாகு சாருக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செல்வி மேமும் எனக்கு மிகவும் நெருக்கமானவர். தியாகு சாரின் வெற்றிக்குப் பின்னால் அவருடைய பங்களிப்பும் முக்கியமானது. செல்வி மேம், அர்ஜுன், செந்தில் உள்ளிட்ட தயாரிப்புக் குழுவினருக்கும், இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

ஜோதிடர் ஷெல்வீ பேசியதாவது:

“ஜோதிடருக்கு நல்ல நேரம், கெட்ட நேரம் என்று எல்லாம் இருக்கும். ஆனால் என்னைப் பொறுத்தவரை கடந்த 40 ஆண்டுகளாக எப்போதும் அண்ணனாக இருக்கும் தியாகராஜன் சார்தான் எனக்கு எல்லாம். அவர் கொடுத்த வாய்ப்புதான் இந்தப் படம். அண்ணன் சொல்லிவிட்டால் அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. பாலா சார் என்ன சொன்னாரோ அதைச் செய்து, அவர் நிறைய திட்டியதன் மூலமாகத்தான் இன்று நடிகனாக நிற்கிறேன். அதற்காக பாலா சாருக்கு என்னுடைய நன்றி.”

நடிகை அர்ச்சனா பேசியதாவது:

“என் பணிகளில் நான் தொடர்ந்து என்னுடைய முழு முயற்சியையும் கொடுத்து வருகிறேன். அதற்கேற்ற வாய்ப்புகளும் என்னைத் தேடி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் போன்ற ஒரு பழமையான, புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக இயக்குநர் பாலா சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன். தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருப்பதை அறிந்திருக்கிறேன். படத்தை முழுமையாகப் பார்க்க நாங்களும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம். நன்றி.”

இயக்குநர் பி. வாசு பேசியதாவது:

“கங்கை அமரன் எப்போதும் ஜாலியாக இருப்பவர். ஆனால் இந்தப் படத்தின் டிரெய்லரில் அவரை மிகவும் கோபமான, அழுத்தமான கதாபாத்திரத்தில் பார்த்தது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்த தியாகராஜன் சார் மற்றும் இயக்குநர் பாலச்சந்திரனுக்கு வாழ்த்துகள். அமரன் எங்களை காரில் அழைத்துச் சென்று, ‘இவர்கள் இருவரும் நன்றாக ஓடுவார்கள்; இவர்களை வைத்து படம் எடுங்கள், இயக்குநர்களாக அறிமுகப்படுத்துங்கள்’ என்று சொல்லி எங்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கிய மிகச்சிறந்த மனிதர். இளையராஜா சாருடன் அமர்ந்து இசையமைப்பின் போது அவர் சொன்ன மெட்டுக்கு உடனடியாக வரிகள் எழுதுவது, ‘ஆனந்த ராகம்’, ‘கோடை காலக் காற்றே’ போன்ற அற்புதமான பாடல்களை உருவாக்கியது என இன்றும் மறக்க முடியாது.

நானும் அமரனும், தியாகராஜன் சாரும் பல ஆண்டுகளாக குடும்ப நண்பர்களாகப் பழகி வருகிறோம். இத்தனை ஆண்டுகள் நட்பு தொடர்ந்ததற்குக் காரணம் உண்மை மட்டும்தான். ஒருவர் உண்மையாக இருந்தால் வேறு எதுவுமே தேவையில்லை; நட்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்தக் காலத்தில் சினிமாவே ஒரு குடும்பம் போல இருந்தது. இன்றும் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றால் குடும்பத்தில் ஒருவரைப் போலத்தான் பழகுகிறோம். அப்படிப்பட்ட அற்புதமான நட்பிலிருந்து இன்று அமரன் நடிகராக அறிமுகமாகி இருப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய பெயரும் வெற்றியும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.” அனைவருக்கும் வாழ்த்துகள்.

நடிகர் இளவரசு பேசியதாவது:

“லெனின் பாண்டியன்” என்ற தலைப்பைக் கேட்டவுடன், 1990-க்கு முன்பு மதுரையில் பிறந்தவர்களுக்கு ஒரு சைக்கிள், சிவப்புக் கொடி, தீக்கதிர் பத்திரிகை ஆகியவைதான் நினைவுக்கு வரும். அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர்களில் இளையராஜா சார், கங்கை அமரன் அண்ணா, பாஸ்கர் சார் உள்ளிட்டோருக்கும் இந்தப் படத்தின் தலைப்புக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. நான் மதுரையில் பிறந்து சினிமாவுக்கு வருவதற்கு ஒரு பாதையை அமைத்துக் கொடுத்தவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும்.

கங்கை அமரன் அண்ணாவின் பாடல்களும், இளையராஜா சாரின் இசையும் எங்களுடைய தலைமுறைக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. நான் சென்னைக்கு வந்து சினிமாவில் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் மறக்க முடியாதவை. ஒருகட்டத்தில் கங்கை அமரன் ஹீரோவாகவும், அவரது மகன் இயக்குநராகவும் இருக்கும் படத்தில் நான் நடித்திருக்கிறேன். இளையராஜா சார் இசையமைத்த படங்களில் கேமராமேனாகவும், நடிகராகவும் பணியாற்றியிருக்கிறேன். பாரதிராஜா, இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் போன்றவர்கள் எங்களுக்காக உருவாக்கிய அந்தப் பாதைதான் மதுரையில் இருந்து பலரும் சினிமாவுக்கு வருவதற்கு காரணமாக அமைந்தது.

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார் பற்றியும் குறிப்பாகச் சொல்ல வேண்டும். கார்கில் போர் காலத்தில் மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியை எவ்வித ஈகோவும் இல்லாமல், ஒவ்வொருவரையும் அணுகி ஒருங்கிணைத்து நடத்துவது எப்படி என்பதை அவரிடம் அப்போது கற்றுக்கொண்டேன். தயாரிப்பிலும் அவர் காட்டும் நேர்த்தி குறிப்பிடத்தக்கது. ஒரு படத்துக்கான ஒவ்வொரு செலவையும் திட்டமிட்டு பட்ஜெட் போட்டு செயல்படுவது சத்யஜோதி நிறுவனத்தின் சிறப்பு.

“லெனின் பாண்டியன்” படத்தின் இயக்குநர் பாலச்சந்திரனுக்கும், ஒளிப்பதிவாளர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய மரியாதையும் வாழ்த்துகளும். தர்ஷன் கணேசன், சிவாஜி சார் குடும்பத்திலிருந்து அறிமுகமாகியிருப்பது பெருமைக்குரிய விஷயம். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். இளையராஜா சாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இப்படத்தின் வெற்றியில் நாமும் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

இயக்குநர் கண்ணன் பேசியதாவது:

நான் கோ-டைரக்டராக பணியாற்றிய காலத்திலிருந்தே தியாகு சாருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சீரியலிலும் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். அவர் சீரியல், சினிமா என்று பிரித்துப் பார்க்காமல், நல்ல கதை, தரமான மேக்கிங், டிஸிப்ளின் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். சத்யஜோதி பிலிம்ஸ் ஒரு கதையைத் தேர்வு செய்துவிட்டாலே அதில் பாதி வெற்றி உறுதி. கதை அவரை முழுமையாக ஈர்க்க வேண்டும்; அதேபோல் படப்பிடிப்பிலும் நேர்த்தியும் ஒழுங்கும் இருக்க வேண்டும். காலை 7 மணிக்கே முதல் ஷாட் தொடங்க வேண்டும் என்ற அளவுக்கு நேரத்தை அவர் கடைப்பிடிப்பார்.

எனக்கு “ஜெயம் கொண்டான்” படத்தை இயக்கும் வாய்ப்பை தியாகு சார் வழங்கினார். அந்தப் படமும் இன்றளவும் ஒரு தரமான படமாக இருப்பதற்கு அவருடைய பங்களிப்பு முக்கிய காரணம். அதேபோல், “லெனின் பாண்டியன்” படத்தின் மூலம் பாலச்சந்திரனை அறிமுகப்படுத்தியிருப்பதும் அவருடைய மிகப்பெரிய முயற்சி. இப்படிப்பட்ட தயாரிப்பாளரின் நிறுவனத்தில் அறிமுகமாவது இயக்குநருக்கே ஒரு வெற்றிதான்.

தர்ஷனை இந்தப் படத்தில் பார்த்தபோது, பழைய காலத்து நடிகர்களை நினைவுபடுத்தும் அளவுக்கு அவரது தோற்றமும் நடிப்பும் இருக்கிறது. முதல் படத்திலேயே இவ்வளவு வலிமையான கதாபாத்திரம் கிடைத்திருப்பது அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு. அதை அவர் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார். கங்கை அமரன் சாரின் நடிப்பைப் பார்த்து உண்மையிலேயே வியந்தேன். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அற்புதமாக நடித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக அவரை நடிகராக பயன்படுத்தாதது குறித்து நமக்கே ஒரு குறை ஏற்படும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கிறது.

ரோஜா ஒரு தரமான நடிகை. இந்தப் படத்தில் அவருடைய நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது. இளையராஜா சாரின் இசையும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான பலமாக இருக்கும். இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் என அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ள இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இயக்குநர் D.D. பாலச்சந்திரன் பேசியதாவது:

இது என்னுடைய முதல் மேடை. இந்த மேடையில் ஏறுவதற்கு யார் காரணமாக இருந்தார்களோ, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மேடையாக இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன். முதல் நன்றி தியாகராஜன் சாருக்குத்தான். அனைவருக்கும் T.நகர் என்றால் தியாகராய நகர்; எனக்கு என்றென்றைக்கும் அது தியாகராஜன் நகர்தான். சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்தில் தான், “இந்தப் படத்தை நாம் பண்ணலாம்” என்று தியாகராஜன் சார் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பினால்தான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன்.

என்னைப் போன்ற ஒரு புதுமுக இயக்குநரை நம்பி இந்தப் படத்தை வழங்கிய தியாகராஜன் சாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இந்தப் படத்திற்காக நான் எவ்வளவு தயாராக இருந்தேன் என்பதும், படத்தை எந்த அளவுக்கு உருவாக்க வேண்டும் என்ற தெளிவும் அவருக்கு நன்றாகத் தெரியும். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், தியாகராஜன் சாருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் பத்ரி பேசியதாவது:

இயக்குநர் பாலச்சந்திரன் எவ்வளவு தயாராக இருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் திரைப்பட பள்ளியில் படித்திருந்தாலும், தியாகு சாரின் பள்ளி என்பது ஒரு ‘பிராக்டிக்கல் ஸ்கூல்’. அந்தப் பயிற்சியின் மூலம் எந்தத் துறைக்குச் சென்றாலும் நேரடியாகப் படம் தொடங்கும் அளவுக்கும், எந்த ஹீரோவையும் கையாளும் அளவுக்கும் அவர் தயாராக்கி விடுவார். அதே போல பாலச்சந்திரனை தியாகு சார் அந்த அளவுக்கு தயார் செய்து வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை தியாகு சார் ஓகே செய்திருக்கிறார் என்பதே பெரிய விஷயம். அவர் சாதாரணமாக எந்தக் கதையையும் உடனடியாக ஓகே செய்ய மாட்டார். நானும் அந்தக் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் ஸ்கிரிப்ட்டைத் தெரிந்து வைத்திருக்கிறேன்; சில காட்சிகளையும் பார்த்திருக்கிறேன். உண்மையிலேயே இது ஒரு ‘அவுட் ஆஃப் தி வேர்ல்ட்’ படமாகவும், சமூகத்துக்குத் தேவையான வலிமையான படமாகவும் உருவாகியிருக்கிறது.

பாலச்சந்திரனுக்கு என்னுடைய வாழ்த்துகள். “லெனின் பாண்டியன்” மூலம் நாம் பல அற்புதங்களைச் செய்யப் போகிறோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னை இவ்வளவு பேர் முன்னிலையில் நிற்க வைத்து பேசுவதற்கும் இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அண்ணா எப்போதும் நேரத்தை மிகவும் கடைப்பிடிப்பவர். நான் தினமும் சரியாக 7 மணிக்கு எனது ஸ்டூடியோவிற்கு செல்வேன். ஒருநாள் ஐந்து நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. காரில் இருந்து இறங்கும்போது சிவாஜி அண்ணா நின்றுகொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், “ராசா, நீயுமா லேட்டு?” என்று கேட்டார். இத்தனை ஆண்டுகளாக நேரத்துக்கு வந்து கொண்டிருக்கும் என்னை விட சீக்கிரம் வந்து என்னிடமே இப்படிக் கேட்கிறாரே என்று அந்த நிகழ்வை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

சிவாஜி அண்ணா நடிப்பைப் பற்றி நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார். ஒரு நடிகர் புதிதாக அறிமுகமாகும்போது, “யாருப்பா இது?” என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இருக்க வேண்டும். அதன்பிறகு அந்த நடிகரைப் பார்த்து, “யாரு இந்த ஆள்?” என்று வியக்கும் அளவுக்கு அவரது நடிப்பு வளர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய கலைஞர் சிவாஜி கணேசன்.

அவருடைய குடும்பத்திலிருந்து வந்திருக்கும் தர்ஷனின் நடிப்பை இந்தப் படத்தில் பார்த்தேன். சிவாஜி அண்ணாவின் பெயரையும், அந்த நடிப்பு வம்சாவளியையும் காப்பாற்றும் வகையில் தர்ஷன் கணேசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என்னுடைய அன்புத் தம்பி தர்ஷன் கணேசன் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். என் தம்பியை பற்றி சொல்ல வேண்டியதில்லை அவரும் நன்றாக நடித்துள்ளார்.

“லெனின் பாண்டியன்” போன்ற ஒரு மாறுபட்ட கதைக்களம் கொண்ட படத்தை உருவாக்கிய சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் D.D. பாலச்சந்திரனுக்கும், படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.

நடிகர் தர்ஷன் கணேசன் பேசியதாவது:

செப்டம்பர் 12, 2026 என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். “லெனின் பாண்டியன்” படத்தின் விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறு வயது முதலே சிவாஜி சார் படங்களைப் பார்த்தும், அவரது வசனங்களைப் பேசியும், பாடல்களைக் கேட்டும் வளர்ந்தவன் நான். நடிப்பை சீரியஸாக எடுத்துக்கொள்ளும்போது, நம்மால் நன்றாக செய்ய முடியுமா என்ற ஒரு சுய சந்தேகம் இருந்தது. அதிலிருந்து வெளியே வர கடுமையாக பயிற்சி செய்தேன். அந்த நேரத்தில் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்த என் அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி உள்ளிட்ட என் குடும்பத்தினருக்கு முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் நண்பர்கள், இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல நண்பர் வாழ்க்கைத் துணையாகக் கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்று சொல்வார்கள். எனக்கும் அப்படிப்பட்ட ஒருவர் கிடைத்திருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தியாகராஜன் சார், செல்வி மேம், செந்தில் சார், அர்ஜுன் சார் ஆகியோர் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிகுந்த நன்றி. சத்யஜோதி குடும்பத்திற்கும் உங்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

இது எனக்கு அறிமுக விழா மட்டுமல்ல, இயக்குநர் பாலச்சந்திரன் சாருக்கும் அறிமுக விழா. இந்தக் கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று நம்பிக்கை வைத்ததற்கு அவருக்கு நன்றி. கங்கை அமரன் அங்கிள், உங்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரோஜா மேம் உள்ளிட்ட படத்தின் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், எடிட்டர் நாகூரான் சார் என அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் குடும்பத்துடன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அன்பாகப் பயணித்து வரும் அனைவரும் இன்று இங்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. சிவாஜி என்ற பெயரைச் சொன்னாலே நீங்கள் காட்டும் அன்பு எனக்கு மிகப்பெரிய பலம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

தயாரிப்பாளர் T.G. தியாகராஜன் பேசியதாவது:

நான் திரையுலகில் இசையை நேசிக்க ஆரம்பித்ததற்கு முக்கியமான காரணம் ராஜா சார். அவர் ரீரெக்கார்டிங் மற்றும் பாடல் பதிவு செய்யும்போது அருகில் இருந்து ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு காட்சிக்கு அவர் இசையமைக்கும் விதமும், இசையை உருவாக்கும் விதமும் எப்போதும் என்னை வியக்க வைக்கும். அதேபோல், நேரம் தவறாமல் இருப்பதை ராஜா சார் மற்றும் சிவாஜி சார் ஆகிய இருவரிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். அவர்களின் நேர்த்தியும், பணியின் மீதான அர்ப்பணிப்பும் ஒரு தனி பள்ளி. “அது வேற ஒரு ஸ்கூல்; நான் அந்த ஸ்கூலில் இருந்து வந்தவன்” என்று இன்றைய தலைமுறையினரிடம் எப்போதும் சொல்வேன். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடங்கள்.

சத்யஜோதி பிலிம்ஸ் எப்போதும் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து, அவற்றை வணிகரீதியாகவும் வெற்றி பெறச் செய்வதில் கவனம் செலுத்தும் நிறுவனம். “லெனின் பாண்டியன்” வழக்கமான கதையாக இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டிருந்ததால் இப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்தோம். பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ள சத்யஜோதி நிறுவனத்தின் வரிசையில் பாலச்சந்திரனையும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறோம்.

தர்ஷனை முதன்முதலில் பார்த்தபோதே சிவாஜி சாரின் முகத்தோற்றமும், உடல்மொழியும் அவரிடம் இருப்பதை உணர்ந்தேன். இந்தக் கதாபாத்திரத்துக்கு இவர்தான் சரியான தேர்வு என்று முடிவு செய்தோம். கங்கை அமரன் சாரிடம் இதுவரை பார்க்காத ஒரு நடிப்புத் திறமை இருப்பதை இந்தப் படத்தில் கண்டோம். ரோஜா மேடமும் தனது கதாபாத்திரத்தை அற்புதமாகச் செய்திருக்கிறார். தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.

வித்தியாசமான அணுகுமுறையில் உருவாகியுள்ள “லெனின் பாண்டியன்” ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ராஜா சாருக்கும், படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.

கங்கை அமரன் பேசியதாவது:

என் அண்ணனின் ஆசிர்வாதத்தில் “கோழி கூவுது ” என்ற படத்தை இயக்கி இயக்குநர் ஆனேன். அதன்பிறகு சுமார் 18 படங்களை இயக்கியுள்ளேன். சினிமாவில் இசையமைப்பாளராகவும் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இப்படி சினிமாவில் பல்வேறு பணிகளைச் செய்திருந்தாலும், இப்போது நடிகராக மீண்டும் சத்யஜோதி தியாகரி வாய்ப்பு தந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இந்த வாய்ப்பை வழங்கிய தியாகு சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, நடிகராக இன்று அவருக்கு அருகில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க்கையில் இதுபோன்ற புதிய அனுபவங்களும், புதிய வாய்ப்புகளும் கிடைத்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படக்குழுவினருக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும். இயக்குநர் பாலச்சந்திரனுக்கு வாழ்த்துகள்.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது:

இந்தப் படத்தில் என் அப்பாவை பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக அவர் சற்று ஓவராக நடிப்பார். ஆனால் இந்தப் படத்தில் மிகவும் இயல்பாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். அதற்கான முழு கிரெடிட்டும் இயக்குநர் பாலச்சந்திரனுக்குத்தான். அப்பாவிடமிருந்து அவர் விரும்பிய நடிப்பை மிக அழகாகப் பெற்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் என் அப்பா தெரியாமல், அந்தக் கதாபாத்திரம் மட்டுமே நம் கண்முன் தெரியும் அளவுக்கு அவரது நடிப்பு அமைந்திருக்கிறது.

இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம். அந்தச் சம்பவத்தை எந்த வகையிலும் கமர்ஷியலாக்காமல், உண்மைக்கு மிக நெருக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதுதான் இயக்குநரின் விருப்பமாக இருந்திருக்கிறது. நானும் சில இடங்களில் சினிமாவுக்காக மாற்றம் செய்யலாம் என்று கூறினேன். ஆனால் அவர் தனது பார்வையில் மிகவும் தெளிவாக இருந்தார். அவர் நினைத்ததை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார். அதனால் இது மிகவும் அழுத்தமான, மனதைப் பாதிக்கும் படமாக வந்திருக்கிறது. இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் என ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

தர்ஷனைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், நடிப்பு அவரது ரத்தத்திலேயே இருக்கிறது. இந்தப் படத்தில் அவர் ஒரு பெரிய குடும்பத்தின் வாரிசாக அறிமுகமாகிறார் என்ற எண்ணம் நமக்கு வருவதில்லை. ஒரு நடிகராக மட்டுமே அவரைப் பார்க்கிறோம். அவரது சிறிய சிறிய ரியாக்ஷன்கள் முதல் ஒவ்வொரு காட்சியிலும் அவர் வெளிப்படுத்திய நடிப்பு வரை மிகவும் இயல்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. முதல் படத்திலேயே இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. அவருக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

ரோஜா மேம் இந்தப் படத்தில் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்திலும், கதாபாத்திரத்திலும் இருக்கிறார். அவருடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட கதாபாத்திரம் அமைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநரின் பார்வைதான் ஒரு நடிகரை எப்படி திரையில் காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. அந்த வகையில் பாலச்சந்திரன் ரோஜா மேடமை இந்தப் படத்தில் வித்தியாசமாகக் காட்டியிருக்கிறார்.

மேலும், ராஜா சாரின் இசை மீண்டும் தொடர்ந்து ஒலிக்கும் காலகட்டம் உருவாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்பு ஒரு காலத்தில் வாரா வாரம் இளையராஜா சாரின் இசையுடன் படங்கள் வெளியாகும். அந்த பொற்காலம் மீண்டும் தொடங்கியிருப்பது போலத் தோன்றுகிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள்; அதுபோல மீண்டும் அந்த இசைக் காலம் திரும்பி வந்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள்

நாயகி ஸ்ரித்தா ராவ் பேசியதாவது:

“லெனின் பாண்டியன்” படத்தின் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் தியாகராஜன் சார், செந்தில் சார், அர்ஜுன் சார், செல்வி மேம் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக தியாகராஜன் சார் இல்லையென்றால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். மதுரையில் படப்பிடிப்பின்போது எருதுகளின் மணி சத்தத்தைக் கேட்டு பயந்தபோது, என்னை அழைத்துக்கொண்டு சுப்பு சார் ஓடிய வேகத்தைப் பார்த்து அவரை ‘உசைன் போல்ட்’ என்று அழைத்தேன். அன்று தொடங்கிய அவருடைய ஓட்டம் இன்றுவரை தொடர்கிறது.

இயக்குநர் பாலச்சந்திரன் சார் கொடுத்த வசனங்கள் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அவருடைய எழுத்து என்னுடைய ஞாபகத்திறமையை மீண்டும் கொண்டு வந்தது. ரோஜா மேமுடன் பணியாற்றியது மிகப்பெரிய அனுபவம். அவரை நான் நீண்ட காலமாக ரசித்து வந்திருக்கிறேன். அவருக்கு முன்பாக நின்று வசனம் பேசியபோது நிறைய கற்றுக்கொண்டேன். தர்ஷனும் மிகவும் ஆதரவாக இருந்தார். அவரை முதன்முதலில் பார்த்தபோதே சிவாஜி கணேசன் சாரைப் போலவே இருப்பதாக அவரிடம் கூறினேன்.

கங்கை அமரன் சாரை முதலில் படத்தின் கதாபாத்திர தோற்றத்தில்தான் பார்த்தேன். பின்னர் மதுரையில் அவரை மிகவும் இளமையான தோற்றத்தில் பார்த்தபோது ‘நீங்கள் ரொம்ப Gen-Z-ஆ இருக்கிறீர்களே’ என்று சொன்னேன். இந்தப் படத்தில் தனக்கு டூயட் இல்லை என்றும், அடுத்த படத்தில் கண்டிப்பாக டூயட் கேட்பேன் என்றும் அவர் நகைச்சுவையாகக் கூறினார். அவருக்கு அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

ஒளிப்பதிவாளர் எட்வின் சார், எடிட்டர் நாகூரான் சார் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. “லெனின் பாண்டியன்” செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் வந்து இந்தப் படத்தைப் பாருங்கள். நன்றி.

நடிகை ரோஜா பேசியதாவது:

என்னுடைய முதல் படம் ‘செம்பருத்தி’. இப்போது “லெனின் பாண்டியன்” மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறேன். 30, 35 ஆண்டுகள் நீண்ட பயணம் என்று நீங்கள் சொல்லும்போதுதான், இவ்வளவு நீண்ட பயணத்தை நான் இவ்வளவு எளிதாகக் கடந்து வந்திருக்கிறேனா என்று தோன்றுகிறது. எந்த ஒரு காட்ஃபாதரின் பின்புலமும் இல்லாமல் சினிமா மற்றும் அரசியல் என இரண்டு துறைகளிலும் பயணிக்க முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி. என்னுடைய முதல் படத்துக்கு இசையமைத்த இளையராஜா சாரே, என்னுடைய ரீ-என்ட்ரி படத்துக்கும் இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை.

இந்தப் படத்தில் நான் நடிப்பதற்கு முக்கியக் காரணம் சுப்பு. நாங்கள் நீண்ட கால நண்பர்கள். நான் அரசியலுக்குச் சென்ற பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தேன். அப்போது சுப்பு இந்தப் படத்தின் கதையைப் பற்றி கூறினார். இயக்குநர் பாலச்சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்து கதை சொன்னபோது, அவர் கதை சொன்ன விதத்திலேயே நான் முழுப் படத்தையும் பார்த்துவிட்டேன். ஒவ்வொரு கதாபாத்திரம் எப்படி நடிக்க வேண்டும், வசனங்களை எப்படி பேச வேண்டும், உடல்மொழி எப்படி இருக்க வேண்டும் என்பது வரை அவர் விவரித்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தப் படத்தின் மீதான அவருடைய ஆர்வமும், பார்வையும் என்னை மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது.

சிவாஜி சார் குடும்பத்தின் மூன்று தலைமுறையினருடனும் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. சிவாஜி சார், பிரபு சார் ஆகியோருடன் நடித்துள்ள நான், இப்போது தர்ஷனுடனும் நடித்திருக்கிறேன். அந்தக் குடும்பத்தினர் எப்போதும் என்னை ஒரு குடும்பத்தில் ஒருவரைப் போல அன்பாகவும், ஆதரவாகவும் நடத்துவார்கள். அவர்களுடன் பணியாற்றுவதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது; படப்பிடிப்பு தொடங்கியது முதல் முடியும் வரை வீட்டுச் சாப்பாடு கிடைக்கும். கங்கை அமரன் சாருடன் இணைந்து நடித்திருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பல படங்களுக்கு இசையமைத்தும், இயக்கியும் இருக்கும் அவர், இந்தப் படத்தில் அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம். அந்த நிறுவனத்தின் படத்தில் நடிப்பதைப் பெருமையாக நினைக்கிறேன். தியாகராஜன் சார், செல்வி மேம், செந்தில் சார், அர்ஜுன் சார் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். “லெனின் பாண்டியன்” என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். பாரதிராஜா சார் படங்களைப் பார்க்கும்போது நமக்குள் ஏற்படும் உணர்வைப் போல, இந்தப் படத்தைப் பார்த்து வெளியே வரும்போதும் ரசிகர்கள் கதையுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருப்பார்கள்.

தர்ஷன் கணேசன் குறித்து குறிப்பாகச் சொல்ல வேண்டும். சிவாஜி சார் குடும்பத்திலிருந்து வந்தவர் என்ற எந்தவித கர்வமும் இல்லாமல், முதல் படத்தில் நடிக்கும் ஒரு சாதாரண நடிகரைப் போல மிகவும் எளிமையாகப் பழகினார். சக நடிகர்கள் நடிப்பதைப் பார்த்து அதற்கேற்றபடி ரியாக்ட் செய்வது, அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, வெயிலில் படக்குழுவினருடன் இருப்பது என அவர் மிகவும் இயல்பாக இருந்தார். முன்பெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் ஒரு குடும்பம் போன்ற சூழல் இருக்கும். தற்போது அது குறைந்து வரும் நிலையில், “லெனின் பாண்டியன்” படப்பிடிப்பில் மீண்டும் அந்த குடும்ப உணர்வை அனுபவித்தேன். அதனால் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்பதோடு, தர்ஷன் கணேசன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நடிகர் ராம்குமார் பேசியதாவது:

சத்யஜோதி பிலிம்ஸ், தியாகு சார், செந்தில் சார், அர்ஜுன் சார் ஆகியோருக்கு நன்றி. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகிற்கு மிகவும் முக்கியம். தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் சினிமா வாழும். அதேபோல் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரும் இதுபோன்ற தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். இந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர், தான் வாங்கிய தொகையைவிட 20 சதவீதம் அதிகமாகத் தயாரிப்பாளருக்கு வழங்கப் போவதாக மனதாரக் கூறியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நான் படத்தின் ரஷ் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். கங்கை அமரன் சார், தர்ஷன் கணேசன், ஸ்ரித்தா ராவ் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. குறிப்பாக தர்ஷன் கணேசன், ஸ்ரித்தா ராவ் ஆகிய இருவரும் புதுமுகங்களாக மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

அவர்களிடம் தொடர்ந்து இதேபோல் நடிக்க வேண்டும் என்று கூறினேன். அப்படி நல்ல நடிகர்களாகத் தொடர்ந்து நடித்தால், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். படத்தில் அனைவருமே சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் கேப்டன் ஆஃப் தி ஷிப் இயக்குநர் பாலச்சந்திரன் சார். அவருடைய இயக்கம் சிறப்பாக இருக்கிறது. இயக்குநர் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். அனைவரும் வாழ்க, வளமுடன்.

75 வயது முதியவர் ஒருவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பதன் பின்னணி என்ன என்ற கேள்வியை எழுப்பும் வகையில் படத்தின் கதை அமைந்துள்ளது. டிரெய்லர் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், திரையரங்கில் புதிய அனுபவத்தைத் தரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்குகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories
Cinema News

மூக்குத்தி அம்மன் 2 – படத்தின் டீசர் வெளியீடு

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி ( Mookuthi Amman 2: Mahasakthi’ ) படத்தின் டீசர் வெளியீடு.

தீபாவளி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் நயன்தாராவின் நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ டீசர் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் ‘ரைஸ் ஆப் மஹாசக்தி (Rise of Mahasakthi) எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நயன்தாரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், ‘மைனா’ நந்தினி, ‘கருடா’ ராம், அபிநயா, சிங்கம் புலி, வி. ஆர். சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, திரைக்கதை – வசனத்தை வெங்கட் ராகவன் எழுதியிருக்கிறார். மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு குஷ்பூ சுந்தர் – குஷ்மிதா கணேஷ்- இஷான் சக்சேனா- விக்னேஷ் சிவன் – ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி (Rise of Mahasakthi) எனும் பெயரில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும்… ரசிகர்களை வியக்க வைத்திருப்பதுடன் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்பதை உறுதி செய்திருப்பதால்.. இதற்கான வரவேற்பும், டிஜிட்டல் பார்வைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.‌

Categories
Cinema News

Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran find justice on opposite sides in Meghna Gulzar’s Daayra

Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran find justice on opposite sides in Meghna Gulzar’s Daayra.

Produced by Junglee Pictures and Dr. Jayantilal Gada (Pen Studios), Daayra is directed by National Award-winning filmmaker Meghna Gulzar and stars Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran in lead roles

31st August, 2026: The trailer of Daayra is here, offering a gripping first look at a story where truth is never absolute, justice is open to interpretation, and every decision comes with a consequence. Releasing in cinemas on 18th September 2026, this Meghna Gulzar directorial explores crime, justice and punishment through a riveting, layered, emotionally charged narrative, written by Yash Keswani Sima Agarwal and Meghna Gulzar.

Inspired by true events, Daayra unfolds in the aftermath of a crime that grips the nation sparking widespread outrage, while setting a series of events and 2 investigations in motion. As the search for answers deepens, two senior police officers, played by Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran, find themselves navigating the same system through different approaches to duty and justice, on opposing sides of a case that challenges the very idea of right and wrong.

Rooted in realism, the trailer steadily builds tension as new revelations shift the way we see the case. Its sharp, thought-provoking dialogues raise difficult questions on truth and justice. At the same time, Daayra looks beyond the crime itself to explore public perception and the narratives that emerge.

At its heart, Daayra asks questions that have no easy answers: How quickly can a narrative become a verdict? When everyone has an opinion, who gets to decide what justice looks like? And when we are only spectators, what do we choose to believe?

The trailer also offers glimpses of the wider ensemble, with powerful performances by Jitendra Joshi, Kshitee Jog, Kanwaljeet Singh, Sandeep Kulkarni and Trupti Khamkar. Alongside Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran, they bring added emotional depth to a story shaped by conflicting perspectives, difficult choices and the consequences of decisions made.

Actor Kareena Kapoor Khan said, “What I loved about working with Meghna is that she makes you question everything you think you know about a character. There’s so much thought behind every detail, but she never takes away your instinct as an actor. Playing DCP Ajooni Kohli stayed with me… because she pushed me into a space I hadn’t really explored before, and at this stage in my career, that’s always exciting. And then to have Prithviraj opposite me was such a pleasure. He’s an incredibly intelligent actor… very present, very instinctive… and there was an ease to working together that I really enjoyed. This was one of those films where the people you’re surrounded by make the experience that much richer.”

Actor Prithviraj Sukumaran said, “What drew me to DCP Raman Kumar was the complexity beneath his composed exterior and the questions he finds himself grappling with during the investigation. What I admire is how the film maintains that objectivity right till the very end, allowing the audience to form their own perspective. Meghna Gulzar is a filmmaker whose craft I have closely followed and Daayra gave me the opportunity to work with her. It was a rewarding experience and working with Kareena made the journey even more special. I hope the audience connects with the world we have created, a story that is gripping and deeply human”

Director Meghna Gulzar said, “Daayra doesn’t sit comfortably in black and white. It explores the grey and dismantles it. As a filmmaker, that grey space is always challenging, and yet compelling – where characters make choices, live with them, and the audience is left to engage with what unfolds. The main protagonists of Daayra are brought to life with towering performances by Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran. I’m grateful that I got this dynamic combination of actors, along with an exceptional ensemble cast, to explore the delicate lines of law and justice that traverse the story of Daayra. I am very excited to share this world of grey with the audience and welcome them into it!”

Amrita Pandey, CEO, Junglee Pictures, said, “At Junglee Pictures, we have always gravitated towards stories that come from the world around us, particularly those inspired by true events or real experiences. Daayra has been a story we have developed closely with our writers and Meghna, and it is a film that feels deeply relevant to the times we live in, while approaching its subject with the sensitivity it deserves. It is also a powerful crime thriller, driven by conflict, moral dilemmas, difficult choices and two very strong points of view. To have powerhouse performers like Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran bring these characters to life makes it even more exciting. Daayra also marks our first co production with PEN Studios, and we are delighted to be on this journey with them. For our team, it is wonderful to be working with Meghna for the third time after Talvar and Raazi. We have loved making this film and hope audiences connect with it as deeply as we have.”
Dr. Jayantilal Gada, CMD, Pen Studios said, “Cinema can entertain, but it can also ask the right questions. Daayra belongs to the latter, and that is what makes this story particularly special to us. Meghna Gulzar is a filmmaker who has consistently created cinema that makes you think, and her ability to tell a story with depth, sensitivity and restraint is truly remarkable. Bringing together two celebrated actors like Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran adds another compelling dimension to the film, with both actors bringing immense conviction and intensity to their roles. It has also been wonderful to collaborate with a content-first studio like Junglee Pictures, whose vision and commitment to meaningful storytelling align closely with ours. We hope Daayra not only grips audiences but also stays with them, leaving them with questions and conversations long after they leave the theatre.”

With Daayra, Meghna Gulzar brings together a layered story and a strong ensemble to examine the difficult choices that emerge when personal conviction meets the boundaries of law. Distributed by Pen Marudhar, Daayra releases in cinemas on 18th September 2026.

Trailer link – https://bit.ly/DaayraOfficialTrailerOutNow

*‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!*

தேசிய விருது பெற்ற இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டாய்ரா’ திரைப்படத்தில் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜங்லீ பிக்சர்ஸ் மற்றும் டாக்டர் ஜெயந்திலால் கடா (பென் ஸ்டுடியோஸ்) இணைந்து தயாரிக்கும் இப்படம் செப்டம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

‘டாய்ரா’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. உண்மை என்பது எப்போதும் முழுமையானதல்ல, நீதியைப் பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ள முடியும், ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு விளைவு உண்டு போன்ற விஷயங்களை முன்னிறுத்தி கதையின் முதல் பார்வையை இந்த டிரெய்லர் வழங்குகிறது. மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் குற்றம், நீதி மற்றும் தண்டனை ஆகியவற்றை மையமாகக் கொண்டு, பரபரப்பு நிறைந்த உணர்வுப்பூர்வமான கதையைச் சொல்கிறது. யஷ் கேஸ்வானி, சிமா அகர்வால் மற்றும் மேக்னா குல்சார் ஆகியோர் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘டாய்ரா’, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு குற்றச் சம்பவத்துக்குப் பிறகு நடைபெறும் நிகழ்வுகளைச் சுற்றி நகர்கிறது. இந்தச் சம்பவம் பொதுமக்களின் கோபத்தைத் தூண்டுவதுடன், அடுத்தடுத்த விசாரணைகளையும் தொடங்கி வைக்கிறது. விடைகளுக்கான தேடல் தீவிரமடையும்போது, மூத்த காவல்துறை அதிகாரிகளான கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் இருவரும் கடமை மற்றும் நீதியை அணுகும் வெவ்வேறு பார்வைகளுடன் ஒரே அமைப்புக்குள் பயணிக்கின்றனர். சரி, தவறு என்ற அடிப்படை எண்ணத்தையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு வழக்கில், இருவரும் எதிரெதிர் பக்கங்களில் நிற்கின்றனர்.

யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் டிரெய்லர், புதிய தகவல்கள் வெளியாகும்போது வழக்கைப் பற்றிய நமது பார்வையே மாற்றும் வகையில் பதற்றத்தை படிப்படியாக அதிகரிக்கிறது. சிந்திக்கத் தூண்டும் கூர்மையான வசனங்கள், உண்மை மற்றும் நீதி குறித்த கடினமான கேள்விகளை எழுப்புகின்றன. அதே நேரத்தில், குற்றச் சம்பவத்தைத் தாண்டி, மக்களின் பார்வை மற்றும் அதிலிருந்து உருவாகும் பல்வேறு கதைகளையும் ‘டாய்ரா’ ஆராய்கிறது. ‘டாய்ரா’ எளிதில் பதில் சொல்ல முடியாத பல கேள்விகளை எழுப்புகிறது. ஒரு கதை எவ்வளவு வேகமாகத் தீர்ப்பாக மாறிவிடுகிறது, ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்போது, நீதி எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது யார், நாம் வெறும் பார்வையாளர்களாக இருக்கும்போது, எதை நம்புவது என்பதை எவ்வாறு முடிவு செய்கிறோம் என்பதுதான் அவை.

டிரெய்லரில் இப்படத்தின் மற்ற கதாபாத்திரங்களான ஜிதேந்திர ஜோஷி, க்ஷிதி ஜோக், கன்வல்ஜீத் சிங், சந்தீப் குல்கர்னி மற்றும் த்ருப்தி கம்கர் ஆகியோரும் அறிமுகமாகின்றனர். கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரனுடன் இணைந்து, மாறுபட்ட கண்ணோட்டங்கள், கடினமான முடிவுகள் மற்றும் அவற்றின் விளைவுகளால் உருவாகும் கதைக்கு இவர்களின் நடிப்பு கூடுதல் வலு சேர்க்கிறது.

நடிகை கரீனா கபூர் கான் பகிர்ந்து கொண்டதாவது, “மேக்னாவுடன் பணியாற்றியதில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பதாக நினைக்கும் அனைத்தையும் அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். ஒவ்வொரு விஷயத்திற்குப் பின்னாலும் நிறைய சிந்தனை இருக்கிறது. அதே நேரத்தில், ஒரு நடிகராக நம்முடைய இயல்பான உணர்வுகளையும் உள்ளுணர்வையும் அவர் ஒருபோதும் கட்டுப்படுத்துவதில்லை. டிசிபி அஜூனி கோலி கதாபாத்திரத்தில் நடித்த தாக்கம் என்னுள் நீண்ட நாட்கள் இருந்தது.

ஏனென்றால், இதற்கு முன்பு நான் பெரிதாக ஆராயாத ஒரு களத்திற்குள் அந்தக் கதாபாத்திரம் என்னை அழைத்துச் சென்றது. எனது திரைப்பயணத்தின் இந்தக் கட்டத்தில், இதுபோன்ற அனுபவங்கள் உற்சாகமளிக்கின்றன. திறமையான, புத்திசாலித்தனமான நடிகர் பிருத்விராஜூடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சி. நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களால் ஒரு படத்தில் கிடைக்கும் அனுபவம் இன்னும் சிறப்பாக மாறும். அப்படிப்பட்ட படங்களில் ‘டாய்ரா’வும் ஒன்று” என்றார்.

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் கூறியதாவது, “டிசிபி ராமன் குமார் கதாபாத்திரத்தின் வெளிப்புற அமைதிக்குப் பின்னால் இருக்கும் சிக்கலும், விசாரணையின்போது அவர் எதிர்கொள்ளும் கேள்விகளுமே என்னை இந்தக் கதாபாத்திரத்திடம் ஈர்த்தன. படம் இறுதிவரை அதை தக்கவைத்துள்ளது. இயக்குநர் மேக்னா குல்சாரை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன் . ‘டாய்ரா’ படத்தின் மூலம் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது சிறந்த அனுபவம். கரீனாவுடன் இணைந்து பணியாற்றியது இந்தப் பயணத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றியது. நாங்கள் உருவாக்கியுள்ள உலகத்துடன் பார்வையாளர்கள் தங்களை பொருத்தி பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். ‘டாய்ரா’ விறுவிறுப்பாகவும், ஆழமான மனித உணர்வுகள் கொண்ட கதையாகவும் இருக்கும்”.

இயக்குநர் மேக்னா குல்சார் பகிர்ந்து கொண்டதாவது, “‘டாய்ரா’ படம் கருப்பு, வெள்ளை என இரு தெளிவான பக்கங்களில் வசதியாக அமர்ந்துவிடக்கூடிய கதை அல்ல. ஒரு திரைப்பட இயக்குநராக, இந்த கதையின் இன்னொரு பக்கம் எப்போதும் சவாலானதாகவும், அதே நேரத்தில் ஈர்ப்புமிக்கதாகவும் இருக்கிறது. கதாபாத்திரங்கள் முடிவுகளை எடுக்கின்றனர். அந்த முடிவுகளுடன் வாழ்கின்றனர். இறுதியில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பார்வையாளர்கள் தங்களுக்கான புரிதலை உருவாக்கிக்கொள்ளவும் முடியும்.

‘டாய்ரா’வின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் மிகச் சிறப்பான நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளனர். இந்த இரு திறமையான நடிகர்களையும், சிறந்த துணை நடிகர் குழுவினரையும் இணைத்து, இப்படத்தின் கதையில் பயணிக்கும் சட்டம் மற்றும் நீதிக்கு இடையிலான நுட்பமான எல்லைகளை ஆராயும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. இந்த உலகத்தை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அவர்களை இந்த உலகத்திற்குள் வரவேற்கிறேன்!” என்றார்.

ஜங்லீ பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி, அம்ரிதா பாண்டே பகிர்ந்து கொண்டதாவது, “ஜங்லீ பிக்சர்ஸில், நம்மைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து உருவாகும் கதைகளையே நாங்கள் எப்போதும் விரும்பி தேர்வு செய்து வருகிறோம். குறிப்பாக, உண்மைச் சம்பவங்கள் அல்லது உண்மையான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளுக்கு முன்னுரிமை அளிப்போம். நாம் வாழும் காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இந்தப் படம் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மோதல்கள், தார்மீகச் சிக்கல்கள், கடினமான முடிவுகள் மற்றும் இரண்டு வலுவான பார்வைகளை மையமாகக் கொண்ட குற்றவியல் த்ரில்லர்தான் இந்தப் படம். கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் போன்ற திறமையான நடிகர்கள் இந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். பென் ஸ்டுடியோஸூடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் முதல் படம் ‘டாய்ரா’ என்பது மகிழ்ச்சி. ‘தல்வார்’ மற்றும் ‘ராஸி’ படங்களுக்குப் பிறகு மேக்னாவுடன் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறோம். எங்களுக்கு இந்தப் படம் எந்த அளவுக்கு பிடித்திருக்கிறதோ, அதே அளவுக்கு பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

பென் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சிஎம்டி டாக்டர் ஜெயந்திலால் கடா பகிர்ந்து கொண்டதாவது, “சினிமா பார்வையாளர்களை மகிழ்விக்கும் அதே நேரத்தில் ஒரு திரைப்படம் சரியான கேள்விகளையும் எழுப்புவது கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கும். ‘டாய்ரா’ இரண்டாவது வகையைச் சேர்ந்தது. அதுதான் இந்த கதையை எங்களை தேர்ந்தெடுக்க வைத்தது. மேக்னா குல்சார் தொடர்ந்து சிந்திக்க வைக்கும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். ஆழமான, உணர்வுப்பூர்வமான மற்றும் கட்டுப்பாட்டுடன் ஒரு கதையைச் சொல்லும் அவரது திறமை உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் போன்ற இரு சிறந்த நடிகர்களின் திறமையான நடிப்பு படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது. இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். உள்ளடக்கத்தை முதன்மையாகக் கொண்டு செயல்படும் ஜங்லீ பிக்சர்ஸுடன் இணைந்து பணியாற்றியதும் சிறப்பான அனுபவமாக இருந்தது. அர்த்தமுள்ள கதைகளை உருவாக்குவதில் அவர்களின் பார்வையும் அர்ப்பணிப்பும் எங்களுடன் ஒத்துப்போகின்றன. ‘டாய்ரா’ பார்வையாளர்களை இறுதிவரை கட்டிப்போட்டு, அவர்கள் திரையரங்கிலிருந்து வெளியேறிய பிறகும் அவர்களுடன் தொடர்ந்து பயணித்து, பல கேள்விகளையும் விவாதங்களையும் உருவாக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

‘டாய்ரா’ மூலம் இயக்குநர் மேக்னா குல்சார், தனிப்பட்ட நம்பிக்கைகள் சட்டத்தின் வரம்புகளை எதிர்கொள்ளும்போது உருவாகும் கடினமான முடிவுகளை ஆராயும் வகையில், பல அடுக்குகளைக் கொண்ட கதையையும் வலுவான நடிகர்கள் குழுவையும் ஒன்றிணைத்துள்ளார். பென் மருதர் நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் ‘டாய்ரா’ திரைப்படம், செப்டம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories
Cinema News

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் அழுத்தமான நடிப்பிலும் கவனம் ஈர்த்து வரும் துருவ் விக்ரம், முதல் முறையாக ரசிகர்களை அதிக அளவில் கவரும் வகையிலான கமர்ஷியல் கதைக்களத்தில் நடிக்கவுள்ளார்.

படத்தின் தலைப்புடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துருவ் விக்ரம் இதுவரை இல்லாத வகையில் ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். நேரடி ஆக்‌ஷன் காட்சிகளின் தன்மையுடன் காமிக் புக் பாணியிலான காட்சியமைப்பும் இணைந்திருக்கும் இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

புதிய போஸ்டரில் பிரவுன் நிற உடையில், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் துருவ் விக்ரம் தோன்றுகிறார். அவரது தீவிரமான பார்வையும் ஆக்ரோஷமான உடல்மொழியும் கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக முன்னோக்கி நீட்டியிருக்கும் அவரது கை, போஸ்டருக்கு அதிரடியான தோற்றத்தை கொடுக்கிறது. ‘No Retakes Allowed’ என்ற டேக்லைனும் படத்தின் ஆக்‌ஷன் பின்னணியை உணர்த்துகிறது.

ஃபர்ஸ்ட் லுக் ‘ஜாக்கி’ திரைப்படம் ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருவதையும், துருவ் விக்ரமின் புதிய திரைமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறது.

இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜெயசூர்யா எஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜி.எம். சேகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர் விக்ரம் மோர் வடிவமைக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் – இசை, விக்கி – ஒளிப்பதிவு, ஜெயசூர்யா எஸ் – படத்தொகுப்பு, ஜி.எம். சேகர் –தயாரிப்பு வடிவமைப்பாளர், விக்ரம் மோர் – சண்டைப்பயிற்சி என சிறப்பான தொழில்நுட்பக் குழு பணியாற்றுகிறது. இப்படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் மேற்கொள்கின்றனர். மார்க்கெட்டிங் பணிகளை ஃபர்ஸ்ட் ஷோ நிறுவனம் கவனிக்கிறது.

Mythri Movie Makers’ New Film, Featuring Dhruv Vikram, Directed by Karan Arvind Kumar Is Titled ‘Jackie – No Retakes Allowed’, First Look Poster Promises Stylish Action Extravaganza.

Leading Pan India Production House Mythri Movie Makers continues to expand its footprint beyond Telugu cinema, and the production house is now making its mark in Tamil with an exciting fourth venture, starring Kollywood Star Dhruv Vikram. Produced by Naveen Yerneni and Y Ravi Shankar, the film is directed by Karan Arvind Kumar. Dhruv, who has established himself with performances in diverse and intense roles, is now taking up a commercial subject that is designed to connect with a broader section of the audience.

The makers today unveiled the title along with the film’s first-look poster. Titled ‘Jackie- No retakes allowed’, the first look presents Dhruv Vikram in a larger-than-life mass avatar. The poster blends a gritty live-action treatment with a stylish comic-book-inspired aesthetic, instantly creating curiosity around the character and the world of the stylish action extravaganza.

Dhruv appears in a stylish brown outfit, sporting a distinctive hairstyle and an intense expression. His fierce posture adds to the character’s commanding presence, while his prominently extended fist gives the poster a dynamic, action-packed feel. The tagline “No Retakes Allowed” further amplifies the film’s edgy tone.

The first look succeeds in establishing Jackie as a stylish and action-driven commercial entertainer while offering a peek of Dhruv Vikram’s powerful new screen persona.

The film also boasts an impressive technical crew. National Award-winning composer Santhosh Narayanan is scoring the music, while Viki is handling the cinematography. Jayasuriya is responsible for the editing, with GM Sekhar overseeing production design. Renowned action choreographer Vikram Mor is designing the film’s action sequences.

Cast: Dhruv Vikram

Technical Crew:
Producers: Naveen Yerineni & Ravi Shankar Yalamanchili
Banner: Mythri Movie Makers
Director: Karan Arvind Kumar
Music: Santhosh Narayanan
DOP: Viki
Editing: Jayasuriya S
Production Design: GM Sekhar
Action: Vikram Mor
PRO: Yuvraaj
Marketing : First Show