Categories
Cinema News

‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

V6 Film Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் இயக்கத்தில், மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

முன்னணி இயக்குநர்களான ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். தனது முதல் படத்திலேயே சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளுக்கான போராட்டத்தையும் அழுத்தமாகப் பேசும் படைப்பை உருவாக்கியுள்ளார்.

தூய்மை பணியாளராக வாழ்வாதாரத்திற்காக போராடும் ஒரு தாய், தனது மகன் செஸ் விளையாட்டில் சாதித்து கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவுக்காக துணை நிற்கிறார். வறுமை மற்றும் சமூகத்தில் நிலவும் பல்வேறு தடைகளைக் கடந்து, தன் மகனின் கனவை நனவாக்க அந்த தாய் எப்படி போராடுகிறார் என்பதே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது. வழக்கமான கமர்ஷியல் பாதையிலிருந்து விலகி, சமூகத்தின் மற்றொரு பக்கத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், சதுரங்க கட்டங்கள் நிறைந்த பின்னணியில் தாயும் மகனும் வெவ்வேறு உணர்வுகளுடன் இடம்பெற்றுள்ளனர். செஸ் காயை கையில் ஏந்தியபடி சிறுவன் நம்பிக்கையுடன் மேல்நோக்கிப் பார்க்க, மறுபுறம் தாய் கவலையும் வலியும் கலந்த பார்வையுடன் காட்சியளிக்கிறார். அவர்களைச் சுற்றிலும் நகரும் செஸ் காய்கள், கீழ்ப்பகுதியில் தாய் தனது மகனுடன் சைக்கிளில் பயணிக்கும் காட்சி என போஸ்டர் முழுவதும் கதையின் போராட்டத்தையும் கனவையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இப்படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அர்ஜுன் ரவி – ஞானசேகர் ஆர்.எஸ். ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார். ரஞ்சீத் சி.கே. படத்தொகுப்பையும், ராகவன் சஞ்சீவி கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

திண்டுக்கல், மதுரை, தடா மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
Cinema News

பிரம்மாண்டமாக நடைபெற்ற “லெனின் பாண்டியன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!

பிரம்மாண்டமாக நடைபெற்ற “லெனின் பாண்டியன்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!

T.G. தியாகராஜன் வழங்க, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், மணல் கொள்ளையை மையமாக வைத்து நம் மண்ணின் வாழ்வியலையும் எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது.

இப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரைப் பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். திரைப் பிரபலங்கள், படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர், “லெனின் பாண்டியன்” படத்தின் கதைக்களம், உருவாக்கம், நடிகர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

விநியோகஸ்தர் சங்கம் சார்பில் அருள்பதி பேசியதாவது:

“சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு இந்தப் படம் இன்னொரு வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறேன். இன்று மேடையில் பேசிய விநியோகஸ்தர் சதீஷ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ‘லெனின் பாண்டியன்’ படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது:

“‘லெனின் பாண்டியன்’ படத்தை கடந்த சில மாதங்களாகவே மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். சத்யஜோதி பிலிம்ஸ் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும். முதலில் தியாகராஜன் சாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக தேசிய விருது பெறவிருக்கும் அவருக்கு வாழ்த்துகள். தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருது பெறுவது சாதாரண விஷயம் கிடையாது. சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக மதிப்புகளைப் பேசும் அந்த நிறுவனத்தின் அடுத்த படமாக ‘லெனின் பாண்டியன்’ வருவது மகிழ்ச்சி. சிவாஜி சார் குடும்பத்தில் இருந்து விக்ரம் பிரபு ‘சிறை’ படத்தில் காவலர் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றது போல, தர்ஷனும் இந்தப் படத்தில் காவலர் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். தர்ஷனுக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு இன்னும் நிறைய நல்ல ஹீரோக்கள் தேவை; முக்கியமான ஹீரோவாக தர்ஷன் கணேசன் வர வேண்டும்.

இளையராஜா சாரின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. பாலச்சந்திரனின் இயக்கமும், டிரெய்லரும் சிறப்பாக இருக்கின்றன. கங்கை அமரன் சார் இந்த வயதிலும் இவ்வளவு எனர்ஜியுடன் நடிப்பதைப் பார்க்கும்போது, அவருக்கு வயதே இல்லை என்று சொல்ல வேண்டும்; இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். ரோஜா மேம் மீண்டும் திரையில் வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அட்டகாசமான கூட்டணியில் உருவாகியுள்ள ‘லெனின் பாண்டியன்’ மிகப்பெரிய வெற்றிப் படமாகவும், சத்யஜோதி பிலிம்ஸுக்கு ஒரு பிளாக்பஸ்டராகவும் அமைய என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

தயாரிப்பாளர் அம்மா சிவா பேசியதாவது:

“தமிழ் சினிமாவில் மிகத் தரமான படங்களைத் தொடர்ந்து தயாரிக்கும் நிறுவனமாக சத்யஜோதி பிலிம்ஸ் இருக்கிறது. தியாகு சாரின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இதற்கு முக்கியக் காரணம். ‘லெனின் பாண்டியன்’ படத்தில் கங்கை அமரன் சாரின் நடிப்பு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. படப்பிடிப்புக்கு முன்பு இருந்தவரை விட, படப்பிடிப்பு தொடங்கிய பிறகு அவரது தோற்றமும் வாழ்க்கை முறையும் மாறி, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். படம் முடிந்த பிறகும் அந்தக் கதாபாத்திரம் நம்முடன் பயணித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட ஆசை.

ரோஜா எனது குடும்ப நண்பர். தன்னுடைய மிகப்பெரிய இமேஜைத் தாண்டி, இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். இயக்குநர் பாலச்சந்திரன் சிறந்த எழுத்தாளராகத் தெரிகிறார்; படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் கைதட்ட வைக்கும் வசனங்கள் இருக்கின்றன. சமூகத்துக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை மிகவும் சுவாரஸ்யமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார். சிவாஜி குடும்பத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் ஒரு பொக்கிஷம் தர்ஷன் கணேசன். அவரது நடிப்பு மிகவும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் இருக்கிறது; சிவாஜி சாரின் ஆரம்பகால நடிப்பை நினைவுபடுத்தும் வகையில் இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. அதேபோல், அவரை சிறந்த முறையில் வழிநடத்தும் ராம்குமார் சார் போன்ற தயாரிப்பாளர் நட்பான மனிதர் இருப்பதால், தர்ஷனின் பயணம் இன்னும் சிறப்பாக அமையும். ‘லெனின் பாண்டியன்’ மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று அனைவரின் சார்பிலும் வாழ்த்துகிறேன்.”

தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் பேசியதாவது:

“தியாகு சாருடன் நான் மிகவும் நெருக்கமாகப் பழகி வருகிறேன். அவர் ஒரு படத்தைத் தேர்வு செய்திருக்கிறார் என்றால், அது நிச்சயம் நல்ல படமாகவும் வெற்றிப் படமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. ‘லெனின் பாண்டியன்’ படத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். தேசிய விருது பெற்றிருக்கும் தியாகு சாருக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செல்வி மேமும் எனக்கு மிகவும் நெருக்கமானவர். தியாகு சாரின் வெற்றிக்குப் பின்னால் அவருடைய பங்களிப்பும் முக்கியமானது. செல்வி மேம், அர்ஜுன், செந்தில் உள்ளிட்ட தயாரிப்புக் குழுவினருக்கும், இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

ஜோதிடர் ஷெல்வீ பேசியதாவது:

“ஜோதிடருக்கு நல்ல நேரம், கெட்ட நேரம் என்று எல்லாம் இருக்கும். ஆனால் என்னைப் பொறுத்தவரை கடந்த 40 ஆண்டுகளாக எப்போதும் அண்ணனாக இருக்கும் தியாகராஜன் சார்தான் எனக்கு எல்லாம். அவர் கொடுத்த வாய்ப்புதான் இந்தப் படம். அண்ணன் சொல்லிவிட்டால் அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. பாலா சார் என்ன சொன்னாரோ அதைச் செய்து, அவர் நிறைய திட்டியதன் மூலமாகத்தான் இன்று நடிகனாக நிற்கிறேன். அதற்காக பாலா சாருக்கு என்னுடைய நன்றி.”

நடிகை அர்ச்சனா பேசியதாவது:

“என் பணிகளில் நான் தொடர்ந்து என்னுடைய முழு முயற்சியையும் கொடுத்து வருகிறேன். அதற்கேற்ற வாய்ப்புகளும் என்னைத் தேடி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் போன்ற ஒரு பழமையான, புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக இயக்குநர் பாலா சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன். தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருப்பதை அறிந்திருக்கிறேன். படத்தை முழுமையாகப் பார்க்க நாங்களும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம். நன்றி.”

இயக்குநர் பி. வாசு பேசியதாவது:

“கங்கை அமரன் எப்போதும் ஜாலியாக இருப்பவர். ஆனால் இந்தப் படத்தின் டிரெய்லரில் அவரை மிகவும் கோபமான, அழுத்தமான கதாபாத்திரத்தில் பார்த்தது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்த தியாகராஜன் சார் மற்றும் இயக்குநர் பாலச்சந்திரனுக்கு வாழ்த்துகள். அமரன் எங்களை காரில் அழைத்துச் சென்று, ‘இவர்கள் இருவரும் நன்றாக ஓடுவார்கள்; இவர்களை வைத்து படம் எடுங்கள், இயக்குநர்களாக அறிமுகப்படுத்துங்கள்’ என்று சொல்லி எங்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கிய மிகச்சிறந்த மனிதர். இளையராஜா சாருடன் அமர்ந்து இசையமைப்பின் போது அவர் சொன்ன மெட்டுக்கு உடனடியாக வரிகள் எழுதுவது, ‘ஆனந்த ராகம்’, ‘கோடை காலக் காற்றே’ போன்ற அற்புதமான பாடல்களை உருவாக்கியது என இன்றும் மறக்க முடியாது.

நானும் அமரனும், தியாகராஜன் சாரும் பல ஆண்டுகளாக குடும்ப நண்பர்களாகப் பழகி வருகிறோம். இத்தனை ஆண்டுகள் நட்பு தொடர்ந்ததற்குக் காரணம் உண்மை மட்டும்தான். ஒருவர் உண்மையாக இருந்தால் வேறு எதுவுமே தேவையில்லை; நட்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்தக் காலத்தில் சினிமாவே ஒரு குடும்பம் போல இருந்தது. இன்றும் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றால் குடும்பத்தில் ஒருவரைப் போலத்தான் பழகுகிறோம். அப்படிப்பட்ட அற்புதமான நட்பிலிருந்து இன்று அமரன் நடிகராக அறிமுகமாகி இருப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய பெயரும் வெற்றியும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.” அனைவருக்கும் வாழ்த்துகள்.

நடிகர் இளவரசு பேசியதாவது:

“லெனின் பாண்டியன்” என்ற தலைப்பைக் கேட்டவுடன், 1990-க்கு முன்பு மதுரையில் பிறந்தவர்களுக்கு ஒரு சைக்கிள், சிவப்புக் கொடி, தீக்கதிர் பத்திரிகை ஆகியவைதான் நினைவுக்கு வரும். அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றவர்களில் இளையராஜா சார், கங்கை அமரன் அண்ணா, பாஸ்கர் சார் உள்ளிட்டோருக்கும் இந்தப் படத்தின் தலைப்புக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. நான் மதுரையில் பிறந்து சினிமாவுக்கு வருவதற்கு ஒரு பாதையை அமைத்துக் கொடுத்தவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டும்.

கங்கை அமரன் அண்ணாவின் பாடல்களும், இளையராஜா சாரின் இசையும் எங்களுடைய தலைமுறைக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. நான் சென்னைக்கு வந்து சினிமாவில் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் மறக்க முடியாதவை. ஒருகட்டத்தில் கங்கை அமரன் ஹீரோவாகவும், அவரது மகன் இயக்குநராகவும் இருக்கும் படத்தில் நான் நடித்திருக்கிறேன். இளையராஜா சார் இசையமைத்த படங்களில் கேமராமேனாகவும், நடிகராகவும் பணியாற்றியிருக்கிறேன். பாரதிராஜா, இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் போன்றவர்கள் எங்களுக்காக உருவாக்கிய அந்தப் பாதைதான் மதுரையில் இருந்து பலரும் சினிமாவுக்கு வருவதற்கு காரணமாக அமைந்தது.

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார் பற்றியும் குறிப்பாகச் சொல்ல வேண்டும். கார்கில் போர் காலத்தில் மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியை எவ்வித ஈகோவும் இல்லாமல், ஒவ்வொருவரையும் அணுகி ஒருங்கிணைத்து நடத்துவது எப்படி என்பதை அவரிடம் அப்போது கற்றுக்கொண்டேன். தயாரிப்பிலும் அவர் காட்டும் நேர்த்தி குறிப்பிடத்தக்கது. ஒரு படத்துக்கான ஒவ்வொரு செலவையும் திட்டமிட்டு பட்ஜெட் போட்டு செயல்படுவது சத்யஜோதி நிறுவனத்தின் சிறப்பு.

“லெனின் பாண்டியன்” படத்தின் இயக்குநர் பாலச்சந்திரனுக்கும், ஒளிப்பதிவாளர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய மரியாதையும் வாழ்த்துகளும். தர்ஷன் கணேசன், சிவாஜி சார் குடும்பத்திலிருந்து அறிமுகமாகியிருப்பது பெருமைக்குரிய விஷயம். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். இளையராஜா சாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இப்படத்தின் வெற்றியில் நாமும் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

இயக்குநர் கண்ணன் பேசியதாவது:

நான் கோ-டைரக்டராக பணியாற்றிய காலத்திலிருந்தே தியாகு சாருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சீரியலிலும் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். அவர் சீரியல், சினிமா என்று பிரித்துப் பார்க்காமல், நல்ல கதை, தரமான மேக்கிங், டிஸிப்ளின் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். சத்யஜோதி பிலிம்ஸ் ஒரு கதையைத் தேர்வு செய்துவிட்டாலே அதில் பாதி வெற்றி உறுதி. கதை அவரை முழுமையாக ஈர்க்க வேண்டும்; அதேபோல் படப்பிடிப்பிலும் நேர்த்தியும் ஒழுங்கும் இருக்க வேண்டும். காலை 7 மணிக்கே முதல் ஷாட் தொடங்க வேண்டும் என்ற அளவுக்கு நேரத்தை அவர் கடைப்பிடிப்பார்.

எனக்கு “ஜெயம் கொண்டான்” படத்தை இயக்கும் வாய்ப்பை தியாகு சார் வழங்கினார். அந்தப் படமும் இன்றளவும் ஒரு தரமான படமாக இருப்பதற்கு அவருடைய பங்களிப்பு முக்கிய காரணம். அதேபோல், “லெனின் பாண்டியன்” படத்தின் மூலம் பாலச்சந்திரனை அறிமுகப்படுத்தியிருப்பதும் அவருடைய மிகப்பெரிய முயற்சி. இப்படிப்பட்ட தயாரிப்பாளரின் நிறுவனத்தில் அறிமுகமாவது இயக்குநருக்கே ஒரு வெற்றிதான்.

தர்ஷனை இந்தப் படத்தில் பார்த்தபோது, பழைய காலத்து நடிகர்களை நினைவுபடுத்தும் அளவுக்கு அவரது தோற்றமும் நடிப்பும் இருக்கிறது. முதல் படத்திலேயே இவ்வளவு வலிமையான கதாபாத்திரம் கிடைத்திருப்பது அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு. அதை அவர் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார். கங்கை அமரன் சாரின் நடிப்பைப் பார்த்து உண்மையிலேயே வியந்தேன். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அற்புதமாக நடித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக அவரை நடிகராக பயன்படுத்தாதது குறித்து நமக்கே ஒரு குறை ஏற்படும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கிறது.

ரோஜா ஒரு தரமான நடிகை. இந்தப் படத்தில் அவருடைய நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது. இளையராஜா சாரின் இசையும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான பலமாக இருக்கும். இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் என அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ள இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இயக்குநர் D.D. பாலச்சந்திரன் பேசியதாவது:

இது என்னுடைய முதல் மேடை. இந்த மேடையில் ஏறுவதற்கு யார் காரணமாக இருந்தார்களோ, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மேடையாக இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன். முதல் நன்றி தியாகராஜன் சாருக்குத்தான். அனைவருக்கும் T.நகர் என்றால் தியாகராய நகர்; எனக்கு என்றென்றைக்கும் அது தியாகராஜன் நகர்தான். சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்தில் தான், “இந்தப் படத்தை நாம் பண்ணலாம்” என்று தியாகராஜன் சார் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பினால்தான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன்.

என்னைப் போன்ற ஒரு புதுமுக இயக்குநரை நம்பி இந்தப் படத்தை வழங்கிய தியாகராஜன் சாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இந்தப் படத்திற்காக நான் எவ்வளவு தயாராக இருந்தேன் என்பதும், படத்தை எந்த அளவுக்கு உருவாக்க வேண்டும் என்ற தெளிவும் அவருக்கு நன்றாகத் தெரியும். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், தியாகராஜன் சாருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் பத்ரி பேசியதாவது:

இயக்குநர் பாலச்சந்திரன் எவ்வளவு தயாராக இருக்கிறார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் திரைப்பட பள்ளியில் படித்திருந்தாலும், தியாகு சாரின் பள்ளி என்பது ஒரு ‘பிராக்டிக்கல் ஸ்கூல்’. அந்தப் பயிற்சியின் மூலம் எந்தத் துறைக்குச் சென்றாலும் நேரடியாகப் படம் தொடங்கும் அளவுக்கும், எந்த ஹீரோவையும் கையாளும் அளவுக்கும் அவர் தயாராக்கி விடுவார். அதே போல பாலச்சந்திரனை தியாகு சார் அந்த அளவுக்கு தயார் செய்து வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை தியாகு சார் ஓகே செய்திருக்கிறார் என்பதே பெரிய விஷயம். அவர் சாதாரணமாக எந்தக் கதையையும் உடனடியாக ஓகே செய்ய மாட்டார். நானும் அந்தக் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் ஸ்கிரிப்ட்டைத் தெரிந்து வைத்திருக்கிறேன்; சில காட்சிகளையும் பார்த்திருக்கிறேன். உண்மையிலேயே இது ஒரு ‘அவுட் ஆஃப் தி வேர்ல்ட்’ படமாகவும், சமூகத்துக்குத் தேவையான வலிமையான படமாகவும் உருவாகியிருக்கிறது.

பாலச்சந்திரனுக்கு என்னுடைய வாழ்த்துகள். “லெனின் பாண்டியன்” மூலம் நாம் பல அற்புதங்களைச் செய்யப் போகிறோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னை இவ்வளவு பேர் முன்னிலையில் நிற்க வைத்து பேசுவதற்கும் இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அண்ணா எப்போதும் நேரத்தை மிகவும் கடைப்பிடிப்பவர். நான் தினமும் சரியாக 7 மணிக்கு எனது ஸ்டூடியோவிற்கு செல்வேன். ஒருநாள் ஐந்து நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. காரில் இருந்து இறங்கும்போது சிவாஜி அண்ணா நின்றுகொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், “ராசா, நீயுமா லேட்டு?” என்று கேட்டார். இத்தனை ஆண்டுகளாக நேரத்துக்கு வந்து கொண்டிருக்கும் என்னை விட சீக்கிரம் வந்து என்னிடமே இப்படிக் கேட்கிறாரே என்று அந்த நிகழ்வை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

சிவாஜி அண்ணா நடிப்பைப் பற்றி நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார். ஒரு நடிகர் புதிதாக அறிமுகமாகும்போது, “யாருப்பா இது?” என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இருக்க வேண்டும். அதன்பிறகு அந்த நடிகரைப் பார்த்து, “யாரு இந்த ஆள்?” என்று வியக்கும் அளவுக்கு அவரது நடிப்பு வளர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய கலைஞர் சிவாஜி கணேசன்.

அவருடைய குடும்பத்திலிருந்து வந்திருக்கும் தர்ஷனின் நடிப்பை இந்தப் படத்தில் பார்த்தேன். சிவாஜி அண்ணாவின் பெயரையும், அந்த நடிப்பு வம்சாவளியையும் காப்பாற்றும் வகையில் தர்ஷன் கணேசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என்னுடைய அன்புத் தம்பி தர்ஷன் கணேசன் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். என் தம்பியை பற்றி சொல்ல வேண்டியதில்லை அவரும் நன்றாக நடித்துள்ளார்.

“லெனின் பாண்டியன்” போன்ற ஒரு மாறுபட்ட கதைக்களம் கொண்ட படத்தை உருவாக்கிய சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் D.D. பாலச்சந்திரனுக்கும், படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.

நடிகர் தர்ஷன் கணேசன் பேசியதாவது:

செப்டம்பர் 12, 2026 என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். “லெனின் பாண்டியன்” படத்தின் விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறு வயது முதலே சிவாஜி சார் படங்களைப் பார்த்தும், அவரது வசனங்களைப் பேசியும், பாடல்களைக் கேட்டும் வளர்ந்தவன் நான். நடிப்பை சீரியஸாக எடுத்துக்கொள்ளும்போது, நம்மால் நன்றாக செய்ய முடியுமா என்ற ஒரு சுய சந்தேகம் இருந்தது. அதிலிருந்து வெளியே வர கடுமையாக பயிற்சி செய்தேன். அந்த நேரத்தில் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்த என் அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி உள்ளிட்ட என் குடும்பத்தினருக்கு முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் நண்பர்கள், இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல நண்பர் வாழ்க்கைத் துணையாகக் கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்று சொல்வார்கள். எனக்கும் அப்படிப்பட்ட ஒருவர் கிடைத்திருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தியாகராஜன் சார், செல்வி மேம், செந்தில் சார், அர்ஜுன் சார் ஆகியோர் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிகுந்த நன்றி. சத்யஜோதி குடும்பத்திற்கும் உங்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

இது எனக்கு அறிமுக விழா மட்டுமல்ல, இயக்குநர் பாலச்சந்திரன் சாருக்கும் அறிமுக விழா. இந்தக் கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று நம்பிக்கை வைத்ததற்கு அவருக்கு நன்றி. கங்கை அமரன் அங்கிள், உங்களுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ரோஜா மேம் உள்ளிட்ட படத்தின் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், எடிட்டர் நாகூரான் சார் என அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் குடும்பத்துடன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அன்பாகப் பயணித்து வரும் அனைவரும் இன்று இங்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. சிவாஜி என்ற பெயரைச் சொன்னாலே நீங்கள் காட்டும் அன்பு எனக்கு மிகப்பெரிய பலம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

தயாரிப்பாளர் T.G. தியாகராஜன் பேசியதாவது:

நான் திரையுலகில் இசையை நேசிக்க ஆரம்பித்ததற்கு முக்கியமான காரணம் ராஜா சார். அவர் ரீரெக்கார்டிங் மற்றும் பாடல் பதிவு செய்யும்போது அருகில் இருந்து ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு காட்சிக்கு அவர் இசையமைக்கும் விதமும், இசையை உருவாக்கும் விதமும் எப்போதும் என்னை வியக்க வைக்கும். அதேபோல், நேரம் தவறாமல் இருப்பதை ராஜா சார் மற்றும் சிவாஜி சார் ஆகிய இருவரிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். அவர்களின் நேர்த்தியும், பணியின் மீதான அர்ப்பணிப்பும் ஒரு தனி பள்ளி. “அது வேற ஒரு ஸ்கூல்; நான் அந்த ஸ்கூலில் இருந்து வந்தவன்” என்று இன்றைய தலைமுறையினரிடம் எப்போதும் சொல்வேன். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடங்கள்.

சத்யஜோதி பிலிம்ஸ் எப்போதும் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து, அவற்றை வணிகரீதியாகவும் வெற்றி பெறச் செய்வதில் கவனம் செலுத்தும் நிறுவனம். “லெனின் பாண்டியன்” வழக்கமான கதையாக இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டிருந்ததால் இப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்தோம். பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ள சத்யஜோதி நிறுவனத்தின் வரிசையில் பாலச்சந்திரனையும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறோம்.

தர்ஷனை முதன்முதலில் பார்த்தபோதே சிவாஜி சாரின் முகத்தோற்றமும், உடல்மொழியும் அவரிடம் இருப்பதை உணர்ந்தேன். இந்தக் கதாபாத்திரத்துக்கு இவர்தான் சரியான தேர்வு என்று முடிவு செய்தோம். கங்கை அமரன் சாரிடம் இதுவரை பார்க்காத ஒரு நடிப்புத் திறமை இருப்பதை இந்தப் படத்தில் கண்டோம். ரோஜா மேடமும் தனது கதாபாத்திரத்தை அற்புதமாகச் செய்திருக்கிறார். தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.

வித்தியாசமான அணுகுமுறையில் உருவாகியுள்ள “லெனின் பாண்டியன்” ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ராஜா சாருக்கும், படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.

கங்கை அமரன் பேசியதாவது:

என் அண்ணனின் ஆசிர்வாதத்தில் “கோழி கூவுது ” என்ற படத்தை இயக்கி இயக்குநர் ஆனேன். அதன்பிறகு சுமார் 18 படங்களை இயக்கியுள்ளேன். சினிமாவில் இசையமைப்பாளராகவும் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இப்படி சினிமாவில் பல்வேறு பணிகளைச் செய்திருந்தாலும், இப்போது நடிகராக மீண்டும் சத்யஜோதி தியாகரி வாய்ப்பு தந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இந்த வாய்ப்பை வழங்கிய தியாகு சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, நடிகராக இன்று அவருக்கு அருகில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க்கையில் இதுபோன்ற புதிய அனுபவங்களும், புதிய வாய்ப்புகளும் கிடைத்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படக்குழுவினருக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும். இயக்குநர் பாலச்சந்திரனுக்கு வாழ்த்துகள்.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது:

இந்தப் படத்தில் என் அப்பாவை பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக அவர் சற்று ஓவராக நடிப்பார். ஆனால் இந்தப் படத்தில் மிகவும் இயல்பாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். அதற்கான முழு கிரெடிட்டும் இயக்குநர் பாலச்சந்திரனுக்குத்தான். அப்பாவிடமிருந்து அவர் விரும்பிய நடிப்பை மிக அழகாகப் பெற்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் என் அப்பா தெரியாமல், அந்தக் கதாபாத்திரம் மட்டுமே நம் கண்முன் தெரியும் அளவுக்கு அவரது நடிப்பு அமைந்திருக்கிறது.

இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம். அந்தச் சம்பவத்தை எந்த வகையிலும் கமர்ஷியலாக்காமல், உண்மைக்கு மிக நெருக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதுதான் இயக்குநரின் விருப்பமாக இருந்திருக்கிறது. நானும் சில இடங்களில் சினிமாவுக்காக மாற்றம் செய்யலாம் என்று கூறினேன். ஆனால் அவர் தனது பார்வையில் மிகவும் தெளிவாக இருந்தார். அவர் நினைத்ததை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார். அதனால் இது மிகவும் அழுத்தமான, மனதைப் பாதிக்கும் படமாக வந்திருக்கிறது. இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் என ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

தர்ஷனைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், நடிப்பு அவரது ரத்தத்திலேயே இருக்கிறது. இந்தப் படத்தில் அவர் ஒரு பெரிய குடும்பத்தின் வாரிசாக அறிமுகமாகிறார் என்ற எண்ணம் நமக்கு வருவதில்லை. ஒரு நடிகராக மட்டுமே அவரைப் பார்க்கிறோம். அவரது சிறிய சிறிய ரியாக்ஷன்கள் முதல் ஒவ்வொரு காட்சியிலும் அவர் வெளிப்படுத்திய நடிப்பு வரை மிகவும் இயல்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. முதல் படத்திலேயே இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. அவருக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

ரோஜா மேம் இந்தப் படத்தில் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்திலும், கதாபாத்திரத்திலும் இருக்கிறார். அவருடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட கதாபாத்திரம் அமைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநரின் பார்வைதான் ஒரு நடிகரை எப்படி திரையில் காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. அந்த வகையில் பாலச்சந்திரன் ரோஜா மேடமை இந்தப் படத்தில் வித்தியாசமாகக் காட்டியிருக்கிறார்.

மேலும், ராஜா சாரின் இசை மீண்டும் தொடர்ந்து ஒலிக்கும் காலகட்டம் உருவாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்பு ஒரு காலத்தில் வாரா வாரம் இளையராஜா சாரின் இசையுடன் படங்கள் வெளியாகும். அந்த பொற்காலம் மீண்டும் தொடங்கியிருப்பது போலத் தோன்றுகிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள்; அதுபோல மீண்டும் அந்த இசைக் காலம் திரும்பி வந்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள்

நாயகி ஸ்ரித்தா ராவ் பேசியதாவது:

“லெனின் பாண்டியன்” படத்தின் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் தியாகராஜன் சார், செந்தில் சார், அர்ஜுன் சார், செல்வி மேம் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக தியாகராஜன் சார் இல்லையென்றால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். மதுரையில் படப்பிடிப்பின்போது எருதுகளின் மணி சத்தத்தைக் கேட்டு பயந்தபோது, என்னை அழைத்துக்கொண்டு சுப்பு சார் ஓடிய வேகத்தைப் பார்த்து அவரை ‘உசைன் போல்ட்’ என்று அழைத்தேன். அன்று தொடங்கிய அவருடைய ஓட்டம் இன்றுவரை தொடர்கிறது.

இயக்குநர் பாலச்சந்திரன் சார் கொடுத்த வசனங்கள் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அவருடைய எழுத்து என்னுடைய ஞாபகத்திறமையை மீண்டும் கொண்டு வந்தது. ரோஜா மேமுடன் பணியாற்றியது மிகப்பெரிய அனுபவம். அவரை நான் நீண்ட காலமாக ரசித்து வந்திருக்கிறேன். அவருக்கு முன்பாக நின்று வசனம் பேசியபோது நிறைய கற்றுக்கொண்டேன். தர்ஷனும் மிகவும் ஆதரவாக இருந்தார். அவரை முதன்முதலில் பார்த்தபோதே சிவாஜி கணேசன் சாரைப் போலவே இருப்பதாக அவரிடம் கூறினேன்.

கங்கை அமரன் சாரை முதலில் படத்தின் கதாபாத்திர தோற்றத்தில்தான் பார்த்தேன். பின்னர் மதுரையில் அவரை மிகவும் இளமையான தோற்றத்தில் பார்த்தபோது ‘நீங்கள் ரொம்ப Gen-Z-ஆ இருக்கிறீர்களே’ என்று சொன்னேன். இந்தப் படத்தில் தனக்கு டூயட் இல்லை என்றும், அடுத்த படத்தில் கண்டிப்பாக டூயட் கேட்பேன் என்றும் அவர் நகைச்சுவையாகக் கூறினார். அவருக்கு அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

ஒளிப்பதிவாளர் எட்வின் சார், எடிட்டர் நாகூரான் சார் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. “லெனின் பாண்டியன்” செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் வந்து இந்தப் படத்தைப் பாருங்கள். நன்றி.

நடிகை ரோஜா பேசியதாவது:

என்னுடைய முதல் படம் ‘செம்பருத்தி’. இப்போது “லெனின் பாண்டியன்” மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறேன். 30, 35 ஆண்டுகள் நீண்ட பயணம் என்று நீங்கள் சொல்லும்போதுதான், இவ்வளவு நீண்ட பயணத்தை நான் இவ்வளவு எளிதாகக் கடந்து வந்திருக்கிறேனா என்று தோன்றுகிறது. எந்த ஒரு காட்ஃபாதரின் பின்புலமும் இல்லாமல் சினிமா மற்றும் அரசியல் என இரண்டு துறைகளிலும் பயணிக்க முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி. என்னுடைய முதல் படத்துக்கு இசையமைத்த இளையராஜா சாரே, என்னுடைய ரீ-என்ட்ரி படத்துக்கும் இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை.

இந்தப் படத்தில் நான் நடிப்பதற்கு முக்கியக் காரணம் சுப்பு. நாங்கள் நீண்ட கால நண்பர்கள். நான் அரசியலுக்குச் சென்ற பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தேன். அப்போது சுப்பு இந்தப் படத்தின் கதையைப் பற்றி கூறினார். இயக்குநர் பாலச்சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்து கதை சொன்னபோது, அவர் கதை சொன்ன விதத்திலேயே நான் முழுப் படத்தையும் பார்த்துவிட்டேன். ஒவ்வொரு கதாபாத்திரம் எப்படி நடிக்க வேண்டும், வசனங்களை எப்படி பேச வேண்டும், உடல்மொழி எப்படி இருக்க வேண்டும் என்பது வரை அவர் விவரித்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தப் படத்தின் மீதான அவருடைய ஆர்வமும், பார்வையும் என்னை மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது.

சிவாஜி சார் குடும்பத்தின் மூன்று தலைமுறையினருடனும் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. சிவாஜி சார், பிரபு சார் ஆகியோருடன் நடித்துள்ள நான், இப்போது தர்ஷனுடனும் நடித்திருக்கிறேன். அந்தக் குடும்பத்தினர் எப்போதும் என்னை ஒரு குடும்பத்தில் ஒருவரைப் போல அன்பாகவும், ஆதரவாகவும் நடத்துவார்கள். அவர்களுடன் பணியாற்றுவதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது; படப்பிடிப்பு தொடங்கியது முதல் முடியும் வரை வீட்டுச் சாப்பாடு கிடைக்கும். கங்கை அமரன் சாருடன் இணைந்து நடித்திருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பல படங்களுக்கு இசையமைத்தும், இயக்கியும் இருக்கும் அவர், இந்தப் படத்தில் அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம். அந்த நிறுவனத்தின் படத்தில் நடிப்பதைப் பெருமையாக நினைக்கிறேன். தியாகராஜன் சார், செல்வி மேம், செந்தில் சார், அர்ஜுன் சார் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். “லெனின் பாண்டியன்” என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். பாரதிராஜா சார் படங்களைப் பார்க்கும்போது நமக்குள் ஏற்படும் உணர்வைப் போல, இந்தப் படத்தைப் பார்த்து வெளியே வரும்போதும் ரசிகர்கள் கதையுடன் உணர்வுபூர்வமாக இணைந்திருப்பார்கள்.

தர்ஷன் கணேசன் குறித்து குறிப்பாகச் சொல்ல வேண்டும். சிவாஜி சார் குடும்பத்திலிருந்து வந்தவர் என்ற எந்தவித கர்வமும் இல்லாமல், முதல் படத்தில் நடிக்கும் ஒரு சாதாரண நடிகரைப் போல மிகவும் எளிமையாகப் பழகினார். சக நடிகர்கள் நடிப்பதைப் பார்த்து அதற்கேற்றபடி ரியாக்ட் செய்வது, அனைவருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, வெயிலில் படக்குழுவினருடன் இருப்பது என அவர் மிகவும் இயல்பாக இருந்தார். முன்பெல்லாம் படப்பிடிப்பு தளத்தில் ஒரு குடும்பம் போன்ற சூழல் இருக்கும். தற்போது அது குறைந்து வரும் நிலையில், “லெனின் பாண்டியன்” படப்பிடிப்பில் மீண்டும் அந்த குடும்ப உணர்வை அனுபவித்தேன். அதனால் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்பதோடு, தர்ஷன் கணேசன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நடிகர் ராம்குமார் பேசியதாவது:

சத்யஜோதி பிலிம்ஸ், தியாகு சார், செந்தில் சார், அர்ஜுன் சார் ஆகியோருக்கு நன்றி. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகிற்கு மிகவும் முக்கியம். தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் சினிமா வாழும். அதேபோல் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரும் இதுபோன்ற தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். இந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர், தான் வாங்கிய தொகையைவிட 20 சதவீதம் அதிகமாகத் தயாரிப்பாளருக்கு வழங்கப் போவதாக மனதாரக் கூறியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நான் படத்தின் ரஷ் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். கங்கை அமரன் சார், தர்ஷன் கணேசன், ஸ்ரித்தா ராவ் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. குறிப்பாக தர்ஷன் கணேசன், ஸ்ரித்தா ராவ் ஆகிய இருவரும் புதுமுகங்களாக மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

அவர்களிடம் தொடர்ந்து இதேபோல் நடிக்க வேண்டும் என்று கூறினேன். அப்படி நல்ல நடிகர்களாகத் தொடர்ந்து நடித்தால், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். படத்தில் அனைவருமே சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் கேப்டன் ஆஃப் தி ஷிப் இயக்குநர் பாலச்சந்திரன் சார். அவருடைய இயக்கம் சிறப்பாக இருக்கிறது. இயக்குநர் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். அனைவரும் வாழ்க, வளமுடன்.

75 வயது முதியவர் ஒருவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பதன் பின்னணி என்ன என்ற கேள்வியை எழுப்பும் வகையில் படத்தின் கதை அமைந்துள்ளது. டிரெய்லர் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், திரையரங்கில் புதிய அனுபவத்தைத் தரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்குகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories
Cinema News

மூக்குத்தி அம்மன் 2 – படத்தின் டீசர் வெளியீடு

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி ( Mookuthi Amman 2: Mahasakthi’ ) படத்தின் டீசர் வெளியீடு.

தீபாவளி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் நயன்தாராவின் நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ டீசர் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் ‘ரைஸ் ஆப் மஹாசக்தி (Rise of Mahasakthi) எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நயன்தாரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், ‘மைனா’ நந்தினி, ‘கருடா’ ராம், அபிநயா, சிங்கம் புலி, வி. ஆர். சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, திரைக்கதை – வசனத்தை வெங்கட் ராகவன் எழுதியிருக்கிறார். மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு குஷ்பூ சுந்தர் – குஷ்மிதா கணேஷ்- இஷான் சக்சேனா- விக்னேஷ் சிவன் – ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி (Rise of Mahasakthi) எனும் பெயரில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும்… ரசிகர்களை வியக்க வைத்திருப்பதுடன் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்பதை உறுதி செய்திருப்பதால்.. இதற்கான வரவேற்பும், டிஜிட்டல் பார்வைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.‌

Categories
Cinema News

Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran find justice on opposite sides in Meghna Gulzar’s Daayra

Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran find justice on opposite sides in Meghna Gulzar’s Daayra.

Produced by Junglee Pictures and Dr. Jayantilal Gada (Pen Studios), Daayra is directed by National Award-winning filmmaker Meghna Gulzar and stars Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran in lead roles

31st August, 2026: The trailer of Daayra is here, offering a gripping first look at a story where truth is never absolute, justice is open to interpretation, and every decision comes with a consequence. Releasing in cinemas on 18th September 2026, this Meghna Gulzar directorial explores crime, justice and punishment through a riveting, layered, emotionally charged narrative, written by Yash Keswani Sima Agarwal and Meghna Gulzar.

Inspired by true events, Daayra unfolds in the aftermath of a crime that grips the nation sparking widespread outrage, while setting a series of events and 2 investigations in motion. As the search for answers deepens, two senior police officers, played by Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran, find themselves navigating the same system through different approaches to duty and justice, on opposing sides of a case that challenges the very idea of right and wrong.

Rooted in realism, the trailer steadily builds tension as new revelations shift the way we see the case. Its sharp, thought-provoking dialogues raise difficult questions on truth and justice. At the same time, Daayra looks beyond the crime itself to explore public perception and the narratives that emerge.

At its heart, Daayra asks questions that have no easy answers: How quickly can a narrative become a verdict? When everyone has an opinion, who gets to decide what justice looks like? And when we are only spectators, what do we choose to believe?

The trailer also offers glimpses of the wider ensemble, with powerful performances by Jitendra Joshi, Kshitee Jog, Kanwaljeet Singh, Sandeep Kulkarni and Trupti Khamkar. Alongside Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran, they bring added emotional depth to a story shaped by conflicting perspectives, difficult choices and the consequences of decisions made.

Actor Kareena Kapoor Khan said, “What I loved about working with Meghna is that she makes you question everything you think you know about a character. There’s so much thought behind every detail, but she never takes away your instinct as an actor. Playing DCP Ajooni Kohli stayed with me… because she pushed me into a space I hadn’t really explored before, and at this stage in my career, that’s always exciting. And then to have Prithviraj opposite me was such a pleasure. He’s an incredibly intelligent actor… very present, very instinctive… and there was an ease to working together that I really enjoyed. This was one of those films where the people you’re surrounded by make the experience that much richer.”

Actor Prithviraj Sukumaran said, “What drew me to DCP Raman Kumar was the complexity beneath his composed exterior and the questions he finds himself grappling with during the investigation. What I admire is how the film maintains that objectivity right till the very end, allowing the audience to form their own perspective. Meghna Gulzar is a filmmaker whose craft I have closely followed and Daayra gave me the opportunity to work with her. It was a rewarding experience and working with Kareena made the journey even more special. I hope the audience connects with the world we have created, a story that is gripping and deeply human”

Director Meghna Gulzar said, “Daayra doesn’t sit comfortably in black and white. It explores the grey and dismantles it. As a filmmaker, that grey space is always challenging, and yet compelling – where characters make choices, live with them, and the audience is left to engage with what unfolds. The main protagonists of Daayra are brought to life with towering performances by Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran. I’m grateful that I got this dynamic combination of actors, along with an exceptional ensemble cast, to explore the delicate lines of law and justice that traverse the story of Daayra. I am very excited to share this world of grey with the audience and welcome them into it!”

Amrita Pandey, CEO, Junglee Pictures, said, “At Junglee Pictures, we have always gravitated towards stories that come from the world around us, particularly those inspired by true events or real experiences. Daayra has been a story we have developed closely with our writers and Meghna, and it is a film that feels deeply relevant to the times we live in, while approaching its subject with the sensitivity it deserves. It is also a powerful crime thriller, driven by conflict, moral dilemmas, difficult choices and two very strong points of view. To have powerhouse performers like Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran bring these characters to life makes it even more exciting. Daayra also marks our first co production with PEN Studios, and we are delighted to be on this journey with them. For our team, it is wonderful to be working with Meghna for the third time after Talvar and Raazi. We have loved making this film and hope audiences connect with it as deeply as we have.”
Dr. Jayantilal Gada, CMD, Pen Studios said, “Cinema can entertain, but it can also ask the right questions. Daayra belongs to the latter, and that is what makes this story particularly special to us. Meghna Gulzar is a filmmaker who has consistently created cinema that makes you think, and her ability to tell a story with depth, sensitivity and restraint is truly remarkable. Bringing together two celebrated actors like Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran adds another compelling dimension to the film, with both actors bringing immense conviction and intensity to their roles. It has also been wonderful to collaborate with a content-first studio like Junglee Pictures, whose vision and commitment to meaningful storytelling align closely with ours. We hope Daayra not only grips audiences but also stays with them, leaving them with questions and conversations long after they leave the theatre.”

With Daayra, Meghna Gulzar brings together a layered story and a strong ensemble to examine the difficult choices that emerge when personal conviction meets the boundaries of law. Distributed by Pen Marudhar, Daayra releases in cinemas on 18th September 2026.

Trailer link – https://bit.ly/DaayraOfficialTrailerOutNow

*‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!*

தேசிய விருது பெற்ற இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டாய்ரா’ திரைப்படத்தில் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜங்லீ பிக்சர்ஸ் மற்றும் டாக்டர் ஜெயந்திலால் கடா (பென் ஸ்டுடியோஸ்) இணைந்து தயாரிக்கும் இப்படம் செப்டம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

‘டாய்ரா’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. உண்மை என்பது எப்போதும் முழுமையானதல்ல, நீதியைப் பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ள முடியும், ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு விளைவு உண்டு போன்ற விஷயங்களை முன்னிறுத்தி கதையின் முதல் பார்வையை இந்த டிரெய்லர் வழங்குகிறது. மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் குற்றம், நீதி மற்றும் தண்டனை ஆகியவற்றை மையமாகக் கொண்டு, பரபரப்பு நிறைந்த உணர்வுப்பூர்வமான கதையைச் சொல்கிறது. யஷ் கேஸ்வானி, சிமா அகர்வால் மற்றும் மேக்னா குல்சார் ஆகியோர் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘டாய்ரா’, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு குற்றச் சம்பவத்துக்குப் பிறகு நடைபெறும் நிகழ்வுகளைச் சுற்றி நகர்கிறது. இந்தச் சம்பவம் பொதுமக்களின் கோபத்தைத் தூண்டுவதுடன், அடுத்தடுத்த விசாரணைகளையும் தொடங்கி வைக்கிறது. விடைகளுக்கான தேடல் தீவிரமடையும்போது, மூத்த காவல்துறை அதிகாரிகளான கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் இருவரும் கடமை மற்றும் நீதியை அணுகும் வெவ்வேறு பார்வைகளுடன் ஒரே அமைப்புக்குள் பயணிக்கின்றனர். சரி, தவறு என்ற அடிப்படை எண்ணத்தையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு வழக்கில், இருவரும் எதிரெதிர் பக்கங்களில் நிற்கின்றனர்.

யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் டிரெய்லர், புதிய தகவல்கள் வெளியாகும்போது வழக்கைப் பற்றிய நமது பார்வையே மாற்றும் வகையில் பதற்றத்தை படிப்படியாக அதிகரிக்கிறது. சிந்திக்கத் தூண்டும் கூர்மையான வசனங்கள், உண்மை மற்றும் நீதி குறித்த கடினமான கேள்விகளை எழுப்புகின்றன. அதே நேரத்தில், குற்றச் சம்பவத்தைத் தாண்டி, மக்களின் பார்வை மற்றும் அதிலிருந்து உருவாகும் பல்வேறு கதைகளையும் ‘டாய்ரா’ ஆராய்கிறது. ‘டாய்ரா’ எளிதில் பதில் சொல்ல முடியாத பல கேள்விகளை எழுப்புகிறது. ஒரு கதை எவ்வளவு வேகமாகத் தீர்ப்பாக மாறிவிடுகிறது, ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்போது, நீதி எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது யார், நாம் வெறும் பார்வையாளர்களாக இருக்கும்போது, எதை நம்புவது என்பதை எவ்வாறு முடிவு செய்கிறோம் என்பதுதான் அவை.

டிரெய்லரில் இப்படத்தின் மற்ற கதாபாத்திரங்களான ஜிதேந்திர ஜோஷி, க்ஷிதி ஜோக், கன்வல்ஜீத் சிங், சந்தீப் குல்கர்னி மற்றும் த்ருப்தி கம்கர் ஆகியோரும் அறிமுகமாகின்றனர். கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரனுடன் இணைந்து, மாறுபட்ட கண்ணோட்டங்கள், கடினமான முடிவுகள் மற்றும் அவற்றின் விளைவுகளால் உருவாகும் கதைக்கு இவர்களின் நடிப்பு கூடுதல் வலு சேர்க்கிறது.

நடிகை கரீனா கபூர் கான் பகிர்ந்து கொண்டதாவது, “மேக்னாவுடன் பணியாற்றியதில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பதாக நினைக்கும் அனைத்தையும் அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். ஒவ்வொரு விஷயத்திற்குப் பின்னாலும் நிறைய சிந்தனை இருக்கிறது. அதே நேரத்தில், ஒரு நடிகராக நம்முடைய இயல்பான உணர்வுகளையும் உள்ளுணர்வையும் அவர் ஒருபோதும் கட்டுப்படுத்துவதில்லை. டிசிபி அஜூனி கோலி கதாபாத்திரத்தில் நடித்த தாக்கம் என்னுள் நீண்ட நாட்கள் இருந்தது.

ஏனென்றால், இதற்கு முன்பு நான் பெரிதாக ஆராயாத ஒரு களத்திற்குள் அந்தக் கதாபாத்திரம் என்னை அழைத்துச் சென்றது. எனது திரைப்பயணத்தின் இந்தக் கட்டத்தில், இதுபோன்ற அனுபவங்கள் உற்சாகமளிக்கின்றன. திறமையான, புத்திசாலித்தனமான நடிகர் பிருத்விராஜூடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சி. நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களால் ஒரு படத்தில் கிடைக்கும் அனுபவம் இன்னும் சிறப்பாக மாறும். அப்படிப்பட்ட படங்களில் ‘டாய்ரா’வும் ஒன்று” என்றார்.

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் கூறியதாவது, “டிசிபி ராமன் குமார் கதாபாத்திரத்தின் வெளிப்புற அமைதிக்குப் பின்னால் இருக்கும் சிக்கலும், விசாரணையின்போது அவர் எதிர்கொள்ளும் கேள்விகளுமே என்னை இந்தக் கதாபாத்திரத்திடம் ஈர்த்தன. படம் இறுதிவரை அதை தக்கவைத்துள்ளது. இயக்குநர் மேக்னா குல்சாரை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன் . ‘டாய்ரா’ படத்தின் மூலம் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது சிறந்த அனுபவம். கரீனாவுடன் இணைந்து பணியாற்றியது இந்தப் பயணத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றியது. நாங்கள் உருவாக்கியுள்ள உலகத்துடன் பார்வையாளர்கள் தங்களை பொருத்தி பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். ‘டாய்ரா’ விறுவிறுப்பாகவும், ஆழமான மனித உணர்வுகள் கொண்ட கதையாகவும் இருக்கும்”.

இயக்குநர் மேக்னா குல்சார் பகிர்ந்து கொண்டதாவது, “‘டாய்ரா’ படம் கருப்பு, வெள்ளை என இரு தெளிவான பக்கங்களில் வசதியாக அமர்ந்துவிடக்கூடிய கதை அல்ல. ஒரு திரைப்பட இயக்குநராக, இந்த கதையின் இன்னொரு பக்கம் எப்போதும் சவாலானதாகவும், அதே நேரத்தில் ஈர்ப்புமிக்கதாகவும் இருக்கிறது. கதாபாத்திரங்கள் முடிவுகளை எடுக்கின்றனர். அந்த முடிவுகளுடன் வாழ்கின்றனர். இறுதியில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பார்வையாளர்கள் தங்களுக்கான புரிதலை உருவாக்கிக்கொள்ளவும் முடியும்.

‘டாய்ரா’வின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் மிகச் சிறப்பான நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளனர். இந்த இரு திறமையான நடிகர்களையும், சிறந்த துணை நடிகர் குழுவினரையும் இணைத்து, இப்படத்தின் கதையில் பயணிக்கும் சட்டம் மற்றும் நீதிக்கு இடையிலான நுட்பமான எல்லைகளை ஆராயும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. இந்த உலகத்தை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அவர்களை இந்த உலகத்திற்குள் வரவேற்கிறேன்!” என்றார்.

ஜங்லீ பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி, அம்ரிதா பாண்டே பகிர்ந்து கொண்டதாவது, “ஜங்லீ பிக்சர்ஸில், நம்மைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து உருவாகும் கதைகளையே நாங்கள் எப்போதும் விரும்பி தேர்வு செய்து வருகிறோம். குறிப்பாக, உண்மைச் சம்பவங்கள் அல்லது உண்மையான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளுக்கு முன்னுரிமை அளிப்போம். நாம் வாழும் காலகட்டத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இந்தப் படம் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மோதல்கள், தார்மீகச் சிக்கல்கள், கடினமான முடிவுகள் மற்றும் இரண்டு வலுவான பார்வைகளை மையமாகக் கொண்ட குற்றவியல் த்ரில்லர்தான் இந்தப் படம். கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் போன்ற திறமையான நடிகர்கள் இந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். பென் ஸ்டுடியோஸூடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் முதல் படம் ‘டாய்ரா’ என்பது மகிழ்ச்சி. ‘தல்வார்’ மற்றும் ‘ராஸி’ படங்களுக்குப் பிறகு மேக்னாவுடன் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறோம். எங்களுக்கு இந்தப் படம் எந்த அளவுக்கு பிடித்திருக்கிறதோ, அதே அளவுக்கு பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

பென் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சிஎம்டி டாக்டர் ஜெயந்திலால் கடா பகிர்ந்து கொண்டதாவது, “சினிமா பார்வையாளர்களை மகிழ்விக்கும் அதே நேரத்தில் ஒரு திரைப்படம் சரியான கேள்விகளையும் எழுப்புவது கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கும். ‘டாய்ரா’ இரண்டாவது வகையைச் சேர்ந்தது. அதுதான் இந்த கதையை எங்களை தேர்ந்தெடுக்க வைத்தது. மேக்னா குல்சார் தொடர்ந்து சிந்திக்க வைக்கும் திரைப்படங்களை இயக்கி வருகிறார். ஆழமான, உணர்வுப்பூர்வமான மற்றும் கட்டுப்பாட்டுடன் ஒரு கதையைச் சொல்லும் அவரது திறமை உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் போன்ற இரு சிறந்த நடிகர்களின் திறமையான நடிப்பு படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது. இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். உள்ளடக்கத்தை முதன்மையாகக் கொண்டு செயல்படும் ஜங்லீ பிக்சர்ஸுடன் இணைந்து பணியாற்றியதும் சிறப்பான அனுபவமாக இருந்தது. அர்த்தமுள்ள கதைகளை உருவாக்குவதில் அவர்களின் பார்வையும் அர்ப்பணிப்பும் எங்களுடன் ஒத்துப்போகின்றன. ‘டாய்ரா’ பார்வையாளர்களை இறுதிவரை கட்டிப்போட்டு, அவர்கள் திரையரங்கிலிருந்து வெளியேறிய பிறகும் அவர்களுடன் தொடர்ந்து பயணித்து, பல கேள்விகளையும் விவாதங்களையும் உருவாக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

‘டாய்ரா’ மூலம் இயக்குநர் மேக்னா குல்சார், தனிப்பட்ட நம்பிக்கைகள் சட்டத்தின் வரம்புகளை எதிர்கொள்ளும்போது உருவாகும் கடினமான முடிவுகளை ஆராயும் வகையில், பல அடுக்குகளைக் கொண்ட கதையையும் வலுவான நடிகர்கள் குழுவையும் ஒன்றிணைத்துள்ளார். பென் மருதர் நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் ‘டாய்ரா’ திரைப்படம், செப்டம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories
Cinema News

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் அழுத்தமான நடிப்பிலும் கவனம் ஈர்த்து வரும் துருவ் விக்ரம், முதல் முறையாக ரசிகர்களை அதிக அளவில் கவரும் வகையிலான கமர்ஷியல் கதைக்களத்தில் நடிக்கவுள்ளார்.

படத்தின் தலைப்புடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துருவ் விக்ரம் இதுவரை இல்லாத வகையில் ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். நேரடி ஆக்‌ஷன் காட்சிகளின் தன்மையுடன் காமிக் புக் பாணியிலான காட்சியமைப்பும் இணைந்திருக்கும் இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

புதிய போஸ்டரில் பிரவுன் நிற உடையில், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் துருவ் விக்ரம் தோன்றுகிறார். அவரது தீவிரமான பார்வையும் ஆக்ரோஷமான உடல்மொழியும் கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக முன்னோக்கி நீட்டியிருக்கும் அவரது கை, போஸ்டருக்கு அதிரடியான தோற்றத்தை கொடுக்கிறது. ‘No Retakes Allowed’ என்ற டேக்லைனும் படத்தின் ஆக்‌ஷன் பின்னணியை உணர்த்துகிறது.

ஃபர்ஸ்ட் லுக் ‘ஜாக்கி’ திரைப்படம் ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருவதையும், துருவ் விக்ரமின் புதிய திரைமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறது.

இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜெயசூர்யா எஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜி.எம். சேகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர் விக்ரம் மோர் வடிவமைக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் – இசை, விக்கி – ஒளிப்பதிவு, ஜெயசூர்யா எஸ் – படத்தொகுப்பு, ஜி.எம். சேகர் –தயாரிப்பு வடிவமைப்பாளர், விக்ரம் மோர் – சண்டைப்பயிற்சி என சிறப்பான தொழில்நுட்பக் குழு பணியாற்றுகிறது. இப்படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் மேற்கொள்கின்றனர். மார்க்கெட்டிங் பணிகளை ஃபர்ஸ்ட் ஷோ நிறுவனம் கவனிக்கிறது.

Mythri Movie Makers’ New Film, Featuring Dhruv Vikram, Directed by Karan Arvind Kumar Is Titled ‘Jackie – No Retakes Allowed’, First Look Poster Promises Stylish Action Extravaganza.

Leading Pan India Production House Mythri Movie Makers continues to expand its footprint beyond Telugu cinema, and the production house is now making its mark in Tamil with an exciting fourth venture, starring Kollywood Star Dhruv Vikram. Produced by Naveen Yerneni and Y Ravi Shankar, the film is directed by Karan Arvind Kumar. Dhruv, who has established himself with performances in diverse and intense roles, is now taking up a commercial subject that is designed to connect with a broader section of the audience.

The makers today unveiled the title along with the film’s first-look poster. Titled ‘Jackie- No retakes allowed’, the first look presents Dhruv Vikram in a larger-than-life mass avatar. The poster blends a gritty live-action treatment with a stylish comic-book-inspired aesthetic, instantly creating curiosity around the character and the world of the stylish action extravaganza.

Dhruv appears in a stylish brown outfit, sporting a distinctive hairstyle and an intense expression. His fierce posture adds to the character’s commanding presence, while his prominently extended fist gives the poster a dynamic, action-packed feel. The tagline “No Retakes Allowed” further amplifies the film’s edgy tone.

The first look succeeds in establishing Jackie as a stylish and action-driven commercial entertainer while offering a peek of Dhruv Vikram’s powerful new screen persona.

The film also boasts an impressive technical crew. National Award-winning composer Santhosh Narayanan is scoring the music, while Viki is handling the cinematography. Jayasuriya is responsible for the editing, with GM Sekhar overseeing production design. Renowned action choreographer Vikram Mor is designing the film’s action sequences.

Cast: Dhruv Vikram

Technical Crew:
Producers: Naveen Yerineni & Ravi Shankar Yalamanchili
Banner: Mythri Movie Makers
Director: Karan Arvind Kumar
Music: Santhosh Narayanan
DOP: Viki
Editing: Jayasuriya S
Production Design: GM Sekhar
Action: Vikram Mor
PRO: Yuvraaj
Marketing : First Show

Categories
Cinema News

“Thavasimuthu Is One of the Most Challenging Characters I Have Portrayed” – Actor Karunaas on ‘Enna Vilai’

“Thavasimuthu Is One of the Most Challenging Characters I Have Portrayed” – Actor Karunaas on ‘Enna Vilai’

Actor Karunaas, who has successfully completed 25 years in the Tamil film industry, continues to explore diverse characters across different genres. After establishing himself through a wide range of memorable performances, the actor now takes on a challenging and emotionally driven role in Enna Vilai, written and directed by National Award-winning filmmaker Sajeev Pazhoor. Karunaas plays Thavasimuthu, a coin redeemer who retrieves coins offered by devotees into the sea near Rameswaram. With the film gearing up for its theatrical release on September 17, the actor shares his experience of being part of a story rooted in an unusual livelihood and a larger struggle for dignity and survival.

Speaking about his role in Enna Vilai, Karunaas says, “Thavasimuthu is a character that demanded a completely different approach from me. He is a man whose life and livelihood are closely connected to the sea, and the circumstances he faces gradually take him into a much larger struggle. What made the character special for me was the emotional journey he goes through. Enna Vilai deals with a very unique premise, but beneath that is a deeply human story about survival, dignity and the right to live with self-respect. I was very happy to take up a role that gave me the opportunity to explore these emotions as an actor.”

He adds, “Sajeev Pazhoor has written the story with great clarity and has brought a strong social relevance to the narrative without compromising on its emotional core. His understanding of the characters and the world they belong to made the experience very interesting for me. Working alongside Nimisha Sajayan and the rest of the cast was also a wonderful experience. I believe Enna Vilai will connect with audiences because it speaks about an ordinary man and an extraordinary situation in a very compelling manner.”

Set against a socially relevant backdrop, Enna Vilai revolves around a man who retrieves coins offered by devotees into the sea near Rameswaram, with his struggle for dignity and survival eventually leading to a significant legal battle.

The film features Karunaas, Nimisha Sajayan, Vijayalakshmi Veeramani, Saasha, Chiththa Darshan, Poornima Bhagyaraj, Y.G. Mahendran, Motta Rajendran, Nizhalgal Ravi, Praveena, Mohan Ram, Chetan Kumar, Kavithalaya Krishnan, Kamalesh, Goli Soda Pandi, J.S. Kavi, Swaminathan, Deepa Shankar, Kavi Nakkalitesand others.

Written and directed by Sajeev Pazhoor, Enna Vilai is produced by Githesh V under the banner of Kalamaya Films. The technical crew comprises Sam C.S. (Music), Alby Antony (Cinematography) and Sreejith Sarang (Editing). Enna Vilai is gearing up for its worldwide theatrical release on September 17, 2026.

*“நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே தவசிமுத்து மிகவும் சவாலானது”…‘என்ன விலை’ படம் குறித்து நடிகர் கருணாஸ்!*

தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நடிகர் கருணாஸ், தொடர்ந்து பல்வேறு கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். பல்வேறு மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ள அவர், தற்போது தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் சவால் நிறைந்த, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக வீசும் நாணயங்களை மீட்டெடுக்கும் நாணய மீட்பாளரான தவசிமுத்து கதாபாத்திரத்தில் இந்த படத்தில் கருணாஸ் நடித்துள்ளார். செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், வித்தியாசமான வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்ட கதையையும், கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கான போராட்டத்தையும் பற்றி பேசுகிறது.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் கருணாஸ் பகிர்ந்து கொண்டுள்ளார், “தவசிமுத்து கதாபாத்திரம் என்னிடம் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை எதிர்பார்த்தது. அவரது வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலுடன் மிகவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் படிப்படியாக அவரை மிகப்பெரிய போராட்டத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. இந்தக் கதாபாத்திரத்தை எனக்குச் சிறப்பானதாக மாற்றியது, அவர் கடந்து செல்லும் உணர்வுப்பூர்வமான பயணம்தான். ‘என்ன விலை’ திரைப்படத்தின் கருவாக வாழ்வாதாரம், கண்ணியம், சுயமரியாதையுடன் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை பேசுகிறது. ஒரு நடிகராக இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில் மிகவும் மகிழ்ச்சி”

மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “சஜீவ் பழூர் மிகவும் தெளிவான பார்வையுடன் இந்தக் கதையை எழுதியுள்ளார். உணர்வுப்பூர்வமான மைய கதையை சமரசம் செய்யாமல், வலுவான சமூக கருத்தையும் இதில் பேசியுள்ளார். கதாபாத்திரங்கள் மற்றும் அவை சார்ந்த உலகத்தைப் பற்றிய அவரது புரிதல், இந்தப் படப்பிடிப்பு அனுபவத்தை எனக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றியது. நிமிஷா சஜயன் மற்றும் படத்தின் மற்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு சாதாரண மனிதன் எதிர்கொள்ளும் அசாதாரணமான சூழ்நிலையை மிகவும் அழுத்தமாகப் பேசுவதால், ‘என்ன விலை’ திரைப்படத்தை நிச்சயம் ரசிகர்கள் தங்களுடன் பொருத்தி பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

சமூக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியில் உருவாகியுள்ள ‘என்ன விலை’, ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டது. கண்ணியத்துடனும் வாழ்வாதாரத்துக்காகவும் அவர் நடத்தும் போராட்டம், இறுதியில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.

இந்தப் படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், ஷாஷா சிவகுமார், விஜயலட்சுமி வீரமணி, சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை கலாமயா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜிதேஷ் வி தயாரித்துள்ளார். படத்தின் இசையை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஆல்பி ஆண்டனி மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஸ்ரீஜித் சாரங் கவனித்துள்ளார்.

சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுடன் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories
Cinema News

Karthik Subbaraj’s ‘Dorothy’ Makes World Premiere at TIFF, Marks First Indian Tamil Feature at Festival in a Decade

Karthik Subbaraj’s ‘Dorothy’ Makes World Premiere at TIFF, Marks First Indian Tamil Feature at Festival in a Decade

Presented by Jio Studios and produced by Sikhya Entertainment, the Tamil feature film received a standing ovation at its World Premiere.

TORONTO — Karthik Subbaraj’s Tamil-language feature Dorothy has made its world premiere at the Toronto International Film Festival (TIFF) 2026, screening in the prestigious Centrepiece section alongside world premieres and acclaimed international features. Presented by Jio Studios and produced by Sikhya Entertainment in association with Dhammam Films, the film marks the first Indian Tamil feature to premiere at TIFF in the past decade, bringing one of contemporary Tamil cinema’s distinctive voices to the global stage. The film received a standing ovation at its World Premiere, marking an especially warm and memorable beginning to its international journey.

The premiere took place at Toronto’s Scotiabank Theatre, with Subbaraj joined by lead actors Keerthy Suresh, Sananth and Rishikanth, alongside producers Guneet Monga Kapoor, Achin Jain.

Karthik Subbaraj, Writer-Director, said: “Dorothy is a story that comes from a place and culture I know intimately, but its questions around friendship, prejudice and human connection are universal. To have its world premiere at TIFF is incredibly special. It gives the film an opportunity to reach audiences across the world while staying true to the story I wanted to tell. And to have Ilaiyaraaja sir’s music accompany that journey makes it even more special.”

Jyoti Deshpande, President, Jio Studios, said: “Cinema has the ability to cross languages when the emotion at its centre is universal. Dorothy is a powerful example of that. Karthik has crafted a story about friendship, identity and human dignity that can resonate far beyond its language. At Jio Studios, we are proud to bring this deeply human story to audiences, and its premiere at TIFF is a significant moment for the film and a proud one for Tamil cinema.”

Guneet Monga Kapoor and Achin Jain, Producers, Sikhya Entertainment, said: “TIFF has been an important part of Sikhya’s journey, and bringing Dorothy here feels particularly special. At its heart, Dorothy is a deeply human story about identity, belonging and the courage to find your way back to yourself. Working with Karthik and Jio Studios has brought together different strengths and perspectives, with the shared belief that a strong Indian story can find an audience anywhere. We’re thrilled to see Dorothy begin its international journey in Toronto.”

Dorothy is also an Ilaiyaraaja musical, with the legendary composer creating the film’s original score and songs. The soundtrack has become a significant part of the film’s pre-release conversation: “Kalyana Virundhu” and “Muthumani” have each crossed 10 million views on YouTube and both have featured among the Top 5 trending music videos on YouTube India. The two songs have helped establish the film’s musical identity well ahead of its theatrical release.

The film’s 18-track OST was also presented as a live musical experience in Chennai, with musicians performing the Dorothy score continuously for around 40 minutes. The Dorothy Concert, held at Image Auditorium, was met with a strong audience response, extending Ilaiyaraaja’s music for the film from the screen into a live concert setting.
Dorothy marks Guneet Monga Kapoor extending a relationship with the festival that spans more than 15 years. Some of her TIFF credits include That Girl in Yellow Boots (2010), Peddlers (2012), Gangs of Wasseypur – Part 1 and Part 2 (2012), The Lunchbox (2013), Monsoon Shootout (2014), Kill (2023), Yellow Bus (2023) and now Dorothy (2026). With Dorothy, Monga Kapoor brings her longstanding TIFF association together with Karthik Subbaraj and Jio Studios, extending Sikhya Entertainment’s international festival journey into Tamil cinema.

Written and directed by Karthik Subbaraj, Dorothy stars Sananth, Rishikanth and Keerthy Suresh in pivotal roles. The film will release worldwide in cinemas on September 25, 2026.

Produced by Jyoti Deshpande, Guneet Monga Kapoor and Achin Jain in association with Dhammam Films, Dorothy is backed by Jio Studios and Sikhya Entertainment.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!

பத்து வருடங்களுக்கு பிறகு TIFF விழாவில் திரையிடப்படும் முதல் இந்தியத் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘டோரதி’ பெற்றது!

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், TIFF 2026 திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது. படம் பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டினர்.

டொராண்டோ: கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள தமிழ் திரைப்படமான ‘டோரதி’, 2026 ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும், சர்வதேச அளவில் பாராட்டுப் பெற்ற படங்களும் இடம்பெறும் பிரபலமான ‘சென்டர்பீஸ்’ பிரிவில் இப்படம் திரையிடப்பட்டது. ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை, தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்படும் முதல் இந்தியத் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘டோரதி’ பெற்றுள்ளது. இதன் மூலம், சமகாலத் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜின் படைப்பு சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது. உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டபோது இப்படத்திற்கு பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டுத் தெரிவித்தனர்.

டொராண்டோவில் உள்ள ஸ்காட்டியாபேங்க் திரையரங்கில் நடைபெற்ற இப்படத்தின் முதல் காட்சியில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயினும் நிகழ்வில் பங்கேற்றனர்.

இது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்து கொண்டதாவது, “நான் நெருக்கமாக அறிந்த ஒரு இடத்திலிருந்தும், கலாச்சாரத்திலிருந்தும் உருவான கதைதான் ‘டோரதி’. ஆனால், இப்படம் எழுப்பும் நட்பு, பாரபட்சம் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான தொடர்பு குறித்த கேள்விகள் உலகளாவிய பார்வையாளர்களுக்கும் பொருந்தும். TIFF திரைப்பட விழாவில் இப்படம் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்படுவது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் சொல்ல விரும்பிய கதையின் உண்மைத்தன்மையை அப்படியே உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பை இது கொடுத்துள்ளது. மேலும், இளையராஜா சாரின் இசை இந்தப் பயணத்துக்குத் துணையாக இருப்பது இந்த திரைப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது”.

ஜியோ ஸ்டுடியோஸ் தலைவர் ஜோதி தேஷ்பாண்டே பகிர்ந்து கொண்டதாவது, “’டோரதி’ திரைப்படத்தில் பேசப்படும் கதைக்களமும் அதன் வலிமையான உணர்வுகளும் மொழி தடைகளை கடந்து உலகளாவிய பார்வையாளர்களை சென்றடையும் தகுதி உடையது. நட்பு, அடையாளம் மற்றும் மனித கண்ணியம் குறித்த கதையை கார்த்திக் உருவாக்கியுள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் மூலம் இந்த கதையைப் பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் பெருமை கொள்கிறோம். TIFF திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுவது தமிழ் சினிமாவிற்கும் முக்கியமான தருணம்” என்றார்.

சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர்கள் குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் பகிர்ந்து கொண்டதாவது, “TIFF திரைப்பட விழாவில் ‘டோரதி’ திரைப்படம் திரையிடப்பட்டது சிக்யா என்டர்டெயின்மென்ட்டின் பயணத்தில் முக்கியமான தருணம். மனிதநேயத்தை மையமாகக் கொண்ட கதைதான் ‘டோரதி’. இந்தப் படத்தில் திறமையானவர்களை கார்த்திக் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஒன்றிணைத்துள்ளது. வலிமையான இந்தியக் கதை எங்கு வேண்டுமானாலும் பார்வையாளர்களைச் சென்றடைய முடியும் என்ற நம்பிக்கையே எங்களை இணைத்துள்ளது. ‘டோரதி’ தனது சர்வதேசப் பயணத்தை டொராண்டோவில் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.

‘டோரதி’ திரைப்படத்திற்கான அசல் பின்னணி இசை மற்றும் பாடல்களை இசையமைப்பாளர் இளையராஜா உருவாக்கியுள்ளார். திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, அதன் இசை குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ‘கல்யாண விருந்து’ மற்றும் ‘முத்துமணி’ ஆகிய இரண்டு பாடல்களும் யூடியூபில் தலா 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளன. மேலும், இவ்விரு பாடல்களும் யூடியூப் இந்தியாவின் டாப் 5 டிரெண்டிங் இசை வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன. திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே, இந்த இரண்டு பாடல்களும் ‘டோரதி’ படத்தின் இசை அடையாளத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.

‘டோரதி’ திரைப்படத்தின் 18 பாடல்கள் மற்றும் இசைக்கோர்வைகள் அடங்கிய முழுமையான இசைத்தொகுப்பும் சென்னையில் நேரடி இசை நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ‘டோரதி கான்சர்ட்’ நிகழ்ச்சியில், இசைக்கலைஞர்கள் சுமார் 40 நிமிடங்கள் தொடர்ந்து ‘டோரதி’ திரைப்படத்தின் இசையை நேரடியாக இசைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம், இளையராஜாவின் இசை திரையிலிருந்து நேரடி இசை நிகழ்ச்சி அரங்கிற்கும் பயணித்தது.

குணீத் மோங்கா கபூர், TIFF திரைப்பட விழாவுடனான தனது 15 ஆண்டுகளுக்கும் மேலான உறவை தொடர்ந்து வருகிறார். அவர் தயாரித்த TIFF திரைப்பட விழாவில் இடம்பெற்ற சில முக்கியமான படங்கள் இதோ, ‘தட் கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ்’ (2010), ‘பெட்லர்ஸ்’ (2012), ‘கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர் – பாகம் 1 மற்றும் பாகம் 2’ (2012), ‘தி லஞ்ச்பாக்ஸ்’ (2013), ‘மான்சூன் ஷூட்அவுட்’ (2014), ‘கில்’ (2023), ‘யெல்லோ பஸ்’ (2023) மற்றும் இப்போது ‘டோரதி’ (2026). ‘டோரதி’ திரைப்படத்தின் மூலம், TIFF திரைப்பட விழாவுடனான குணீத் மோங்கா கபூரின் நீண்டகால உறவு, கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸுடனான புதிய கூட்டணியுடன் இணைகிறது. இதன் மூலம், சிக்யா என்டர்டெயின்மென்ட்டின் சர்வதேசத் திரைப்பட விழாப் பயணம் தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து விரிவடைகிறது.

கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் சனந்த், ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம், தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் இப்படத்தை வழங்குகின்றன.

Categories
Cinema News

Actress Vijayalakshmi Veeramani on ‘Enna Vilai’

“Enna Vilai”

“Getting to Portray a Character with Emotional Depth Is a Boon for an Upcoming Artiste Like Me” – Actress Vijayalakshmi Veeramani on ‘Enna Vilai.

Actress Vijayalakshmi Veeramani has steadily carved a space for herself through promising supporting and character roles across Tamil cinema and television, earning attention with her performances in projects such as Maaveeran, Sembi, Gajaana and the series Office. Continuing to explore diverse characters, the actress now takes on a pivotal and emotionally demanding role as Palamma in Enna Vilai, written and directed by Sajeev Pazhoor. The trailer has already offered a glimpse of the hard-hitting nature of her character, presenting Vijayalakshmi in a strikingly different emotional space. With the film getting released on September 17, the actress shares her experience of playing a pivotal role in this movie.

Actress Vijayalakshmi Veeramani says, “Getting to play an emotional role is a boon for any upcoming artiste like me. I have always dreamt of getting opportunities to portray characters with emotional depth, and I am very happy that Enna Vilai has given me a unique role through which I could explore and express a side of my acting that audiences may not have seen before. Palamma is a character that demanded a lot from me as a performer, and that made the experience even more special. Working with an iconic and well-established artiste like Karunaas was a great experience. Despite his vast and long journey, the way he supported and appreciated my performance was like a big moment for me. Nimisha Sajayan is a solid inspiration for artistes like me and to be a part of her movie is a pure bliss. ”

She adds, “I am truly grateful to the entire team for trusting me with this role. Sajeev sir is a brilliant writer and director who has a wonderful ability to observe even the simplest moments and present them in a riveting and meaningful manner. His clarity about the characters and emotions made it a very enriching experience for me. I feel fortunate to have been part of a film with such a strong and socially relevant core.”

Set against a socially relevant backdrop, Enna Vilai revolves around a man who retrieves coins offered by devotees into the sea near Rameswaram, with his struggle for dignity and survival eventually leading to a significant legal battle.

The film features Karunaas, Nimisha Sajayan, Vijayalakshmi Veeramani, Saasha, Chiththa Darshan, Poornima Bhagyaraj, Y.G. Mahendran, Motta Rajendran, Nizhalgal Ravi, Praveena, Mohan Ram, Chetan Kumar, Kavithalaya Krishnan, Kamalesh, Goli Soda Pandi, J.S. Kavi, Swaminathan, Deepa Shankar, Kavi Nakkalites and others.

Written and directed by Sajeev Pazhoor, Enna Vilai is produced by Githesh V under the banner of Kalamaya Films. The technical crew comprises Sam C.S. (Music), Alby Antony (Cinematography) and Sreejith Sarang (Editing). Enna Vilai is gearing up for its theatrical release on September 17, 2026.

“உணர்வுகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிப்பது என்னைப் போன்ற வளர்ந்து வரும் கலைஞருக்கு கிடைத்த வரம்”… ‘என்ன விலை’ திரைப்படம் குறித்து நடிகை விஜயலட்சுமி வீரமணி!

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சியில் துணை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருபவர் நடிகை விஜயலட்சுமி வீரமணி. ‘மாவீரன்’, ‘செம்பி’, ‘கஜானா’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘ஆபீஸ்’ தொடரிலும் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார்.

தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து வரும் விஜயலட்சுமி வீரமணி, தற்போது சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த, உணர்வுப்பூர்வமான பாலம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரில் விஜயலட்சுமி கதாபாத்திரத்தின் அழுத்தமான தன்மையையும், இதுவரை அவர் ஏற்று நடித்திராத மாறுபட்ட உணர்வுப்பூர்வமான நடிப்பையும் பார்க்க முடிகிறது. செப்டம்பர் 17ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை விஜயலட்சுமி வீரமணி பகிர்ந்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி வீரமணி பகிர்ந்து கொண்டதாவது, “உணர்வுகளுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்னைப் போன்ற வளர்ந்து வரும் நடிகருக்கு கிடைத்த வரம். உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று நான் எப்போதும் கனவு கண்டிருக்கிறேன். ‘என்ன விலை’ படத்தின் மூலம், இதுவரை ரசிகர்கள் பார்த்திராத என்னுடைய நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தக்கூடிய தனித்துவமான கதாபாத்திரம் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

பாலம்மா கதாபாத்திரம் ஒரு நடிகையாக என்னிடம் நிறைய எதிர்பார்த்தது. மிகச் சிறந்த கலைஞரான கருணாஸ் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்துவரும் அவரைப் போன்ற ஒரு கலைஞர், என்னுடைய நடிப்பை ஊக்குவித்து பாராட்டியது எனக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது. நிமிஷா சஜயன் என்னைப் போன்ற கலைஞர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவருடன் நடித்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “இந்தக் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. சஜீவ் சார் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர். மிகவும் எளிமையான தருணங்களைக்கூட கூர்ந்து கவனித்து, அவற்றை சுவாரஸ்யமாகவும் அர்த்தமுள்ளதாகவும் கொடுப்பவர். கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றின் உணர்வுகள் குறித்து அவருக்கு இருந்த தெளிவு, எனக்கும் சிறந்த அனுபவமாக இருந்தது. இவ்வளவு வலுவான கதைக்களத்துடனும், சமூக முக்கியத்துவம் வாய்ந்த மையக்கருத்துடனும் உருவாகியுள்ள திரைப்படத்தில் நடித்திருப்பது அதிர்ஷ்டம்” என்றார்.

சமூக முக்கியத்துவம் வாய்ந்த பின்னணியில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. கண்ணியத்துடனும் வாழ்வாதாரத்திற்காகவும் அவர் மேற்கொள்ளும் போராட்டம், இறுதியில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.

இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன், விஜயலட்சுமி வீரமணி, சாஷா, சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை கலாமயா பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜிதேஷ் வி தயாரித்துள்ளார். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி மற்றும் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமூக முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘என்ன விலை’, செப்டம்பர் 17, அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories
Cinema News Videos

‘Off The Record ‘ Movie Launch

Full Video: ‘Off The Record ‘ Audio Launch | Rahena | Perarasu | Kasthuri | Dhena | Rajkumar | Kottachi

#kollywoodmix

Categories
Cinema News

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்.

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார். இதன் மூலம் துருவ் விக்ரமும் ரமேஷ் வர்மாவும் முதல் முறையாக இணைகின்றனர்.

பென் ஜெயந்திலால் வழங்கும் இப்படத்தை, பென் ஸ்டுடியோஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஆர்.வி. ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கோனேரு சத்யநாராயணா மற்றும் சிரீஷா குரபதி ஆகியோர் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில், உணர்வுப்பூர்வ அம்சங்கள், டிராமா மற்றும் வலுவான கதை சொல்லலும் இடம்பெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. துருவ் விக்ரம் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்ட ஆக்‌ஷன் பின்னணியிலான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, துருவ் விக்ரமின் பிறந்தநாளான செப்டம்பர் 23-ம் தேதி படத்தின் தலைப்பு மற்றும் முழுமையான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் துருவ் விக்ரமின் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை மனதில் வைத்து பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளது.

DV4 / RV7 BIG ANNOUNCEMENT: DHRUV VIKRAM AND RAMESH VARMA COME TOGETHER FOR A HIGH-INTENSITY TAMIL–TELUGU BILINGUAL ACTION FILM

PEN JAYANTILAL PRESENTS

PEN STUDIOS × SRI NEELADRI PRODUCTIONS × RV STUDIOS

Chennai / Hyderabad:

Dhruv Vikram’s next release is set to be a high-intensity Tamil–Telugu bilingual action film, bringing together the dynamic actor and acclaimed filmmaker Ramesh Varma in an exciting new combination.

Presented by Pen Jayanthilal and produced by Koneru Satyanarayana & Sireesha Kurapati under the banners of Pen Studios, Sri Neeladri Productions and RV Studios, the film promises to be an intense and ambitious action entertainer.

Packed with high-octane action, emotion, drama and powerful storytelling, the film is being mounted on a large scale with a strong emphasis on character and cinematic impact.

DHRUV VIKRAM’S NEXT RELEASE

This film marks Dhruv Vikram’s next release, bringing the actor to audiences in a powerful new action avatar.

The project brings together Dhruv Vikram’s screen presence and Ramesh Varma’s distinctive filmmaking vision, creating a fresh and intense cinematic experience.

OFFICIAL ANNOUNCEMENT

The much-awaited project is now officially announced, following a traditional pooja ceremony that marked the beginning of its journey.

With pre-production progressing rapidly, the team is gearing up for an extensive shoot scheduled to commence in October.

SEPTEMBER 23 — THE BIG REVEAL

The most important date in the film’s journey is September 23 — Dhruv Vikram’s birthday.

On this special occasion, the makers will unveil the official title, complete cast and entire crew of the film.

The birthday announcement will introduce audiences to the title, characters, creative team and cinematic world of this high-intensity action saga.

PRODUCTION UNDERWAY

With the principal shoot scheduled to begin in October, the film is currently in active pre-production.

The makers are working towards creating a visually powerful and intense action experience, combining scale, emotion, drama and compelling storytelling for audiences across Tamil and Telugu.

KEY CREDITS

PEN JAYANTILAL PRESENTS

A PEN STUDIOS × SRI NEELADRI PRODUCTIONS × RV STUDIOS PRODUCTION

Produced by
KONERU SATYANARAYANA & SIREESHA KURAPATI

Starring
DHRUV VIKRAM

Directed by
RAMESH VARMA

A HIGH-INTENSITY TAMIL–TELUGU BILINGUAL ACTION FILM

THE JOURNEY BEGINS

SEPTEMBER 23 — DHRUV VIKRAM’S BIRTHDAY

TITLE • COMPLETE CAST • ENTIRE CREW

OCTOBER

THE CAMERAS ROLL

DHRUV VIKRAM × RAMESH VARMA

DV4 × RV7

ONE HERO.

ONE VISION.

ONE EXPLOSIVE ACTION SAGA.

A kickass collaboration of Young Talent & Massive vision – #DhruvVikram x @DirRameshVarma ❤️‍🔥

Prestigious @Neelladriprod proudly announces their next Telugu-Tamil bilingual, #DV4 💥

Shoot Begins This October 🎥

@PenMovies @RVfilmhouse @jayantilalgada @rameemusic
@ProHariBabuS