Categories
Cinema News

பாவனா ஸ்டுடியோஸின் அடுத்தபடம்   ‘பிக்னிக்’ (Picnic): ‘பிரேமலு’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட் ‘புகழ் பிரபல கதாசிரியர் கிரண் ஜோசி இயக்குகிறார்!

பாவனா ஸ்டுடியோஸின் அடுத்தபடம் ‘பிக்னிக்’ (Picnic): ‘பிரேமலு’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட் ‘புகழ் பிரபல கதாசிரியர் கிரண் ஜோசி இயக்குகிறார்!

அண்மையில் தங்கள் தயாரிப்பில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தைத் தொடர்ந்து புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸின் அடுத்த படமாக ‘பிக்னிக்’ (Picnic) உருவாகிறது.

இந்தப் படத்தின் மூலம் ‘பிரேமலு’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படங்களின் இணை எழுத்தாளராகப் பணிபுரிந்த கிரண் ஜோசி இயக்குநராக அறிமுகமாகிறார்.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சமீபத்தில் உலகளாவிய வெற்றி பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தினைத் தொடர்ந்து, முன்னணித் தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ், சந்தீப் பிரதீப், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் திலீஷ் போத்தன் ஆகியோருடன் இணைந்து ஒரு பிரம்மாண்டமான நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை கொண்ட திரைப்படத்தை உருவாக்க உள்ளது. இப்படம் 2027 ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது.

தொடர்ச்சியாக வெற்றிகரமான படங்களைத் தயாரிக்கும் பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனம், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய தனது அடுத்த திரைப்படமான ‘பிக்னிக்’-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘பிரேமலு’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி தென்னிந்தியா முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநராக ஒரு முக்கிய அறிமுகம்!

‘பிரேமலு’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு இணை எழுத்தாளராகப் பணியாற்றிய கிரண் ஜோசி, ‘பிக்னிக்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சுவாரஸ்யமான, கலாச்சாரத்தோடு ஒன்றிப் போகும் படியான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதைகளை உருவாக்குவதில் சிறந்து விளங்கும் ஜோசி, முதன்முதலில் இயக்குநராகப் பொறுப்பேற்பது சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படைப்பு சார் நகர்வாக அமைந்துள்ளது. கேரளாவைத் தாண்டி, குறிப்பாகத் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களிலும் அவரது முந்தைய இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சிறந்த நட்சத்திரக் கூட்டணி!

இப்படத்தில் சந்தீப் பிரதீப் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் பன்முகத்தன்மை கொண்ட நடிகர் இந்திரஜித் சுகுமாரன் , தேசிய விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான திலீஷ் போத்தன்,
சுஜினா ஸ்ரீதரன் மற்றும் அக்ஷதா அஜித் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.

திரைப்பட வகைமையும் விழாக்கால வெளியீடும்!

அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான ஒரு முழுமையான குடும்ப நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக ‘பிக்னிக்’ உருவாகிறது. இப்படம் 2027 ஜனவரி 14 அன்று, பண்டிகைக்காலத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

தென்னிந்தியா முழுவதும் வெளியீடு!

தென்னிந்தியா முழுவதும் பாவனா ஸ்டுடியோஸின் படைப்புகளுக்கு அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ‘பிக்னிக்’ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

தெலுங்கு பேசும் மாநிலங்களில் வலுவான திரையரங்கு வெளியீட்டை உறுதி செய்யும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, முன்னணித் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ‘ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ்’ (Future Runup Films) இப்படத்தின் விரிவான வெளியீட்டுப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது.

பாவனா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

BHAVANA STUDIOS ANNOUNCES NEXT FILM PICNIC; CO WRITER OF PREMALU AND BETHLEHEM KUDUMBA UNIT KIRAN JOSEY TO MAKE DIRECTORIAL DEBUT

Following the massive global success of Bethlehem Kudumba Unit, the powerhouse production banner teams up with Sandeep Pradeep, Indrajith Sukumaran, and Dileesh Pothan for a grand family comedy drama releasing on January 14, 2027.

Hitmaking production house Bhavana Studios has officially announced its next highly anticipated feature film, titled Picnic. Coming on the back of the success of Premalu and Bethlehem Kudumba Unit, the banner’s latest venture has already generated considerable buzz across South India.

A Major Directorial Debut

Picnic marks the directorial debut of Kiran Josey, the acclaimed writer who co- penned the sensational hits Premalu and Bethlehem Kudumba Unit. Having established a strong track record of creating engaging, culturally resonant and entertaining stories, Josey’s transition to the director’s chair is among the most anticipated creative moves in recent times.

With both of his previous writing ventures enjoying a strong following beyond Kerala, particularly in Telangana and Andhra Pradesh, expectations are high for his directorial debut.

Powerhouse Ensemble Cast

The film brings together a talented ensemble cast led by Sandeep Pradeep, alongside versatile actor Indrajith Sukumaran and National Award winning filmmaker and actor Dileesh Pothan.

Genre & Grand Festival Release

Positioned as a wholesome family comedy drama, Picnic is crafted to appeal to audiences across generations. The film is officially slated for a grand worldwide theatrical release during the festive season on January 14, 2027.

Pan South India Distribution

Catering to the growing demand for Bhavana Studios’ content across South India, Picnic will release simultaneously in Malayalam, Tamil, Telugu and Kannada.

In a strategic move to ensure a strong theatrical presence across the Telugu states, prominent production and distribution house Future Runup Films has partnered with the film to handle its extensive Tamil theatrical release.

Cast : Sandeep Pradeep, Dileesh Pothan, Indrajith Sukumaran, Sujina Sreedharan & Akshatha Ajith.
Written & Directed by Kiran Josey
Music : Govind Vasantha
Produced by Bhavana Studios

Further updates regarding the film will be announced very soon

Categories
Cinema News

சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

A Silver Stream Studios Production, Presented by Black Oyibo Production House

Presented by Black Oyibo Production House
Arun Matheswaran

Produced by Silver Stream Studios
Soundariyaa Dhiliphan
N. Rajendran
Ramu Thangaraj

Transfer is a tense and hard-hitting short film that revolves around a police encounter that spirals out of control when two policemen, assigned to the same operation, find themselves divided by deep ideological differences.

What begins as a police operation gradually becomes a conflict within the force itself, as ideological polarization comes into direct confrontation with professional duty. As the situation escalates, personal beliefs, institutional responsibility and the pressure of the moment collide, leading to consequences that neither policeman can control.

The film explores how ideological divisions can enter institutions and personal relationships, and how, in moments of crisis, the boundaries between duty, belief and power can become dangerously blurred.

CAST

Kapil Velavan
Jawahar Sakthi
Shegar Narayanan
Vinoth Francis
Arun Kumar
Bala Karthik
Durai Harikrishnan

CREW

Writer–Director -Dhiliphan
Co-Director -T. Johnsun Mohandas
Creative Producer / Casting Director -Vignesh Ramakrishnan
Cinematographers-Palaniappan Kathir Naveen Loganathan
Production Designer -Ramu Thangaraj
Editor -Nagooran Ramachandran
Music Director -Hariharan Suresh
Art Director -Rajesh Mahe
Sound Design & Mix – Jaison Jose ,Daniel Jefferson
Colourist -Prakash
VFX-We Duo
Publicity Designs -Bovas

சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

பரபரப்பான கதைக்களக்கதை கொண்ட குறும்படம் ‘டிரான்ஸ்பர்’. ஒரே பணியில் ஈடுபடுத்தப்படும் இரண்டு காவலர்கள், கொள்கை வேறுபாடுகளால் பிளவுபட்டு, கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் காவல்துறை என்கவுன்டர் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் ஒரு காவல்துறை நடவடிக்கையாகத் தொடங்கும் சம்பவம், படிப்படியாக காவல்துறைக்குள்ளேயே உருவாகும் மோதலாக மாறுகிறது. கொள்கை ரீதியான பிளவு, தொழில்முறை கடமையுடன் நேரடியாக மோதும் சூழலில், நிலைமை தீவிரமடைகிறது.

தனிப்பட்ட நம்பிக்கைகள், நிறுவனப் பொறுப்பு மற்றும் அந்தத் தருணத்தின் அழுத்தம் ஆகியவை ஒன்றோடொன்று மோதுவதால், இரு காவலர்களாலும் கட்டுப்படுத்த முடியாத விளைவுகள் ஏற்படுகின்றன. கொள்கை ரீதியான பிளவுகள் நிறுவனங்களுக்குள்ளும் தனிப்பட்ட உறவுகளுக்குள்ளும் எவ்வாறு ஊடுருவுகின்றன என்பதையும், நெருக்கடியான தருணங்களில் கடமை, நம்பிக்கை மற்றும் அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைகள் எவ்வாறு ஆபத்தான வகையில் மங்கிவிடுகின்றன என்பதையும் இப்படம் பேசுகிறது.

நடிகர்கள்: கபில் வேலவன், ஜவஹர் சக்தி, சேகர் நாராயணன், வினோத் பிரான்சிஸ், அருண் குமார், பாலா கார்த்திக், துரை ஹரிகிருஷ்ணன்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

எழுத்து மற்றும் இயக்கம்: திலீபன்,
இணை இயக்குநர்: டி. ஜான்சன் மோகன்தாஸ்,
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் மற்றும் காஸ்டிங் டைரக்டர்: விக்னேஷ் ராமகிருஷ்ணன்,
ஒளிப்பதிவாளர்கள்: பழனியப்பன் கதிர், நவீன் லோகநாதன்,
புரொடக்‌ஷன் டிசைனர்: ராமு தங்கராஜ்,
படத்தொகுப்பு: நாகூரன் ராமச்சந்திரன்,
இசையமைப்பாளர்: ஹரிஹரன் சுரேஷ்,
கலை இயக்குநர்: ராஜேஷ் மஹே,
ஒலி வடிவமைப்பு & கலவை: ஜெய்சன் ஜோஸ், டேனியல் ஜெஃபர்சன்
கலரிஸ்ட்: பிரகாஷ்,
விஎஃப்எக்ஸ்: வீ டூ (We Duo),
விளம்பர வடிவமைப்புகள்: போவாஸ்

Categories
Cinema News

காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

முதல் பாதி காதல்… அடுத்த பாதி அதிரடி! ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடல்கள் வெளியான போதே, முழுமையான காதல் கதையாக இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவான நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் வேறொரு கோணத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

காதலை மையமாகக் கொண்டு தொடங்கும் டிரெய்லர், வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடங்க முயற்சிக்கும் காதலர்களின் பிரச்சனைகளைப் பேசுவது போல ஆரம்பமாகிறது. காதலர்களின் உறவு, குடும்பத்தின் எதிர்ப்பு என இயல்பான காதல் கதைக்கான களத்துடன் நகரும் டிரெய்லர், பாதியில் திடீரென யூடர்ன் அடிக்கிறது.

அதன்பிறகு, காதலர்கள் எதிர்பாராத ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்வதும், அந்தப் பிரச்சனை என்ன என்பது குறித்து எந்தத் தகவலையும் முழுமையாக வெளிப்படுத்தாமல், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மூலம் அடுத்த கட்டக் கதையை காட்டுவதும் டிரெய்லரின் முக்கிய சிறப்பாக அமைந்துள்ளது. காதல் கதையாகத் தொடங்கும் படம் எந்தச் சூழ்நிலையில் ஆக்ஷன் பாதைக்குள் செல்கிறது என்ற கேள்வியை டிரெய்லர் எழுப்பியுள்ளது.

குறிப்பாக, இதுவரை வெளியான பாடல்கள் படத்தின் காதல் மற்றும் மென்மையான உணர்வுகளை முன்னிலைப்படுத்தியிருந்த நிலையில், டிரெய்லரில் இடம்பெற்றுள்ள அதிரடி காட்சிகள் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளன. கதையின் முக்கியமான பிரச்சனை என்ன? காதலர்களுக்கு என்ன நடக்கிறது? அவர்கள் எதிர்கொள்ளும் சவால் என்ன? என்பதற்கான விடைகளை திரையரங்கில் தெரிந்துகொள்ளும் வகையில் டிரெய்லர் அமைந்துள்ளது.

இளம் ரசிகர்களை கவரும் வகையில் காதல், அழகான உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஆக்ஷனும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை டிரெய்லர் உணர்த்தியுள்ளது. இதனால் ‘அன்பில் அவன்’ ஒரு வழக்கமான காதல் திரைப்படமாக மட்டும் இல்லாமல், காதலுக்குள் எதிர்பாராத திருப்பங்களையும் கொண்ட படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

‘அன்பில் அவன்’ படத்தை ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ படப்புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் கவனம் ஈர்த்துள்ளது. காதல் கதையாகத் தொடங்கி எதிர்பாராத ஆக்ஷன் திருப்பத்தை காட்டியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories
Cinema News

Geetham Enters the Sporting Arena with Ooty Bisons for TNPPL Season 2

Geetham Enters the Sporting Arena with Ooty Bisons for TNPPL Season 2

Chennai, September 2026: Geetham marks its entry into competitive sport as the official franchise owner of Ooty Bisons, competing in Season 2 of the Tamil Nadu Pickleball Premier League (TNPPL).

Rooted in the Nilgiris and inspired by the strength and resilience of the bison, the franchise brings together a 14-member mixed squad with a clear ambition—to compete with purpose and build a strong sporting identity both on and off the court.

For Geetham, Ooty Bisons represents a new chapter beyond hospitality—an opportunity to contribute to the growing pickleball ecosystem while building a franchise around sport, community, culture and performance.

“Ooty Bisons is our step into a new arena. We want to build a team that competes fiercely, represents the Nilgiris with pride and creates an identity people can connect with beyond the tournament.”

OOTY BISONS BY GEETHAM VEG
As the team prepares for TNPPL Season 2, Ooty Bisons is ready to bring its philosophy to the court:

The Herd Rises.
Charge Without Mercy.

டிஎன்பிபிஎல் இரண்டாவது சீசனில் ஊட்டி பைசன்ஸ் அணியுடன் விளையாட்டு அரங்கில் களமிறங்கும் கீதம்!

சென்னை, செப்டம்பர் 2026: தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் சீசன் 2 போட்டியில் பங்கேற்கும் ஊட்டி பைசன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ஃபிரான்சைஸ் உரிமையாளராக, போட்டி விளையாட்டுத் துறையில் தனது பயணத்தைத் தொடங்குகிறது கீதம்.

நீலகிரி மலைப்பகுதியின் வேர்களையும், காட்டெருமையின் வலிமை மற்றும் விடாமுயற்சியையும் முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அணி, ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 14 விளையாட்டு வீரர்களுடன் களமிறங்குகிறது. போட்டியில் முழு அர்ப்பணிப்புடன் பங்கேற்பதோடு, ஆடுகளத்திலும் அதற்கு வெளியிலும் தங்களுக்கென அடையாளத்தை உருவாக்குவதே இந்த அணியின் இலக்காகும்.

கீதத்தைப் பொறுத்தவரை, ஊட்டி பைசன்ஸ் அணி என்பது விருந்தோம்பல் துறைக்கு அப்பாற்பட்ட புதிய அத்தியாயமாகும். வளர்ந்து வரும் பிக்கிள்பால் விளையாட்டுக்கு பங்களிப்பதுடன் சமூகம், கலாச்சாரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு அணியை உருவாக்குவதற்கான வாய்ப்பாகவும் இது அமைகிறது.

“ஊட்டி பைசன்ஸ் அணி மூலம் புதிய களத்தில் எங்கள் பயணத்தைத் தொடங்குகிறோம். கடுமையாகப் போட்டியிடும் ஓர் அணியை உருவாக்க வேண்டும், நீலகிரி மக்களின் பெருமையைப் பிரதிபலிக்க வேண்டும், போட்டியைத் தாண்டியும் மக்கள் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஓர் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்கிறது கீதம்.

கீதம் வெஜ் வழங்கும் ஊட்டி பைசன்ஸ்!

டிஎன்பிபிஎல் சீசன் 2க்குத் தயாராகி வரும் ஊட்டி பைசன்ஸ் அணி, ‘கூட்டமாக எழுவோம், கடுமையாக போட்டியிட்டு வெற்றி பெறுவோம்!’ என்ற தனது கொள்கையை ஆடுகளத்தில் வெளிப்படுத்தத் தயாராக உள்ளது.

Categories
Cinema News

‘பைசன் காளமாடன்’ படத்திற்காக சைமா சிறந்த நடிகர் விருது வென்ற துருவ் விக்ரம் – இளம் நடிகருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை!

‘பைசன் காளமாடன்’ படத்திற்காக சைமா சிறந்த நடிகர் விருது வென்ற துருவ் விக்ரம் – இளம் நடிகருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை!

தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியதற்காக துருவ் விக்ரம் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். இளம் நடிகராக தனது திரைப்பயணத்தில் துருவ் விக்ரமுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், அவரது திறமைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாக அமைந்துள்ளது.

தனது முதல் படத்திலிருந்தே மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து ,நடிப்பில் கவனம் செலுத்தி வரும் துருவ் விக்ரம், ஒவ்வொரு படத்திலும் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் தனது நடிப்பை மெருகேற்றி வருகிறார். இந்நிலையில், தனது மூன்றாவது திரைப்படத்திலேயே சைமா விருதுகளில் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது அவரது இளம் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில், துணிவும் போராட்ட குணமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின் கதாபாத்திரத்தை துருவ் விக்ரம் ஏற்றிருந்தார். கதாபாத்திரத்திற்கேற்ப தனது தோற்றம், உடல்மொழி மற்றும் நடிப்பு என பல்வேறு அம்சங்களில் அவர் மேற்கொண்ட மாற்றங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக கதாபாத்திரத்தின் உணர்வுகளையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் திரையில் வெளிப்படுத்திய விதத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு, படத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது.

ஒரு இளம் நடிகருக்கு மூன்றாவது திரைப்படத்திலேயே சிறந்த நடிகர் என்ற விருது கிடைப்பது, அவரது திரைப்பயணத்தில் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது. குறிப்பாக ‘பைசன் காளமாடன்’ போன்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நடித்ததற்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், துருவ் விக்ரமின் நடிப்புப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான அடையாளமாக மாறியுள்ளது.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் (Applause Entertainment) சார்பில் சமீர் நாயர், தீபக் சேகல், அதிதி ஆனந்த் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் பா. ரஞ்சித் ஆகியோர் தயாரிப்பில் உருவான ‘பைசன் காளமாடன்’ படத்தில் அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாறுபட்ட களத்தையும், அழுத்தமான கதைக்களத்தையும் கொண்ட இப்படத்தில் துருவ் விக்ரம் வெளிப்படுத்திய நடிப்பு, அவரது நடிப்புத் திறனை மேலும் அழுத்தமாக வெளிக்கொண்டு வந்துள்ளது.
துருவ் விக்ரமின் இந்த சைமா விருது, அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், இளம் நடிகருக்கு பெருமையையும் சேர்த்துள்ளது. தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்து வரும் துருவ் விக்ரம், அடுத்ததாக ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ எனும் ஆக்‌ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். Mythri Movie Makers தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். சைமா விருது மூலம் கிடைத்துள்ள இந்த புதிய அங்கீகாரத்தைத் தொடர்ந்து, ஆக்‌ஷன் களத்தில் துருவ் விக்ரம் வெளிப்படுத்தவுள்ள அடுத்தகட்ட பரிமாணத்தைக் காண ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Categories
Cinema News

சைமா (SIIMA) விருதுகளில் அசத்திய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – 6 விருதுகளை வென்று குவித்தது!

சைமா (SIIMA) விருதுகளில் அசத்திய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – 6 விருதுகளை வென்று குவித்தது!

தென்னிந்திய திரையுலகின் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாகத் திகழும் சைமா (SIIMA) விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழித்திரைப்படங்களில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது.

அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம். நகைச்சுவை, குடும்ப உணர்வு, மனிதநேயம் என பல்வேறு அம்சங்களை அழகாக இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம், திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அதன் வித்தியாசமான கதை சொல்லும் முறையாலும் பாராட்டுகளைப் பெற்றது.

இப்படத்தின் வெற்றிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், தற்போது சைமா விருதுகளில் விமர்சகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த திரைப்படம், சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணிப் பாடகர் – ஆண் மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகர் என மொத்தம் 6 விருதுகளை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வென்றுள்ளது.

குறிப்பாக, அறிமுக இயக்குநராக களமிறங்கிய அபிஷன் ஜீவிந்திற்கு சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்திருப்பது அவரது முதல் படைப்புக்கு கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாக அமைந்துள்ளது. அதேபோல் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோரின் நடிப்பிற்கும் விமர்சகர்கள் பிரிவில் விருதுகள் கிடைத்துள்ளன. படத்தின் நகைச்சுவை அம்சத்திற்காக யோகிபாபுவிற்கு சிறந்த நகைச்சுவை நடிகர் விருதும், இசைப் பங்களிப்பில் விஜய் யேசுதாஸ் பாடிய பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகர் – ஆண் விருதும் கிடைத்துள்ளன.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதுடன், தற்போது சைமா விருது விழாவிலும் 6 விருதுகளை வென்று ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ தனது வெற்றிப் பயணத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது. இந்த விருதுகள் படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்துள்ள நிலையில், உண்மையான சினிமா ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான தருணமாக அமைந்துள்ளது. ஒரு நல்ல கதை, சிறந்த நடிப்பு, இசை மற்றும் புதிய படைப்புத் திறமை ஆகியவற்றுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

Categories
Cinema News Videos

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த்- ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு – கௌதம் தின்னனூரி- ராஷ்மிகா மந்தானா- அனிரூத் – கூட்டணியில் உருவாகும் ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது

‘இசை மேதை’, ‘பாரத ரத்னா’ எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் திரைப்படம் ‘எம். எஸ்.: எ லெகசி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ படத்தின் பாரம்பரியமான தொடக்க நிகழ்வை மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய திரையுலகின் நட்சத்திர நடிகருமான கமல்ஹாசன் கிளாப் அடித்து, தொடங்கி வைத்தார்.

தேசிய விருதை வென்ற இயக்குநரான கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகும் ‘எம். எஸ். : எ லெகசி ஆன் ஸ்கிரீன்- திரைப்படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியாக ‘நேஷனல் கிரஷ்’ நடிகை ரஷ்மிகா மந்தானா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ்- ராக் லைன் என்டர்டெய்ன்மென்ட் – பென்னி வாசு பிலிம்ஸ் – ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த் – ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் தொடக்க விழா எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இசை அரங்கமாக திகழ்ந்த சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் எம் .எஸ். சுப்புலட்சுமியின் குடும்ப வாரிசுகளும் , அவருடைய நலம் விரும்பிகளும், திரை உலகத்தை சார்ந்த தயாரிப்பாளர்களும், முன்னணி நட்சத்திர நடிகர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலில் ஒலித்த பாடல்களை.. இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து இசைத்து, அவருக்கு இசையஞ்சலியும் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநரான கௌதம் தின்னனூரி பேசுகையில்,
” மரியாதைக்குரிய எம். எஸ். சுப்புலட்சுமி குடும்பத்தினருக்கு முதல் நன்றி. மதுரையில் இசையின் பின்னணியில் பிறந்து வளர்ந்த பத்து வயது சிறிய பெண். இசை துறையில் நுழைந்து தென்னிந்தியாவிற்கு உலகளாவிய பெருமை தேடி தந்தார். எம். எஸ். அம்மாவின் வாழ்க்கையை பார்க்கும்போது பாரத ரத்னா விருது – ஏராளமான தியாகங்கள்- மிகப் பெரிய மேடைகளில் இசை கச்சேரி நிகழ்த்தியது- ஆகியவை அவருடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. ஆனால் இதற்குப் பின்னணியில் அவர் மிகுந்த மனித நேயம் கொண்ட பெண்மணியாக திகழ்ந்தார்.
மகள்- பாடகி- நடிகை- பெண்மணி- கலைஞர்- என பன்முக ஆளுமை திறன் கொண்டவராக இருந்தாலும்.. அடுத்த தலைமுறைக்கான அழுத்தமான செய்திகளும் அவருடைய வாழ்க்கையில் இருக்கிறது

எங்களுடைய படக் குழு- அவர் மீது முழுமையான மரியாதையும், அன்பையும் வைத்திருக்கிறது. எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்குவற்கு கிடைத்த வாய்ப்பிற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு வருகை தந்திருக்கும் அனைவரின் ஆசிகளுடனும், வாழ்த்துகளுடனும் எம் எஸ் அம்மாவின் அர்ப்பணிப்பு- பக்தி- ஆகியவற்றை அவர்களுடைய சுயசரிதையாக தயாராகும் இந்த படைப்பில் நேர்த்தியாக கொண்டு வருவதற்கு உண்மையாக உழைப்போம் ” என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில்,

” எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்பது பலருடைய பல ஆண்டு கனவுகளாகும். அந்தக் கனவை நனவாக்கும் தயாரிப்பாளர்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படங்களை உருவாக்கும் போது அதில் ஏராளமான சவால்கள் இருக்கும். ஏனெனில் ஒருவரது வாழ்க்கை மிகப்பெரிய வெற்றி பெற்ற வாழ்க்கையாக இருக்கும்.
எங்கள் அம்மா, நான் குழந்தையாக இருக்கும்போது குமுதம் பத்திரிக்கைக்காக எம் எஸ் அம்மாவை நேர்காணல் செய்தார். அப்போது அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு அவர்களைப் பற்றி தெரியாது. அவர்களைப் பற்றி நாம் எல்லோருக்கும் தெரிந்தது போல் ‘குறை ஒன்றும் இல்லை’ என்ற பாட்டை அவர்கள் பாடினார்கள் என்ற சில விவரங்கள் மட்டும்தான் எனக்கும் தெரியும்

அதன் பிறகு என்னுடைய நண்பர் ராஜீவ் மேனன் சில பாடல்களை உருவாக்கலாம் என விவாதித்தபோது, நான்- பாம்பே ஜெயஸ்ரீ- கார்த்திக் -ஆகியோர் இணைந்து ஒரு சில பாடல்களை உருவாக்கினோம். அது மறக்க இயலாத அனுபவம். அப்போதுதான் எம் எஸ் அம்மாவின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள தொடங்கினேன்.
இயக்குநர் கௌதம் ஒரு திரைக்கதையை எழுதி அதை எனக்கு வாசிக்க கொடுத்தார். அதை வாசிக்கும் பொழுது தான் எவ்வளவு அழகான வாழ்க்கையை எம் எஸ் அம்மா வாழ்ந்திருக்கிறார் என்பது புரிந்தது. அழகான வாழ்க்கை மட்டுமல்ல… எவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையே.. அதனை மீறி அவர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன். இந்த விழா நடைபெறும் சென்னை மியூசிக் அகாடமி அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான மேடையாக இருந்தது என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு முறையும் தடைகளை உடைத்து அதனை கடந்திருக்கிறார்கள். அதனால் இந்த வாழ்க்கையை சொல்ல வேண்டும் என தோன்றியது. இதற்காக இயக்குநர் கௌதமிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடைய வாழ்க்கையை ஒரு கதையாக நேர்த்தியாக அவர் எழுதி இருந்தார்.

இந்த திரைப்படத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. உதாரணத்திற்கு இப்படத்தின் இயக்குநரை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முன் எத்தனையோ இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களால் செய்ய இயலாத ஒரு விசயத்தை இவர் செய்திருக்கிறார். அது எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்குவது. அந்த சவாலில் அவர் எப்படி வெற்றி பெறப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இந்தத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அவருக்கு இந்த படத்தில் மிகப்பெரிய சவால் இருக்கிறது. அந்த சவாலுக்கு சொந்தக்காரர்கள் ரசிகர்களாகிய நீங்கள் தான். அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு மார்டன் மியூசிக்கை உருவாக்கி ரசிகர்களை வசீகரித்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்தின் இசை மாண்பிணையும் அவர் காப்பாற்ற வேண்டும். அதனால் அவருக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.
அதேபோல் இந்தப் படத்தில் எம் எஸ் அம்மா கதாபாத்திரத்தில் ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்கள். அவர் இதற்கு முன் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருக்கலாம். அவை அனைத்தையும் மறக்கடித்து விட்டு.. அவர் எம் எஸ் அம்மாவாக மாற வேண்டும் என்பது மிகவும் சவாலானது.

இதில் ஒவ்வொருவருக்கும் சவால் இருக்கிறது. இந்த சவாலை கடந்து வரும் துணிச்சலையும் எம்எஸ் அம்மா தான் கொடுப்பார். ஏனெனில் அவர் எதிர்கொண்ட சவால்களை விட நாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறைவுதான்.‌ இதனால் இந்த திரைப்படத்தில் பணியாற்றுவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பேசுகையில்,

” திரையுலகில் இருந்து வருகை தந்திருக்கும் நண்பர்களான சிவக்குமார்- மகேந்திரன்- சமுத்திரக்கனி- தயாரிப்பாளர் கலைபுலி எஸ். தாணு- சுகாசினி – உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்குவதற்காக கிட்டத்தட்ட ஏழு எட்டு ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். தற்போதைய சூழலில் ஒரு நல்ல கதை கிடைத்து, அதை திரைப்படமாக உருவாக்குவது என்பது கடினம். அதிலும் சுயசரிதையை திரைப்படமாக உருவாக்குவது என்பது மிகவும் கடினமானது. கடந்த ஏழு ஆண்டுகளாக பல ஆய்வுகளை செய்து, நான் -அல்லு அரவிந்த்- பென்னி வாசு- என மூவரும் இணைந்து இதற்காக திட்டமிட்டு உழைத்தோம்.

எங்களைப் போல் பலரும் எம்எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்க ஆசைப்பட்டார்கள். ஆனால் எங்கள் மூவரையும் எம். எஸ். அம்மா தான் தேர்வு செய்திருப்பார்கள் என நம்புகிறேன். எங்களை மட்டுமல்ல இயக்குநரையும் எம் எஸ் அம்மா தான் தேர்வு செய்தார்கள். இயக்குநர் கௌதம் தின்னனூரியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது, அவர் வேறு படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதை ஏற்க மறுத்து, இந்தப் படத்தை தான் இயக்குவேன் என இப்படத்தை இயக்க ஒப்புக் கொண்டார்.

எம் எஸ் அம்மாவாக நடிப்பதற்கு நடிகைகளை தேர்வு செய்வது எளிதான விசயம் அல்ல. நிறைய யோசித்த பிறகு ரஷ்மிகாவிடம் கேட்டபோது, அவர் மனதார நடிக்க ஒப்புக்கொண்டார்.இவற்றையெல்லாம் விட இந்தப் படம் உருவாவதற்கு எம் எஸ் அம்மாவின் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் தான் முதன்மையானது.‌ அவர்களுக்கும் எங்கள் நன்றி. ” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசுகையில்,

”இசையரசி- கானக்குயில்- என் பல்வேறு பட்டங்களுடன் இசை உலகில் தனக்கென தனித்துவமான முத்திரையை பதித்த எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக தயாரிக்கும் என்னுடைய இனிய நண்பர்களான தயாரிப்பாளர்கள் மூவருக்கும் என்னுடைய நன்றியும், வாழ்த்தும்.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவருக்கு இது சவாலானது என்றாலும், அவருடைய தாத்தா ரமணனின் ஆசி அவருக்கு உண்டு. திரைப்படத்தின் இசையை அகில உலகம் போற்றும் வகையில் அவர் இசையமைப்பார். அத்தகைய இசை புரட்சியை இந்த திரைப்படம் உருவாக்கும். இந்தப் படம் நாளைய நம்பிக்கை. இந்த படத்தை இயக்கும் இயக்குநருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என நான்- ராஜீவ் மேனன்- சுரேஷ் சக்கரவர்த்தி -ஆகியோர் முயற்சி செய்தோம். இது மிகப்பெரிய படைப்பு. எம் எஸ் அம்மா அம்மையார் ராஷ்டிரபதி பவனில் பாடி பெருமை சேர்த்திருக்கிறார். பாரத ரத்னா விருதையும் பெற்றிருக்கிறார். அவருடைய காலம் இசை உலகின் பொற்காலம்.

அவர் நடிப்பில் வெளியான ‘மீரா’ திரைப்படத்தின் உரிமை சதாசிவம் உள்ளிட்ட அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம் தான் இருக்கிறது. அதை அவர்களிடம் இருந்து வாங்கி பெற்று, பார்த்து, அவர்களின் நடை- உடை மற்றும் உடல் மொழியை கவனிக்க வேண்டும் என படக் குழுவினருக்கு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த திரைப்படம் திரையுலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். காலம் காலமாக இருக்கும் ஒரு புதையல். அனைவருக்கும் வாழ்த்துக்கள் ” என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில்,

”எம் எஸ் அம்மாவின் 110 வது பிறந்த நாளில் அவருடைய சுயசரிதையை தழுவி தயாராகும் திரைப்படத்தின் தொடக்க விழா மேடையில் நிற்பதை பெருமிதமாக கருதுகிறேன்.தயாரிப்பாளர்கள் மூவரும் இணைந்து மிகப்பெரிய வரலாற்று படைப்பை உருவாக்க உள்ளார்கள். இதில் நானும் சிறிய பங்களிப்பை செய்கிறேன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.இயக்குநர் கௌதமுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எம் எஸ் அம்மாவை பற்றி பேசும் பல விசயங்கள் இப்படத்தை பல பாகங்களாக எடுக்கும் அளவிற்கு இருந்தது. அவ்வளவு விசயங்களை அவர் கடந்து வந்திருக்கிறார். அதை கேட்கும்போது எனக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தக் குழுவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தப் படம் மிகப்பெரிய வரலாற்றுப் பதிவாக இருக்கும்” என்றார்.

நடிகர் சிவகுமார் பேசுகையில்,

” உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது. ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த படத்தை தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் தயாரிக்கிறார்கள். நாம் செய்ய வேண்டிய விசயத்தை அவர்கள் செய்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு ஒரு சல்யூட். இது பெருமிதமாகவும் இருக்கிறது.
அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி நான் சிறுவயதில் படித்திருக்கிறேன். அவர்களுடைய வீட்டில் பாட்டு கேட்பதற்கு ரேடியோ கூட இருக்காதாம். அருகிலுள்ள பூங்காவிற்கு சென்று தான் கேட்பார்களாம் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி இருந்த பெண்.. இது போன்ற சபாக்களில் பாடுவதற்கு எப்படியெல்லாம் சதாசிவம் உதவி செய்தார் என்பதையும் படித்திருக்கிறேன். அந்த மகத்தான அம்மாவை பற்றி சுயசரிதை திரைப்படத்தை உருவாக்குகிறார்கள் என்றவுடன் அதற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளார் என்பதை கேள்விப்பட்டவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசுகையில்,

” சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் கமல்ஹாசனுக்கு நன்றி. இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டவுடன் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டதற்கும் நன்றி.இன்று காலை இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தை பார்வையிட்டேன். எம் எஸ் அம்மாவின் மிகப்பெரிய புகைப்படத்தை பார்த்தேன். அப்போது அவருடைய சுயசரிதையை நாங்கள் தயாரிக்கவில்லை. அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்குவதற்கு அவர்தான் எங்களை தேர்வு செய்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன். அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் உணர்வுபூர்வமாக இருந்தது.அதேபோல் அவருடைய கதாபாத்திரத்தில் ரஷ்மிகா நடித்திருப்பது அவருடைய தேர்வு தான்.எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை ஏன் திரைப்படமாக தயாரிக்க வேண்டும்? .. அவர் ஒரு இசைக் கலைஞர். அவர் ஒரு பாடகி. அவர் ஒரு சாதனையாளர்.. ஆகிய அடையாளங்களை எல்லாம் கடந்து அவருடைய வாழ்க்கையில் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதுதான் அவர்களுடைய வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.

அவர் வாழ்க்கையில் பின்பற்றிய கொள்கை- ஒழுக்கம்- நேர்மை- அர்ப்பணிப்பு -அதுவும் அவருடைய பத்தாவது வயதிலிருந்து இருபது வயது வரையிலான வாழ்க்கையில், அதுவும் அவருடைய கடினமான தருணங்களில் தன்னுடைய தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த வாழ்க்கை.. இசை மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும், பற்றும்.. என பல விசயங்கள் இதில் உள்ளது. இதைப் பற்றி நான் மேலும் விரிவாக சொல்ல விரும்பவில்லை. அனைத்தும் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கிறது.

இளம் வயதில் அவர் எவ்வளவு சங்கடங்களையும்… கடினமான தருணங்களையும்… எதிர்கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. இப்படத்தின் இயக்குநர் கௌதம் கடந்த ஓராண்டாக பல இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து, பலரை சந்தித்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி இருக்கிறார். இதற்காக அவருக்கும், அவருடைய குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் கௌதம் அவர் இயக்கிய முதல் திரைப்படத்திற்காக தேசிய விருதினை வென்றவர். அவர் மிகப்பெரிய படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் நாங்கள் எம் எஸ் அம்மாவின் சுயசரிதையை திரைப்படமாக தயாரிக்க உள்ளோம் என்றதும்.. அந்த படத்தில் இருந்து விலகி, இதில் பணியாற்ற மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்.
தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கடந்த ஏழு ஆண்டுகளாக இப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலர் முயற்சி செய்திருந்தாலும் இதில் அவர் நம்பிக்கையுடன் இருந்தார். இறுதியில் அவர் எம் எஸ் அம்மாவின் குடும்ப உறுப்பினர்களிடம் திரைப்படமாக தயாரிக்கும் உரிமையை பெற்றார். இந்த திரைப்படம் உருவாகுவதற்கு எம் எஸ் அம்மாவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் மனமுவந்த ஆதரவை தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் ஏன் இசையமைக்க வேண்டும்? இசைக்கு இந்த கால இளைய தலைமுறையினருக்கும்.. அடுத்த தலைமுறையினருக்கும் அனிருத் ஒரு இசை பாலமாக திகழ்கிறார். இவர்தான் ஜென் ஸீ தலைமுறையையும், கடந்த தலைமுறை இசையால் இணைக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் நாம் ஏராளமான இசைகளை கேட்கிறோம். ஆனால் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் எம் எஸ் அம்மாவின் குரலில் ஒலிக்கும் சுப்ரபாதத்தை கேட்கிறோம். தற்போது சமூக ஊடகங்கள் மூலமாக ஏராளமான இசைகளை… இசை வடிவங்களை… நாம் கேட்கிறோம். இதில் நாம் எதனை ரீ கிரியேட் செய்கிறோம். ஆனால் நாங்கள் எம் எஸ் அம்மாவின் இசையை ரீ கிரியேட் செய்யவில்லை. செய்யவும் முடியாது.

நாங்கள் இசைக் கலைஞர் எம் எஸ் அம்மாவின் சுயசரிதையை திரைப்படமாக உருவாக்குகிறோம். அனிருத் வேறு திரைப்படங்களுக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கலாம். இந்த திரைப்படத்திற்கு அவர் இசையமைக்கிறார் என்றவுடன் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் இசை குடும்பத்தைச் சார்ந்த இசை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் அவர் எந்த மாதிரி இசையை வழங்குவார் என்பதை கேட்பதற்கு காத்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக யாரை அழைக்கலாம்? என்றபோது, எங்களுக்கு கமல்ஹாசனை தவிர வேறு யாரையும் யோசிக்க தோன்றவில்லை. இங்கு வருகை தந்து படத்தின் பாரம்பரியமான படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்ததற்காக அவருக்கு எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த அரங்கத்தில் நம்முடைய கண்களுக்கு புலப்படாமல் அமர்ந்து ரசிக்கும் எம் எஸ் அம்மாவின் ஆசி நம் அனைவருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகை ராஷ்மிகா மந்தானா பேசுகையில்,

”எனக்கு தற்போது என்னுடைய மனதில் ஒரே ஒரு ஃபீலிங்ஸ் தான் இருக்கிறது. அது கிராட்டிடியூட் தான். எம் எஸ் அம்மாவின் சிறப்பு நாளான இன்று நீங்கள் அனைவரும் இங்கு ஒன்று கூடி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு நன்றி. ஹாப்பி பர்த்டே எம் எஸ் அம்மா.இன்று நாங்கள் எம் எஸ் அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். இதை பார்த்து இந்த அரங்கத்தில் எங்கேனும் அமர்ந்து ரசிப்பீர்கள் என்றும்.. உங்களிடத்தில் சிறிய அளவில் புன்னகை இருக்கும் என்றும்.. நம்புகிறோம். அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி.உங்களுடைய குரலில் தனித்துவமான தெய்வீக சக்தி இருக்கிறது. அதை கேட்கும் போதெல்லாம் எனக்கு கடவுள் முன் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு எழும்.அம்மா உங்களுடைய வாழ்க்கையில் சிறிய பகுதியாக இருப்பதற்கு என்னை தேர்வு செய்து இருக்கிறீர்கள். இதற்காக நான் எப்போதும் உங்களுக்கு நன்றி கடன் பட்டவராக இருப்பேன். உங்களுடைய ஆசீர்வாதம் – சதாசிவம் சாரின் ஆசீர்வாதம் – சண்முக வடிவு அம்மாவின் ஆசிர்வாதம்- உங்களுடைய குடும்பம் மற்றும் உங்களுடைய நலம் விரும்பிகளின் ஆசீர்வாதமும், வாழ்த்தும் எங்களுக்கும், எங்கள் குழுவினருக்கும் தேவை. என்னுடைய சிறந்த பங்களிப்பை இந்த படைப்பிற்காக வழங்குவேன் என உறுதி கூறுகிறேன்” என்றார்.

நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்,

” நான் குழந்தை நடிகராக நடிக்கும்போது அந்த வாழ்க்கை அப்படியே தொடருமா? என்றெல்லாம் தெரியாது. வேடிக்கைக்காக என்னுடைய அப்பா சினிமாவிற்கு அனுப்பி வைத்தார். படிக்க வேண்டும் என்று சொன்னார். எனக்கு படிப்பு வரவில்லை. அதன் பிறகு தான் எனக்கு இசை என்றால் என்ன என்பது புரிய தொடங்கியது. படிப்பு வரவில்லை என்றதும்.. எது புரிந்ததோ..! அதை செய்யலாம் என்று எண்ணினேன். அதன் பிறகு இசை புரிந்ததால் அதைத் தொடர்ந்தேன். ஆனால் அதிலும் எனக்கு பிரமாதமாக வரவில்லை. அதன் பிறகு தேடித்தேடி டான்ஸ் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு டான்ஸ் அசிஸ்டன்டாக இருந்து, அசிஸ்டன்ட் டைரக்டர் ஆகி கிளாப் அடித்தேன். அதன் பிறகு இப்போது மீண்டும் கிளாப் அடித்திருக்கிறேன். இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த படத்தின் இயக்குநரை நான் சந்தித்திருக்கிறேன். அவர் எல்லீஸ் ஆர் டங்கன். இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான காட்ஃபாதர். அவர் எண்பத்தியெட்டாவது வயதில் டாக்குமென்டரி படத்தை எடுப்பதற்காக இங்கு வந்தார். அப்போது அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவரிடம் சென்று கையெழுத்தும் வாங்கினேன். ஆனால் அவரிடம் இணைந்து பணியாற்ற முடியவில்லையே..! என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தை நீக்கியதற்காக இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நன்றி.
எம் எஸ் அம்மா – இசையின் ஒன்றிணைக்கும் சக்தி. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் குரல். அவர் தமிழ், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பாடியுள்ளார். தமிழ்- தெலுங்கு- கன்னடம் என எல்லா மொழிகளிலும் அவருடைய உச்சரிப்பு உன்னதமானது. இது இன்றும் என்னைப் போன்றவர்களுக்கு பாடமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் அவர் குரலில் ஒலித்த ‘ரங்க பூர்வ விஹாரா..’ பாடலை கேட்டிருப்பார்கள். சுப்ரபாதத்தை ஆலயங்களில் தினமும் ஒலிக்க விடுகிறார்கள். லலிதா சகஸ்ரநாமம் என பல பாடல்களாக இருக்கட்டும். இவற்றையெல்லாம் விட ‘ரங்கபூர்வ விஹாரா..’ பாடலை கேட்கும் போது மனதிற்கு ஒரு சின்ன சந்தோஷ உணர்வு பரவும். அது எம் எஸ் அம்மாவை விட மூத்த இசைக்கலைஞர் ஒருவரின் கம்போசிங்கில் உருவானது. இருந்தாலும் அந்தப் பாடல் எம் எஸ் அம்மாவின் குரலில் பாடும்போது அந்த பாடலுக்கான கம்போசிங்கிற்கு என்ன வயதோ.. அதை விட.. அதை தன்னுடைய இனிய குரலில் பாடி அதன் வயதை மும்மடங்காக்கி விட்டார்கள்.

நான் அவர்களை ரசிகனாக தான் பார்த்திருக்கிறேன். அவர்களை அருகில் இருந்து பார்ப்பதற்கு அனுமதி இல்லை. எனக்கு அதற்கான அருகதையும் இல்லை.இந்த விழா அரங்கத்திற்கு அருகே சின்னதொரு மியூசிக் அகாடமி இருக்கிறது. அவர்தான் பாலமுரளி கிருஷ்ணா. அவரிடம் தான் நான் இசையை கற்றுக் கொண்டேன். அவர் பலமுறை எம்.எஸ். அம்மாவை பற்றி பேசுவதை கேட்டிருக்கிறேன். அப்போதுதான் எம் எஸ் அம்மாவின் பெருமையை புரிந்து கொள்ள முடிந்தது.பிறகு நான் ‘ஹே ராம்’ படத்தை உருவாக்கும் போது அவர்களை சந்திக்க நேர்ந்தது. சுயநலமாகத்தான் அவர்களை சந்தித்தேன். ‘ஹே ராம்’ படத்தின் பாடலை அவர்தான் பாட வேண்டும் என விரும்பினேன். ஏனெனில் என்னுடைய நாயகனான கரம் சந்த் காந்தியை பற்றிய படத்தில் அவருடைய குரல் இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை. ஏனென்றால் அவருக்கு அந்த தருணத்தில் உடல்நலக்குறைவு இருந்தது. அந்த வீட்டில் இருந்து கிடைத்த பரிந்துரையின் அடிப்படையில் தான் நான் டி கே பட்டம்மாளை சந்தித்தேன். அவர்களுக்கும் உடல் நலம் சரியில்லை. இருப்பினும் அவர்களை சக்கர நாற்காலியில் அமர வைத்து அவருடைய குரலை பதிவு செய்தோம்.நான் எம் எஸ் அம்மா- டி கே பட்டம்மாள்- எம்எல் வசந்தகுமாரி – ஆகிய மூன்று சக்தி வாய்ந்த ஐகானிக் பெண்மணிகளிடம் நெருங்கி பழகியுள்ளேன். இந்த மூவரும் என் தலையை தொட்டு ஆசீர்வதித்திருக்கிறார்கள். அதனால் தான் இவர்கள் கேட்டதும் இந்த நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டேன். இது எனக்கு கிடைத்த கௌரவம்.இந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் குறிப்பாக அனிருத்துக்கும் வாழ்த்துக்கள்.

எப்படி பாலச்சந்தருக்கு ‘அரங்கேற்றம்’ படத்தின் மூலம் திடீர் திருப்பம் ஏற்பட்டதோ…எப்படி இயக்குநர் கே விஸ்வநாத்திற்கு ‘சங்கராபரணம்’ படத்தின் மூலம் திடீர் திருப்பம் ஏற்பட்டதோ…இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அனிருத்தின் திரையிசை பயணத்திலும் மிகப்பெரிய மாற்றமும், திருப்புமுனையும் ஏற்படும். இந்தப் படத்தின் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை அனிருத் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அவர் தற்போது செல்லும் பாதையை நான் நன்கு அறிவேன்.இயக்குநர் கௌதமிற்கு இது மிகப்பெரிய பொறுப்பு. இதற்காக நீங்கள் உயிரை கொடுக்க வேண்டாம். கடுமையாக உழைத்தால் போதும். இந்த படத்தில் தவறு நேராது. ஏனெனில் இப்படத்திற்கான திரைக்கதையை எம்எஸ் அம்மா எழுதிவிட்டு சென்றிருக்கிறார்கள். அதை மெருகேற்றினால் போதும். இயக்குநரின் பணியை எம்எஸ் அம்மா எளிதாக்கி விட்டு சென்றிருக்கிறார்.

எம் எஸ் அம்மா பூஜைக்கு உரியவர்கள் என்பதை விட.. நம் அனைவரின் பிரியத்திற்கு உரியவர்கள். அதை நீங்கள் திரையில் காண்பிக்க வேண்டும். இங்கு அவர்களை வணங்குவதற்கு நிறைய பேர் உள்ளனர். அவர்கள் காட்டிய அன்பு – பாசம்- அதைத்தான் திரையில் காண்பித்திட வேண்டும்.

இந்தியாவின் பான் இந்திய லேடி சூப்பர் ஸ்டார் எம் எஸ் அம்மா தான். அவர்களிடம் ஏராளமான திறமை இருந்தது. அவர்கள் நடிகை மட்டுமல்ல வீணை வாசிப்பார்கள்… நடனம் ஆடுவார்கள்… ‘மீரா’ படத்தின் பாடல்கள் இன்றும் நம் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

மைக்கேல் ஜாக்சனின் படத்தை உருவாக்கும்போது அந்த நடிகருக்கு எவ்வளவு பதட்டம் இருந்திருக்கும். அந்த பதட்டம் ரஷ்மிகாவிற்கும் இருக்கும். அதனை களைவதற்கு அருமையான குழுவும் இருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப

Categories
Cinema News

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஒரு சிறுவன் ஓடுவதுடன் தொடங்கும் டீசர், அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான காட்சிகளுடன் பயணிக்கிறது. ஊரே ‘பத்தா’வைத் தேடும் சூழல் உருவாக, அந்தத் தேடலின் பின்னணி என்ன என்ற கேள்வியை எழுப்பும் வகையில் டீசர் அமைந்துள்ளது. கதை குறித்த முக்கிய தகவல்கள் எதையும் வெளிப்படுத்தாமல், படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

டீசரில் விஜய் சேதுபதியின் பல்வேறு தோற்றங்களும், வித்தியாசமான பரிமாணங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அவரது ஒவ்வொரு தோற்றத்திற்கும் பின்னால் இருக்கும் கதை என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதால், ‘பத்தா’ படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

80s-களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காட்சியமைப்பும் டீசரின் முக்கிய சிறப்பம்சமாக உள்ளது. அந்தக் காலத்தின் தோற்றம், உடைகள், சூழல் மற்றும் சினிமா பாணியை நினைவுபடுத்தும் காட்சிகள் படத்திற்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன. ஏற்கனவே ‘மகளே’ பாடல் மூலம் 80s-களின் இசை உலகை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், டீசரும் அதே காலகட்டத்தின் உணர்வை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.

இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ‘மகளே’ முதல் சிங்கிள் மூலம் மென்மையான மெலடி இசையில் வித்தியாசமான பரிமாணத்தை வெளிப்படுத்தியிருந்த சாய் அப்யங்கரின் இசை, தற்போது டீசரிலும் படத்தின் காலகட்டத்திற்கும் காட்சிகளுக்கும் ஏற்ற வகையில் கவனம் ஈர்க்கிறது. 80s-களின் பின்னணியை மையமாகக் கொண்ட இப்படத்தின் இசை உலகமும் படத்தின் முக்கிய அம்சமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமான டீசர் பாணியில் கதையின் மையத்தை வெளிப்படுத்தாமல், கதாபாத்திரங்கள், காட்சிகள் மற்றும் மர்மத்தை மட்டுமே முன்னிறுத்தியுள்ளது ‘பத்தா’ டீசர். விஜய் சேதுபதியின் தோற்றங்கள், 80s-களின் களப்பின்னணி, இசை மற்றும் காட்சியமைப்பு ஆகியவை இணைந்து, படம் முற்றிலும் புதுவிதமான அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் சாய் அபயங்கர் உள்ளிட்ட திறமையான கலைஞர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பத்தா’, பல்வேறு ஆச்சரியங்களை உள்ளடக்கிய படைப்பாக உருவாகியுள்ளது. முதல் சிங்கிளைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories
Cinema News

சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’ – நண்பர்களின் வெற்றிப் பயணம் தொடர்கிறது!

சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’ – நண்பர்களின் வெற்றிப் பயணம் தொடர்கிறது!

SIIMA 2026 விருது விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்றுள்ள நிலையில், ‘காந்தா’ திரைப்படத்திற்காக நடிகர் சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகர் (தமிழ்) விருதை வென்றுள்ளார்.

நட்பிலும், திரைப்பயணத்திலும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வரும் சசிகுமாரும் சமுத்திரக்கனியும், ஒரே விருது விழாவில் தங்களது படைப்புகளுக்காக அங்கீகாரம் பெற்றிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் தனது இயல்பான மற்றும் யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள சமுத்திரக்கனி, ‘காந்தா’ திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக இந்த விருதை வென்றுள்ளார்.

ஒரு கதாபாத்திரத்தை வெறுமனே நடித்துக் காட்டாமல், அதன் உணர்வுகளையும் தன்மையையும் உள்வாங்கி இயல்பாக வெளிப்படுத்துவது சமுத்திரக்கனியின் தனிச்சிறப்பு. கதாபாத்திரங்களும் மொழிகளும் மாறினாலும், அவரது நடிப்பின் தனித்துவம் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது.

இந்த அங்கீகாரத்தை வழங்கிய SIIMA குழுவினருக்கும், நடுவர் குழுவினருக்கும் சமுத்திரக்கனி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், ‘காந்தா’ படத்தின் இயக்குநர் செல்வமணி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

நடிப்பில் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பயணித்து வரும் சமுத்திரக்கனி, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’, மற்றும் ராஜன் வகையறா , முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா’, பூஜா அபர்ணா கொல்லூரு இயக்கத்தில் அக்ஷய் கண்ணா நடிக்கும் ‘மகாகாளி’, மஞ்சு மனோஜ் உடன் டேவிட் ரெட்டி மற்றும் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘NBK 111’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மேலும், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் அதேபோல், பிரசாந்த் வர்மாவின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகும் ‘மகாகாளி’ திரைப்படத்திலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே, சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் ‘School Bus’ திரைப்படத்தில் சசிகுமார்,கிச்சா சுதீப் , மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்கில் ஏற்கனவே வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழிலும் ‘School Bus’ திரைப்படம் குறித்த பிரம்மாண்டமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Categories
Cinema News

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சியான் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘பவர்ஹவுஸ்’!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சியான் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘பவர்ஹவுஸ்’!

அட்டகாசமான வீடியோவுடன் தலைப்பை அறிவித்த படக்குழு – கமர்ஷியல் ஆக்ஷன் விருந்துக்கு தயாராகும் படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தனது புதிய படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பிட்டுள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என்ற தற்காலிகப் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, ரசிகர்களை கவரும் வகையிலான அட்டகாசமான வீடியோ மூலம் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதற்கு முன்பு விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணியில் வெளியான ‘இருமுகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘பவர்ஹவுஸ்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ, ஒரு அழகான குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் வகையில் தொடங்குகிறது. கல்யாண ஆர்டர் ஒன்றுக்காக சமையல் நடைபெறும் அழகான வீட்டிற்குள் விக்ரம் நுழைவதில் இருந்து காட்சிகள் நகர்கின்றன. தொடர்ந்து அந்த வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். சம்யுக்தா ஹெக்டே, வி.டி.வி. கணேஷ், ஊர்வசி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இடம்பெறும் அந்தப் பகுதி, ஒரு அமைதியான, மகிழ்ச்சியான குடும்பத்தின் சூழலை அழகாக வெளிப்படுத்துகிறது.

ஆனால், வீடியோவின் அடுத்த நொடியிலேயே மொத்த சூழலும் தலைகீழாக மாறுகிறது. குடும்பப் பின்னணியில் இருந்து அதிரடியான ஆக்ஷன் உலகத்திற்குள் காட்சிகள் திடீரென பயணிக்கின்றன. விக்ரம் ஒரு பூட்டிய அறையைத் திறந்து உள்ளே செல்வதும், அங்கு அடிபட்டு கிடக்கும் அடியாட்களுடன் அவர் பேசும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. இதன் மூலம் ‘பவர்ஹவுஸ்’ என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில் விக்ரமின் கதாபாத்திரத்தின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ அமைந்துள்ளது. குடும்ப உணர்வுகளும் கமர்ஷியல் ஆக்ஷனும் இணைந்த இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

‘பவர்ஹவுஸ்’ அனைவரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஐடியாலஜி செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இணைந்த படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி. சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் ISC, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி, சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, நடன அமைப்பாளராக பிருந்தா, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராக தேனி முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சியான் விக்ரமின் அடுத்த படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, குடும்பப் பின்னணியில் தொடங்கி அதிரடியான ஆக்ஷன் காட்சிகளாக மாறும் வீடியோவும், ‘பவர்ஹவுஸ்’ என்ற தலைப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.