full screen background image
Search
Friday 14 August 2026
  • :
  • :
Latest Update

இந்தியன் கியூ மாஸ்டர்ஸ் லீக் தொடரில் அரை இறுதிக்கு சென்னை ஸ்ட்ரைகர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது

இந்தியன் கியூ மாஸ்டர்ஸ் லீக் தொடரில் அரை இறுதிக்கு சென்னை ஸ்ட்ரைகர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது…

இந்தியன் க்யூ மாஸ்டர்ஸ் லீக் தொடர் அஹமதாபாத்தில் 19-ஆம் தேதி தொடங்கியது. இம்மாதம் 25-ஆம் தேதிவரை நடைபெற உள்ள இந்த தொடரில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனின் சென்னை ஸ்டிரைக்கர்ஸ் அணி கலந்து கொண்டுள்ளது. இதேபோல் ஹைதராபாத் ஹஸ்ட்லர்ஸ், டெல்லி டான்ஸ், பெங்களூரு பட்டீஸ், குஜராத் கிங்ஸ் என மொத்தம் 5 அணிகள் பங்கேற்றன.

நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை ஸ்ட்ரைகர்ஸ் அணி ஹைதராபாத் ஹஸ்ட்லர்ஸ் அணியை 5-க்கு 0 என்ற புள்ளிக் கணக்கில் முற்றிலும் வீழ்த்தியது . இந்த வெற்றியின் மூலம் சென்னை ஸ்டிரைக்கர்ஸ் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.போட்டியில் வெற்றிபெற்ற சென்னை ஸ்டிரைக்கர்ஸ் அணியின் வீரர்களுக்கு திருமதி பிரேமலதா விஜயகாந்த் பரிசு வழங்கி கௌரவித்தார். இத்தொடரின் அரை இறுதி போட்டி 24ம் தேதியும், இறுதி போட்டி 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *